ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ரம்பன் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் பலியாகினர். 5 பேர் காணாமல் போயுள்ளனர். ஜம்மு – காஷ்மீரில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்ற பக்தர்களில், 41 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். ரியாசி, அனந்த்நாக், கதுவா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த பெருமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. கனமழையால், தாழ்வான […]
சருமப் பராமரிப்பைப் பொறுத்தவரை, தொடர்ச்சியான பழக்கம் முக்கியமானது. . ஆனால் நீங்கள் தூங்கும் போது உங்கள் நைட் கிரீம் ஏன் அற்புதங்களைச் செய்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? காலை மற்றும் இரவு நேர சருமப் பராமரிப்பிற்கு இடையிலான வேறுபாடுகளைப் பற்றி விவாதித்து, இரவு நேர சருமப் பராமரிப்பின் நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம். அந்தவகையில், அழகுசாதன பிளாஸ்டிக் மற்றும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணரும், DHI இந்தியாவின் மருத்துவ […]
தூக்கம் உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். உணவுமுறை முதல் உடல் செயல்பாடு, மன அழுத்தம் மற்றும் பலவற்றில் உங்கள் தூக்கத்தைப் பாதிக்கக்கூடிய பல காரணிகள் உள்ளன. இருப்பினும், நீங்கள் நன்றாக தூங்க விரும்பினால், உங்களுக்கு இந்த மசாலா மட்டுமே தேவைப்படும். ஜாதிக்காய் உங்கள் தூக்கத்தை மேம்படுத்த உதவும். ஆனால் அதிக அளவில் ஜாதிக்காய் சாப்பிடக் கூடாது. ஒரு நாளுக்கு அதிகபட்சம் 1/8 தேக்கரண்டி போதுமானது. அதிகமாக […]
வரி போர்களுக்கு மத்தியில், ரஷ்யாவிற்கும் – இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று அதிபர் மாளிகை கிரெம்ளின் உறுதிப்படுத்தியது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நாளை மற்றும் 1-ம் தேதி என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து […]
பாகிஸ்தான் முழுவதும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், வாகா-அட்டாரி எல்லையில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களிடையே எதிர்வினையை தூண்டியுள்ளது. சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோவில், வாகா எல்லையில் இந்தியா–பாகிஸ்தான் இடையே நடக்கும் தினசரி தேசிய கொடி இறக்கும் விழாவின் போது, பாகிஸ்தான் பக்கம் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியிருந்தது. ஆனால் இந்தியா பக்கம் நன்கு சுத்தமாகவும், அமைதியாகவும் காணப்பட்டது. இதைக் கண்ட நெட்டிசன்கள் […]
ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான லலித் மோடி இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைவதைக் காணலாம். இந்த வீடியோ 2008 ஆம் ஆண்டு ஐபிஎல்லின் முதல் சீசனில் எடுக்கப்பட்டது, அப்போது மும்பை இந்தியன்ஸைச் சேர்ந்த ஹர்பஜன் சிங்கும் கிங்ஸ் லெவன் […]
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 48வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் ( AGM) , ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நீதா அம்பானி ஒரு சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்தார் . இதன் கீழ், ரிலையன்ஸ் அறக்கட்டளை மும்பையின் மையப்பகுதியில் 2,000 படுக்கைகள் கொண்ட ஒரு நவீன மருத்துவ நகரத்தை உருவாக்கி வருகிறது . இந்த ஆண்டு அறக்கட்டளையின் கிராமப்புற மேம்பாட்டு முயற்சிகள் 55,000க்கும் மேற்பட்ட கிராமங்களில் 15 லட்சம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளதாக […]
பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உட்பட நாட்டின் முக்கிய பெண்களின் போலியான படங்களை ஒரு ஆபாச வலைத்தளம் வெளியிட்டதை அடுத்து இத்தாலியில் பெரும் சீற்றம் ஏற்பட்டுள்ளது. மெலோனியின் சகோதரி அரியன்னாவும் இலக்கு வைக்கப்பட்ட பெண்களில் ஒருவர். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எல்லி ஷ்லீன், செல்வாக்கு மிக்க சியாரா ஃப்ரெராக்னி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரா மோரெட்டி ஆகியோரின் படங்களும் இந்தப் புகைப்படங்கள் ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான தலைப்புகளுடன் […]
அடிக்கடி கோபப்படுவது இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. கோபப்படும் பழக்கம் மாரடைப்பு மற்றும் நோய்களின் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். கோபம் என்பது மனித இயல்பின் ஒரு பகுதி. சில நேரங்களில் அது சாதாரணமாகத் தோன்றும், ஆனால் இந்தக் கோபம் ஒரு பழக்கமாக மாறும்போது, அது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாக மாறும். குறிப்பாக இதயத்திற்கு இது தீங்கு விளைவிக்கும். இரத்த அழுத்தம் அதிகரிப்பு: கோபத்தின் போது, உடலில் அட்ரினலின் மற்றும் […]
காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர் பிரிவில் அஜயா பாபு வல்லூரி மற்றும் ஜூனியர் பிரிவில் பெடபிரதா பராலி ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. அதன்படி நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் அஜயா பாபு வல்லூரி மற்றும் பெடபிரதா பராலி ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றனர். தேசிய விளையாட்டு சாம்பியனான அஜயா பாபு, சீனியர் ஆண்கள் 79 கிலோ பிரிவில் […]

