குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா AI-171 விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. உடனே தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள், விமான ஊழியர்கள் என 240க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்திய விமானத்துறையின் வரலாற்றில் மீண்டும் கரும்புள்ளி வைத்தது போல் மாறிவிட்டது. இப்பெரும் துயரச் சம்பவத்தின் இடம் இன்னும் சிதைந்த உலோகங்களும் புகை மூட்டத்துடனும் இருக்க, மீட்பு படையினர் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். […]

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு உதவும் வகையில் உதவி மையங்களை ஏர் இந்தியா அமைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் 1.38 மணியளவில் லண்டனுக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் […]

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக, அங்கு வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஆலோசனை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றம் மற்றும் இராணுவ சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் இந்திய அரசு ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. “தற்போதைய பிராந்திய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் இஸ்ரேலிய […]

மஹாராஷ்டிர மாநிலத்தில், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் முதலாமாண்டு ஜூனியர் கல்லூரி (FYJC) சேர்க்கைக்கு SC, ST மற்றும் OBC மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள சிறுபான்மை நிறுவனங்களில் ஜூனியர் கல்லூரி (FYJC) முதலாமாண்டு சேர்க்கையில் பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகியோருக்கான இடஒதுக்கீட்டை நிறுத்தி வைத்து மும்பை […]

அகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தையடுத்து, விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இன்று பிறபகல் புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து சரியாக 1.38 மணிக்கு புறப்பட்டு இருக்கிறது. டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களிலேயே இந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. […]

90 களில் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கரிஷ்மா கபூர். இவர் அதிகப்படியாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் நான்கு பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றிருக்கிறார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். நடிகை கரிஷ்மா கபூர்-சஞ்சய் கபூர் ஆகிய இருவரும் 2003-ம் ஆண்டு திருமணம் […]

அகமதாபாத் ஏர் இந்திய விமானம் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சிதறி கிடப்பதால், அவர்களை அடையாளம் காண்பது மிகவும் கடினமாக இருப்பதாக உயிரிழந்த பயணிகளின் உறவினர்கள் கூறுவது காண்போரை கண்கலங்க வைக்கிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்  சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் (AI171), நேற்று (ஜூன் 12) புறப்பட்ட சில விநாடிகளுக்குள் விபத்துக்குள்ளானது. விமானம் வானில் […]

ஈரானில் உள்ள டஜன் கணக்கான இராணுவ மற்றும் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்த போர், தற்போதும் தொடர்கிறது. இந்தப் போரின்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு, மற்றொரு மேற்காசிய நாடான ஈரான் […]

ஆப்பிள் நிறுவனம், கடந்த திங்கட்கிழமை தனது WWDC 2025 மாநாட்டில் iOS 26 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தியது. இதோடு இதர பல முக்கிய அம்சங்களையும் அறிமுகம் செய்தது. ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று இந்த WWDC மாநாடு. ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் இந்த மாநாட்டில், இந்நிறுவனம் தயாரித்துள்ள புதிய சாப்ட்வேர் மற்றும் தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யும். இந்த கூட்டத்தின் பின்பு ஆப்பிள் பங்குகளின் நிலை […]

வெளிநாட்டு நாணய வைப்புகளில் பணத்தை வைப்பதைத் தடுக்கும் நோக்கில், இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது தொடர்பான விதிகளை கடுமையாக்க ரிசர்வ் வங்கி (RBI) தயாராகி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. Liberalised Remittance Scheme (LRS) என்ற திட்டத்தின் கீழ் ஆண்டின் முடிவில் ஏற்படும் அதிகளவான வெளிநாட்டு நாணய அனுப்புதல்களை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அதாவது, வெளிநாட்டு நாணயத்தில் லாக்-இன் காலத்துடன் கூடிய […]