திருவள்ளூர் மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் இரும்பு உற்பத்தி ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர், தீ அருகிலுள்ள பிற கட்டமைப்புகளுக்கும் பரவி வருவதால் உயிரிழப்பு ஏற்படும் அச்சம் நிலவுகிறது. செய்தி நிறுவனமான PTI பகிர்ந்துள்ள ஒரு வீடியோவில், தொழிற்சாலையில் இருந்து அடர்த்தியான கரும்புகையுடன் தீப்பிழம்புகள் வெளியேறுவதைக் காட்டுகிறது. தொழிற்சாலையில் உள்ள பெரும்பாலான பொருட்கள் […]
ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போரின் மத்தியில் , இரு நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் ஒரு முக்கியமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இஸ்தான்புல்லில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக, ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 1,000 வீரர்களின் உடல்களை உக்ரைன் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, உக்ரைன் 19 ரஷ்ய வீரர்களின் உடல்களை திருப்பி அனுப்பியுள்ளது. இந்த பரிமாற்றம் குறித்து ரஷ்ய சமாதான பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி உறுதிப்படுத்தினார். எங்கள் […]
பல வகையான உயிரினங்கள் நம்முடன் நம் வீடுகளிலும் வாழ்கின்றன. பல்லிகள் அவற்றில் ஒன்று. இவை நமக்கு அதிக சிரமத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எரிச்சலூட்டும். மேலும், சில சந்தர்ப்பங்களில் அவை விஷமாகவும் இருக்கின்றன. அதனால்தான் இவற்றை விரட்ட பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சேமிப்பு அறை, படுக்கையறை அல்லது குளியலறை என எதுவாக இருந்தாலும் சரி பல்லிகள் எங்கும் வாழ்கின்றன. இருப்பினும், அவற்றைப் விரட்ட சில எளிய, இயற்கை குறிப்புகள் உள்ளன. பல்லிகளை விரட்ட […]
சிந்து சமவெளி நாகரிகம் உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும் என்ற வரலாற்று உண்மையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் உலகின் மிகப் பழமையான நாடுகள் என்று அறியப்படும் நாடுகள் எது என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் “உலகின் மிகப் பழமையான நாடுகள்” குறித்து பேசும்போது, அது வெறும் இன்றைய காலத்தின் தேசிய நாடுகள் பற்றி மட்டும் அல்ல, மாறாக அது, பண்டைய நாகரிகங்கள் மற்றும் பாரம்பரியங்கள், அவை தொடர்ச்சியாகக் […]
கடந்த ஜூன் 4ஆம் தேதி RCB கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றி அணிவகுப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் நிர்வாகமும், விராட் கோலியின் வீடியோ அழைப்பே முக்கிய காரணம் என்று கர்நாடக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கைப்பற்றியது. ஐபிஎல் வரலாற்றில் RCB அணி கைப்பற்றும் முதல் பட்டம் […]
புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் சரி செய்து விடலாம். ஆனால் நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டால் அது உயிருக்கே கூட உலை வைக்கும் அளவிற்கு கொடிய நோயாகும். நாம் தினமும் பயன்படுத்தும் சில பொருட்கள் கேன்சரை உண்டாக்கும் அல்லது கேன்சர் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த பொருட்களில் உள்ள […]
ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என்றும், இது இறைவனுக்கு உரிய மாதம் என்றும் கூறப்படுகிறது. இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறை வழிபாடு செய்வதில் கவனம் சிதறலாம் அல்லது தடை படலாம் என்பதால் தான் திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை. ஒவ்வொரு தமிழ் மாதத்துக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. தமிழ் மாதத்திற்கு ஏற்றவாறு மக்களின் வாழ்க்கை முறையோடு இணைந்திருப்பது போல பல்வேறு […]
இங்கிலாந்தில் வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைத்து பிரதமர் ஜெய்ர் ஸ்டார்மர் அரசு உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி நடைபெறுகிறது.கடந்த ஆண்டு இந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் முன், வாக்களிக்கும் வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் வாக்களிப்பதற்கான வயதை 16 ஆக குறைத்துள்ளது அந்நாட்டு அரசு. இதன்மூலம் ஜனநாயகத்தில் […]
தூய்மையான நகரங்களின் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். உலகின் தூய்மையான நகரங்கள் பட்டியலுக்கான ஆய்வு 9-வது ஆண்டாக இந்த ஆண்டும் நடந்தது. இதன்படி, 2024-25 ஆண்டுக்கான, ஸ்வச் சர்வேக்சன் எனப்படும் தூய்மையைக் கணக்கெடுக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதன் அடிப்படையில், நடப்பு ஆண்டில் மொத்தம் 78 விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் […]
ஆடி மாதம் என்றாலே அது அம்மன் மாதம். இந்த மாதத்தின் முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரை விசேஷங்களுக்கு குறைவிருக்காது. இருந்தாலும், ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் ஆகிய இரண்டும் மிகவும் விசேஷம். சிவனை விட அம்பாளுக்கு அதிக சக்தி உள்ள மாதமாக ஆடி மாதம் நம்பப்படுகிறது. சக்திக்குள் சிவன் ஐக்கியமாகும் மாதம் என்பதாக ஆடி மாதம் குறிப்பிடப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அம்மனை வழிபடுவது […]

