பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனைப் பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது. இந்த கவனச் சிதறலால் பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் […]

வட்டாரக்‌ கல்வி அலுலவர்‌ பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ வெளியிட்டுள்ள அறிவிப்பில்‌, வட்டாரகக்‌கல்வி அலுவலர்‌ பணியிடத்திற்கான அறிவிப்பு ஆசிரியர்‌ தேர்வு வாரியத்தின்‌ http://www.trb.tn.gov.in என்ற இணையகளத்தில்‌ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன்‌ மூலம்‌ ஜூன்‌ 6-ம்‌ தேதி முதல்‌ ஜூலை 5-ம்‌தேதி மாலை 5 மணி வரையில்‌ விண்ணப்பிக்கலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார கல்வி அலுவலர்‌ பணியில்‌ 33 இடங்கள்‌ […]

நில மோசடி வழக்கில் பீகார் துணை முதலவர்‌ மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நிலத்தை பெற்றுக்‌ கொண்டு ரயில்வே துறையில்‌ பணி வழங்கியதாக குற்றம்சாட்டப்படும்‌ வழக்கில்‌ லாலு பிரசாத்‌ யாதவ்‌, அவரின்‌ மனைவி ராப்ரி தேவி, மகனும்‌ பீகாரின்‌ துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ்‌ ஆகியோர்‌ மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நில மோசடி வழக்கில் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அவரது தந்தையும் முன்னாள் […]

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Junior Technical Associate பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஜுன் […]

இந்த பிரபஞ்சத்தில் ஏலியன்கள் வாழ்கின்றன என்று பலர் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். பூமியில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்களோ, அதே போல் வேற்றுகிரகவாசிகளும் இந்த கிரகத்தில் வாழ்கிறார்கள் என்று கூறப்படுகிறது. வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளதாகவும், மனிதர்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேற்றுகிரகவாசிகள் எங்கு வாழ்கிறார்கள் என்பதை விஞ்ஞானிகள் அறிந்து கொண்டதாகவும் அவர்கள் வாழும் கிரகத்தின் அளவு யுரேனஸைப் போல பெரியதாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது‌. ஆனால் […]

2023 ஜூன் மாதத்தில் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ1,61,497 கோடியாகும். இதில் சிஜிஎஸ்டி எனப்படும் மத்திய அரசு ஜிஎஸ்டி ரூ 31,013 கோடி, மாநில அரசு ஜிஎஸ்டி எனப்படும் எஸ்ஜிஎஸ்டி ரூ38,292 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி( ஐஜிஎஸ்டி) ரூ80,292 கோடி ஆகும். ஐஜிஎஸ்டியில் இருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ36,224 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ30269 கோடியும் அரசு வழங்கியுள்ளது. வழக்கமான தீர்வுக்குப் பிறகு ஜூன் 2023-ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த […]

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி,திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌,செங்கல்பட்டு, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை, விழுப்புரம்‌, கடலூர்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரியில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, […]

குஜராத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த ஆலங்கட்டி மழை மற்றும் மின்னலுடன் கூடிய பருவமழை காரணமாக, ஒன்பது இறப்புகளை ஏற்படுத்தியது என்று மாநில நிவாரண ஆணையர் அலோக் குமார் பாண்டே உறுதிப்படுத்தினார். பதான், கெடா, அகமதாபாத், பாவ்நகர், பனஸ்கந்தா, சோட்டா உதேபூர் மற்றும் பொடாட் மாவட்டங்களில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த இறப்புகள் பெரும்பாலும் மின்னல் மற்றும் கனமழையால் ஏற்பட்டவை. சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் […]

பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் மாதாந்திர அறிக்கையின்படி இந்தியாவில் மட்டும் 65 லட்சம் கணக்குகளைத் தடை செய்துள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் மே 1ம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இரண்டாவது மாதாந்திர அறிக்கையில் பயனர்களிடமிருந்து புகார்கள் வாட்ஸ்அப் மின்னஞ்சல் மற்றும் இந்திய குறைகேட்பு அலுவலருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அந்தப் […]

கட்டுமான பொருட்களின் விலையை செயற்கையாக உயர்த்த வழிவகை செய்ய திமுக திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள சுமார்‌ 2000 கல்குவாரிகள்‌ மற்றும்‌ சுமார்‌3500 கிரஷர்‌ யூனிட்டுகளில்‌ ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்‌பணிபுரிந்து வருகின்றனர்‌. தமிழகத்தின்‌ அத்தனை மாவட்டங்களிலும்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ கட்டுமானப்‌ பணிகள்‌, மெட்ரோ ரயில்‌ பணிகள்‌ மற்றும்‌ அரசுத்‌ திட்டங்களுக்கு, எம்‌.சாண்ட்‌ மற்றும்‌ ஜல்லி கற்கள்‌ வினியோகம்‌, […]