ராணுவ தளபதியை விமர்சித்தது தொடர்பான ஆடியோ லீக்கான நிலையில், தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அந்நாட்டு அரசமைப்பு சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில் தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன்சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவத் தளபதியை ஷினவத்ரா விமர்சித்துள்ளார். இதுதொடர்பான உரையாடல்கள் கசிந்து நாட்டில் சர்ச்சையை […]

ஊசி, மாத்திரையைக் கண்டால் பயப்படாத குழந்தைகளே இருக்க முடியாது. குறும்பு செய்யும் குழந்தைகளிடம், டாக்டரிடம் போய் ஊசி போட்டுவிடுவேன் என்று மிரட்டும் பெரியவர்களும் இருக்கிறார்கள். நம் உடல் நலத்தைப் பாதுகாக்கவே மருத்துவர் ஊசியையும் மாத்திரையையும் அளிக்கிறார் என்பதை அறியும்போது, மருத்துவர்களின் மீது மரியாதை வந்துவிடும். மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். கரோனா போன்ற கொள்ளை நோய் […]

டிஜிட்டல் இணைப்புத் துறையில் இந்தியா இப்போது ஒரு பெரிய படியை எடுக்கப் போகிறது. உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோள் இணைய சேவை வழங்குநரான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க், விரைவில் நாட்டில் தனது சேவைகளைத் தொடங்கக்கூடும். IN-SPACe (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம்) தலைவர் டாக்டர் பவன் கோயங்கா கூறுகையில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பாலான ஒப்புதல்கள் மற்றும் உரிமச் செயல்முறைகள் முடிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். கடைசி சில […]

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் முதல் குவாலிபயர் போட்டியில் சேப்பாக்கம் கில்லீஸ் – திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதவுள்ளன. தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியின் 9வது சீசன், தற்போது லீக் போட்டிகள் முடிவடைந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ஒவ்வொரு அணியும் தலா 7 லீக் ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ளன. சேப்பாக்கம் கில்லீஸ், தான் விளையாடிய 7 ஆட்டங்களிலும் வென்று 14 […]

இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் சாலை அடைப்புகள் மற்றும் மின்சாரம் துண்டிப்புகளால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா, மண்டி, சிர்மௌர் மற்றும் சிம்லா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, இந்த இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் […]

வரவிருக்கும் S-5 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலுக்காக வடிவமைக்கப்பட்ட 8,000 கிமீ தூரம் மற்றும் MIRV திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையான K-6 ஹைப்பர்சோனிக் SLBM இன் கடல் சோதனைகளை இந்தியா நடத்த உள்ளது. DRDO ஆல் உருவாக்கப்பட்ட இது, இந்தியாவின் மூலோபாய மற்றும் பாதுகாப்பு தன்னிறைவில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது. இஸ்ரேல்-ஈரான் போரின் போது, ​​நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் டோமாஹாக் ஏவுகணை மற்றும் B-2 குண்டுவீச்சு விமானம் […]

காசாவில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழித் தாக்குதலில் 85 பேர் பலியாகினர். காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் நேற்று கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன. காசா நகரின் கடற்கரையில் நடந்த ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா […]

சர்வதேச சந்தையில் நிலவிவரும் கச்சா எண்ணையின் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. மாதம் தோறும் வணிக சிலிண்டரின் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தொடர்ந்து 3வது மாதமாக வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மே மாத தொடக்கத்தில் கூட, நிறுவனங்கள் சிலிண்டருக்கு ரூ.14.50 விலையைக் குறைத்திருந்தன. […]

ஜகார்த்தாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில், தரையிறங்கும் போது, திடீரென வீசிய பலத்த காற்றால் அதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது. பலத்த மழைக்கு மத்தியில் வந்த விமானம், தற்காலிகமாக திசைதிருப்பப்பட்ட போதிலும் பாதுகாப்பாக தரையிறங்க முடிந்தது. இந்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 27-ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜகார்த்தா சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரும் விமான விபத்து தற்காலிகமாக […]

ஓஹியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஓஹியோ விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை யங்ஸ்டவுன்-வாரன் பிராந்திய விமான நிலையம் அருகே ஆறு பேருடன் செஸ்னா 441 விமானம் மொன்டானாவின் போஸ்மேனு சென்றுக்கொண்டிருந்தது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் விபத்துக்குள்ளானதாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் […]