புகழ்பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்தை கௌரவிக்கும் வகையில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி, இந்தியா தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடுகிறது. இந்த நாள் அவரது சாதனைகளைக் கொண்டாடுவதற்கும், அன்றாட வாழ்வில் விளையாட்டு மற்றும் உடற்தகுதியின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு தினம் முதன்முதலில் 2012 இல் கொண்டாடப்பட்டது. இந்த தேதி, ஆகஸ்ட் 29, 1905 ஆம் ஆண்டு பிறந்த மேஜர் தியான் சந்த் அவர்களின் பிறந்த […]

உள்ளூர் ஜவுளித் தொழில் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை பருத்தி இறக்குமதி வரி விலக்கு கால அவகாசத்தை நீட்டித்த மத்திய நிதி அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு திருப்பூர் தொழில் வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. “இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா திடீரென 50% என்ற அசாதாரண சுங்க வரியை விதித்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜவுளி தொழில்துறைக்கு, இந்த நீட்டிப்பு சரியான நேரத்தில் […]

இந்திய அணி நட்சத்திர தொடக்க வீரரும் டெஸ்ட் கேப்டனுமான சுப்மன் கில் எதிர்பாராத வைரஸ் காய்ச்சல் காரணமாக துலீப் டிராபியிலிருந்து விலகியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி கடந்த வாரம் பிசிசிஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு அவர்கள் இருவர் உட்பட 15 பேர் கொண்ட அணி வீரர்களின் […]

இங்கிலாந்து முழுவதும் குறைந்தது 85 இடங்களில் “கும்பல் அடிப்படையிலான குழந்தைகள் பாலியல் சுரண்டல்” சம்பவம் அரங்கேறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த கும்பல் பாகிஸ்தானை சேர்ந்தது என்றும் அந்நாட்டு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ், தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் “grooming gangs” என்ற விசாரணையின் ஒருபகுதியாக, இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விசாரணையில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த “பாலியல் கும்பல்கள்”, […]

முடி வளர்ச்சிக்கு பாரம்பரியமான பொருள்கள் எப்போதுமே கைகொடுக்கும். சிகைக்காய் பொடியை கூந்தலில் தேய்த்து குளித்து பிறகு அதன் தூளை வெளியேற்றி கூந்தலை உலரவிடுவதை விட நுரைக்க நுரைக்க ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி கண்டிஷனர் போட்டு கூந்தலை காயவைப்பதே ஈஸி என்பவர்கள் முடி ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் மீண்டும் பாரம்பரிய பொருளுக்கு திரும்பலாம். முடிக்கு இயற்கையான பராமரிப்பை கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் சிகைக்காய் தேர்வு செய்யலாம். அதிலும் இதனுடன் […]

போலந்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சி ஒத்திகையின்போது போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ராணுவ விமானி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலந்தின் ராடோமில் விமானக் கண்காட்சி இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன்படி, நேற்று நடைபெற்ற ஒத்திகையி போது அந்நாட்டு விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ராணுவ விமானி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானியின் அடையாளம் உடனடியாகத் தெரியவில்லை. இதனை போலந்து […]

டைமண்ட் லீக் இறுதிப்போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், 85.01 மீ., தூரம் ஈட்டி எறிந்து இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் வெப்பர், 90.51 மீ., எறிந்து அபார சாதனையுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக்கின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ட்ரினிடாட் & டொபாகோ வீரர் கெஷோர் வால்கட், கிரெனடாவின் […]

இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு பெண்களின் பாதுகாப்பு என்பது ஒரு சமூகப் பிரச்சினை மட்டுமல்ல, வளர்ச்சியின் திசையை தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையாகும். இந்த சூழலில் NARI- 2025 அறிக்கை ஒரு முக்கியமான முயற்சியாகும். அதன் உதவியுடன், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அந்த அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 40% பெண்கள் தங்கள் சொந்த நகரங்களில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. மோசமான தெரு விளக்குகள் மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

வியாழக்கிழமை விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை விஷ்ணுவை வழிபட்டு விரதம் இருப்பதன் மூலம், சிறப்பு பலன்கள் கிடைக்கும். இதனுடன், வாழ்க்கையில் புத்திசாலித்தனம், பேச்சு மற்றும் வணிகம் அதிகரிக்கும். அக்னி புராணத்தில், காசியில் சிவலிங்கத்தை நிறுவி தவம் செய்ததாக தேவகுரு பிருஹஸ்பதி குறிப்பிட்டுள்ளார். அக்னி புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்தின் படி, வியாழக்கிழமை விரதம் செல்வம், செழிப்பு, குழந்தைகள், மகிழ்ச்சி மற்றும் அமைதியைக் கொண்டுவருகிறது. இந்த விரதத்தை எந்த மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் […]

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு இதுவரை பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் குரேஸ் பகுதியில் ராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பயங்கரவாதிகள் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவ முயன்றபோது ராணுவ வீரர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. அப்போது 2 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இருப்பினும், தேடுதல் […]