சமையல் எண்ணெய் ரகங்களின் இறக்குமதி வரியை 20ல் இருந்து 10 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து எண்ணெய் விலையை குறைக்க நிறுவனங்களுக்கு மத்திய உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. சமையல் கச்சா எண்ணெய் மீதான சுங்க வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு உயா்த்தியதைத் தொடா்ந்து, சமையல் எண்ணெய் ரகங்களின் சில்லறை விற்பனை விலை பலமடங்காக உயா்ந்தது. இதனால் நுகா்வோா் கடுமையாகப் பாதிக்கப்பட்டனா். உணவுப் பணவீக்கமும் அதிகரித்தது. இந்தநிலையில், கடந்த […]

ஏசிகளுக்கான வெப்பநிலை தரப்படுத்தல் 20°C முதல் 28°C வரை அமைக்கப்படும் என்றும் இனி 20°C க்குக் கீழே குளிர்விக்கவோ அல்லது 28°C க்கு மேல் சூடாக்கவோ முடியாது என்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் புதிய விதியை அறிவித்துள்ளார். கோடையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பலரும் தங்கள் வீடுகளில் ஏசியை பயன்படுத்தி வருகின்றனர். டிவி, பிரிட்ஜ் உள்ளிட்டவைகளை போல் தற்போது ஏசி பயன்பாடும் அதிகரித்தும் வருகிறது. இந்தநிலையில், […]

பெண் நீதிபதிகளின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் தொடர்பான விஷியத்தில் நீதித்துறை சமரசம் செய்ய முடியாது என்று கூறி பெண் நீதிபதியை அவமதித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி டெல்லியில் நீதிமன்ற அறைக்குள் பெண் நீதிபதியை வாய்மொழியாகத் தாக்கி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வழக்கறிஞர் சஞ்சய் ரத்தோருக்கு 2 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. […]

காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான டெலிபோன் சுப்பிரமணி, உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் டெலிபோன் சுப்பிரமணி. இவர் ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, வடிவேலுவின் எலி, யுனிவர்சிட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் விவேக் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் நுழைவதற்கு முன்பு, இவர் தொலைத்தொடர்பு துறையில் பணியாற்றியதால் […]

அண்மை காலமாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் தென்னிந்திய மாநிலங்களில் இந்த போக்கினை அதிகமாக காண முடிகிறது. தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 11% அளவிற்கு சரிந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுவரை இல்லாத அளவாக 2024 ஆம் ஆண்டில் 8.50 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறி […]

ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள், கூகுளின் ப்ளே ஸ்டோரில் இருந்து ஏராளமான செயலிகளை பதிவிறக்கம் செய்கின்றனர். இதனால் ப்ளே ஸ்டோரில் உள்ள செயலிகளை கூகுள் நிறுவனம் அவ்வபோது சோதனை செய்கிறது. அதில் பிரச்னைகளுக்கு உள்ளாகும் செயலிகள் உடனடியாக நீக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியாகி வந்துள்ளன. அந்த வகையில் தற்போது பயனாளிகளுக்கு தெரியாமலேயே அவர்களின் மொபைல் போனில் இருந்து தகவல்களை திருடியதாக 20 […]

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் குடியுரிமை சட்டங்களை கடுமையாக்கியுள்ளார். இதனால் சட்ட விரோதமாக குடியேறிய மக்களை நாடு கடுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டு தங்கள் நாட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். இது தொடர்பாக, ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு குடியுரிமை இல்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் […]

செவ்வாய் கடந்த 7ம் தேதி அதிகாலை 1:33 மணிக்கு சிம்ம ராசியில் நுழைந்தார். அவர் ஜூலை 28 வரை இந்த ராசியில் இருப்பார். செவ்வாய் ஆற்றல், தைரியம், செயல்பாடு மற்றும் போட்டியின் சின்னமாகும், அதே நேரத்தில் சிம்மம் நம்பிக்கை, தலைமைத்துவம் மற்றும் படைப்பாற்றலைக் குறிக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் சந்திக்கும் போது, ​​புதிய ஆற்றல், விரைவான முடிவெடுக்கும் திறன் மற்றும் பெரிய ஒன்றைச் செய்வதற்கான ஆர்வம் ஆகியவை ஒரு நபருக்குள் […]

இதுவரை கண்கள் துடிப்பதைப் பார்த்து மக்கள் நல்ல மற்றும் அசுபமான நேரத்தை யூகித்து வந்தனர், ஆனால் உடலின் ஒவ்வொரு பாகமும் துடிப்பதற்கான அர்த்தம் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இன்று உடலின் எந்தப் பகுதி தலை முதல் கால் வரை துடிப்பதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம். நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? மனித உடலின் வெவ்வேறு பகுதிகளுடன் வெவ்வேறு ராசிகள் தொடர்புடையவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். […]

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் பணயக்கைதிகளுக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்வதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, காசா தற்போது எங்களுக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு பெரிய பேச்சுவார்த்தையின் மத்தியில் உள்ளது, ஈரான் உண்மையில் இதில் ஈடுபட்டுள்ளது, மேலும் காசாவுடன் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். பணயக்கைதிகளை […]