வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை எடிட் செய்யும் வசதியை நிறுவனம் கொண்டு வர உள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது. அந்தவகையில் நிறுவனம் தற்பொழுது மற்றொறு புதிய அப்டேட்களை கொடுப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் படி பயனர்கள் அனுப்பிய மெசேஜ் 15 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ளும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பயனர்கள் மெசேஜ் அனுப்பப்பட்ட 15 நிமிடங்களுக்குள் அதை எடிட் செய்யலாம். முதலில் […]

புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியாக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் செல்கிறார். சிங்கப்பூரில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப் மற்றும் கேபிடா லேண்ட் ஆகிய நிறுவன அதிபர்களை சந்திக்க உள்ளார். இன்று முதல் சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். […]

கணினி “இ-பட்டா” பெறாத பயனாளிகள்‌, கைவசமுள்ள இலவச வீட்டுமனை ஒப்படையின்‌ அசல்‌ ஆணை மற்றும்‌ லே-அவுட்‌ (மனை வரைபடம்‌)நகலுடன்‌ சம்பந்தப்பட்ட தனிவட்டாட்சியர்‌ (ஆதி திராவிட நலன்‌)அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்‌. இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; மாவட்டத்தில்‌ ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர்கள்‌ மூலம்‌ வீட்டுமனைப்பட்டா ஆணை காகித வடிவில்‌ வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேற்படி காகிதப்பட்டாக்களுக்கு கணினி “இ-பட்டா” வழங்கும்‌ பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, […]

அரசு பேருந்துகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற போவதாக இந்திய ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமை அறிவித்தது, இருப்பினும் நாணயத் தாள்கள் செப்டம்பர் 30 வரை செல்லாது என்று வங்கி தெரிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது, இந்த கரன்சி […]

தமிழகத்தில் வெயிலின்‌ தாக்கம்‌ அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன்‌ 1-ம்‌ தேதி திறக்கப்படும்‌என பள்ளிக்கல்வித்‌ துறை சார்பில்‌ ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வெயிலின்‌ தாக்கம்‌ அதிகமாக உள்ள நிலையில்‌ பள்ளிகள்‌ திறப்பது தாமதமாகும் என தகவல்கள்‌ வெளியானது. இது குறித்து செய்தியாளர்கள்‌ எழுப்பிய கேள்விக்கு பதில்‌ அளித்த அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ தமிழ்நாடு முழுவதும்‌ ஜூன்‌ 1-ம்‌ தேதி 6-ம்‌ வகுப்பு […]

10 மற்றும் 11-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் மே 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுத்தேர்வில்‌ தேர்ச்சி பெற தவறிய 10, 11-ம்‌ வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு ஜூன்‌ 27-ம்‌ தேதி முதல்‌ நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்கு இன்று முதல்‌ 27-ம்‌ தேதி வரை பள்ளி மாணவர்கள்‌ தாங்கள் படித்த பள்ளியின்‌ மூலமாகவும்‌, தனித்தேர்வர்கள்‌ அரசு தேர்வுத்துறை […]

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Executive, Junior Executive பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 535 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு 10-ம் வகுப்பு, டிப்ளமோ, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு DFCCIL-ன் நிபந்தனைகளின் படி ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் […]

பெங்களூருவில் சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் மூழ்கி இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு கேஆர் சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்க பாதையில் மூழ்கி உயிரிழந்த 23 வயது பெண் பானுரேகாவின் குடும்பத்தினரை கர்நாடக முதல்வர் சித்தராமையா சந்தித்து ஆறுதல் கூறினார். பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் தேங்கியது. மழையால் […]

வருங்கால வைப்பு நிதி அமைப்பு மார்ச் மாதத்தில் மட்டும் 13.40 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. 2023 மே 20-ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தற்காலிக ஊதியத் தரவின்படி, 2023 மார்ச் மாதத்தில் 13.40 லட்சம் நிகர உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. மொத்த நிதியாண்டில் 1.39 கோடி உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். முந்தைய நிதியாண்டான 2021-22 உடன் ஒப்பிடும்போது 13.22% உறுப்பினர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதேபோல மார்ச் […]