அகமதாபாத்தில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் 2025 தொடரின் பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. வரும் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில், 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியின் முதல் நாளில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று […]
பத்து நாள் கணேஷோத்ஸவம் ஆகஸ்ட் 27 புதன்கிழமை தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி அனந்த சதுர்தசி வரை தொடரும். விநாயகர் சதுர்த்தியின் முதல் நாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பஞ்சாங்கத்தின்படி, இது ஒவ்வொரு ஆண்டும் பாத்ரபாத மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் சதுர்த்தி திதியில் தொடங்கி அனந்த சதுர்தசி வரை கொண்டாடப்படுகிறது. […]
இந்தியாவின் முன்னணி ஃபான்டஸி விளையாட்டு தளமான Dream11-இன் தாய் நிறுவனமான Dream Sports, ஆன்லைன் கேமிங் தடையை தொடர்ந்து, புதிய தனிப்பட்ட நிதி செயலியான Dream Moneyயை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஃபான்டஸி விளையாட்டு தளமான Dream11-இன் தாய் நிறுவனமான Dream Sports, புதிய தனிப்பட்ட நிதி செயலி ஒன்றை Dream Money என்ற பெயரில் சோதனை செய்து வருகிறது என Moneycontrol வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. […]
காசா போர் மேலும் மேலும் பயங்கரமாகி வருகிறது. காசாவின் தெற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25, 2025) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தின. சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவற்றின் பத்திரிகையாளர்கள் […]
அன்போடு “கேப்டன்” என அழைக்கப்படும் இவர், தமிழ் திரைப்படத் துறையில் ஒரு உயர்ந்த நினைவில் நிலைக்கும் இடத்தை பெற்றவர். விஜயகாந்த் பல்வேறு வகை திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆக்ஷன், சமூகத் தழுவல், உணர்வுப்பூர்வமான கதைகள் என பலவகைமை கொண்ட ஒரு சிறப்பான திரைப்பயணம் அவருக்கு உள்ளது. அதே நேரத்தில், அவரது வாழ்க்கையில் திரைப்பயணத்தைத் தொடரும் அரசியல் பாதையும் இருந்தது. திரைப்படங்களில் தேசிய உணர்வுடன் கூடிய கதாபாத்திரங்களில் நடித்ததினால், அவருக்கு மக்கள் “புரட்சி […]
அமேசான், பிளிப்கார்ட், மின்த்ரா போன்ற மிகப் பெரிய இ-காமர்ஸ் தளங்களின் வளர்ச்சியும், அதே நேரத்தில் quick-காமர்ஸ் தளங்கள் (உதா: Blinkit, Zepto) ஆகியவற்றின் வருகையும் காரணமாக, இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம், மின்னணு சாதனங்கள், ஆடைகள், மளிகை மற்றும் வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள் ஆகிய அனைத்தையும் மக்கள் வீட்டுக்கே நேரடியாக வாங்கும் வசதியை பெற்றுள்ளனர். இதன் விளைவாக, டெலிவரி பாய்கள் மீதான தேவை பெரிதும் […]
டெல்லியில் மாதவிடாய் தள்ளிப்போகும் ஹார்மோன் மாத்திரையை எடுத்துக்கொண்ட 18 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் 18 வயதுடைய இளம்பெண், மாதவிடாய் தள்ளிப்போகும் ஹார்மோன் மாத்திரைகளை உட்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு deep vein thrombosis என்ற ஆழமான நரம்பு ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவர் மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரைத்தார், ஆனால் அவரது தந்தை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், அந்த சிறுமி […]
நாடு முழுதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், முதியோர், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நாய்க்கடி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகளும் தொடர்கின்றன. அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து கடந்த மாதம் 28ல் விசாரித்தது. தொடர்ந்து கடந்த 11ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற […]
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு போட்டியில் இந்தியா 24 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 29 குறிப்பிடத்தக்க AI மாதிரிகள் உள்ளன, மேலும் AI தொடர்பான முதலீடுகள் மொத்தம் 7.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றன. சுவாரஸ்யமாக, புதிய ஆய்வொன்றின் படி, வேலைத்தளங்களில் AI பயன்பாடு இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 92% ஊழியர்கள் தங்கள் தினசரி பணிகளில் AI-ஐ பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Linkee […]
சாதாரணமாக கோதுமை மாவு, கடலை மாவு, மைதா, அரிசி மாவு போன்ற மாவுகளை தான் பயன்படுத்துவோம். ஆனால் இதைத் தவிர்த்து பயன்படுத்தக்கூடிய பல மாவு வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் மாவு. தேங்காய் பால் எடுத்த பின்னர் இருக்கும் தேங்காயை உலர வைத்து மென்மையாக அரைத்து பயன்படுத்துவது. பேக்கிங் தொடங்கி பல சமையல் ரெசிபிகளில் இந்த தேங்காய் மாவு பயன்படுத்தலாம். சுவையுடன் உணவுக்கு நல்ல நறுமணம் கொடுக்கும். […]

