அமெரிக்காவின் அதிரடி வரிவிதிப்புக்கு பயந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி வைத்தால் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதும் உலக நாடுகளுக்கு பல்வேறு வகையிலான வரிகளை விதித்து வருகிறார். அந்த அடிப்படையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி மற்றும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு தனியாக அபராதம் […]

ஷாப்பிங் பில்ல்கள், உணவக (restaurant) ரசீதுகள் மற்றும் ATM ஸ்லிப்புகள் போன்றவற்றில் Bisphenol S (BPS) எனப்படும் ஒரு மிகவும் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் இருக்கக்கூடும். அந்த காகிதங்களை தொடும் போது வெறும் சில விநாடிகளில் தோல் மூலம் உடலுக்குள் உறிஞ்சப்பட்டுவிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. BPS என்பது ஹார்மோன் சீர்குலைக்கும் ஒரு ரசாயனமாகும், இது ஈஸ்ட்ரோஜனைப் பிரதிபலிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி உள்ளிட்ட உடலின் இயல்பான […]

நமக்கு இருக்கின்ற பிரச்சினையால் நம்மைவிட, நம்முடன் இருப்பவர்கள் அதிக தொந்தரவை எதிர்கொள்ள நேரிடுகிறது என்றால் அது குறட்டை சத்தம் தான். குறட்டை சத்தத்தால் வெளிநாடுகளில் விவாகரத்து பெற்றவர்களும் உண்டு. அவ்வளவு ஏன், நாமே கூட முழுமையான தூக்கத்தை தூங்கிவிட முடியாது. என்ன செலவானாலும் பரவாயில்லை, எத்தனை மருத்துவரைப் பார்த்தாலும் பரவாயில்லை, இந்தக் குறட்டை பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் முதலில் பிரச்சினைக்கு என்ன […]

உணவுகள் டெலிவரிக்கு பயன்படும் கருப்பு பிளாஸ்டிக் டப்பாவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எந்த உணவு ஆர்டர் செய்தாலும், அவை பெரும்பாலும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் நம் வீடுகளுக்கு டெலிவரி ஆகின்றன. பிரியாணியோ, ஃபிரைட் ரைஸோ அல்லது சாம்பார் சாதமோ சுடச்சுட அந்த கருப்பு நிற டப்பாவில் வருகிற உணவை, வரவிருக்கிற ஆபத்தை உணராமல் குழந்தைகளில் ஆரம்பித்து […]

அம்மன் மற்றும் சிவனுக்கு உரிய ஆடி மாதத்தில் ஆடி பிறப்பு, ஆடி பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் என சில நாட்கள் விஷேஷமானதாக பார்க்கப்படுகின்றன. அதில், ஆடி செவ்வாய் முக்கியமான நாளாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நாளில், சிவன், அம்மன் ஆகியோரை வழிபடுவது அதிக பலனை தரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் பெண்கள் விரதம் இருந்து வழிப்பட சிறந்த நாளாக திகழ்கிறது. […]

உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன. பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் […]

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் உள்ள ஒரு தெருவில் பர்தா அணிந்து தனியாக நடந்து சென்ற பெண்ணை ஒருவர் மார்பகங்களை பிடித்து துன்புறுத்திய சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, உத்தரப்பிரதேச மாநிலம் நாக்பனி பகுதியில் பர்தா அணிந்து சென்ற ஒரு பெண்ணை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் பாலியல் முறையில் தொந்தரவு செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வீடியோவில், அந்த பெண் தனியாக சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த […]

இங்கிலாந்துக்கு எதிராக பரபரப்பாக நடந்த 5 வது டெஸ்டில் 6 ரன்னில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்தது. இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 1-2 என பின்தங்கி இருந்தது. ஐந்தாவது டெஸ்ட் லண்டன், கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 224, […]

தோற்றத்தில் எளிமையானது மற்றும் அதன் விளைவு அற்புதம். கற்றாழை சருமத்திற்கு நன்மை பயக்கும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அது உங்கள் தலைமுடிக்கும் ஒரு வரப்பிரசாதம் அல்லவா? இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், முடியின் ஆரோக்கியம் மிகவும் பாதிக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், ஒரு இயற்கை தீர்வு முடிக்கு ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் வலிமையை வழங்க முடியும் என்றால், என்ன சொல்ல முடியும். கற்றாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், முடியின் […]

இந்தியர்களுக்கு உப்பு இல்லாமல் உணவின் சுவை முழுமையடையாது என்று கருதுகிறோம். பருப்பு அல்லது காய்கறி, சட்னி அல்லது உப்பு நிறைந்த சிற்றுண்டி என எதுவாக இருந்தாலும், எல்லாவற்றிலும் உப்பு அவசியம். ஆனால் உங்கள் உணவிற்கு சுவை தரும் உப்பு உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானது. உப்பு அதிகமாக உட்கொண்டால், அது இதயத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது, இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு […]