fbpx

உயிரிழந்த சிறுவனை உப்பு பரிகாரத்தால் உயிர்த்தெழுச்செய்ய முடியும் என்ற நம்பிக்கையால் உடலை உப்பில் புதைத்து பலமணி நேரம் காத்திருந்த உறவினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சர்வாரா என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரேஷ் என்ற சிறுவன் (10) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இந்நிலையில்இறந்த சிறுவனை உயிர்த்தெழச்செய்ய முடியும் என …

தென் கொரிய பெண் மீது காதல் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் இந்து முறைப்படி தனது சொந்த ஊரான திருப்பத்தூரிலேயே திருமணம் செய்து கொண்டார்.

திருப்பத்தூர் அருகே வாணியம்பாடியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார் (33) வெள்ளக்குட்ட என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர் கோவையில் தனியார் ஏரோனாடிகல் எஞ்சினியர் படிப்பை படித்து முடித்தார். பின்னர் தென் கொரியாவில் …

பெற்றகுழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் எந்த தாயும் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டாள். தன் உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றிவிட எண்ணிய இந்த தாய் புலியிடமே சண்டை போட்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அர்ச்சனா சௌத்ரி என்பது அவர் பெயர் . தனது குழந்தையுடன் பந்தவ்கர் புலிகள் காப்பகம் அருகே ரோஹானியா பகுதியில் கடந்த …

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் கீழகாசக்குடிமேடு கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று முன்தினம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 12 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். விசைப்படகில் கீழகாசாகுடிமேடு கிராமத்தைச் …

நீலகிரி அருகே சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துமாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த கொலப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஞானரத்தினம். இவருடைய மகன் சின்ன குட்டி என்ற கிருஷ்ணசாமி (29 ) இவர் கூலித்தொழில் செய்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது …

இந்தியாவை யாராலும் பிளவுபடுத்த முடியாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில்  காங்கிரஸ் கட்சியினரின் பாரத் ஜோடோ யாத்திரை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் உரையாற்றினார். அவர் கூறுகையில், ’’ தேசியக்கொடி என்பது சாதாரண துணி அல்ல, 3 வர்ணக் கொடி மட்டுமல்ல , சக்கரம் மட்டும்அல்ல …

போலீஸ் தாக்கியதில் உயிரிழந்தவரின் மனைவிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி சமயபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் .இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போலீசார் சில வழக்குகளின் கீழ் அவரை கைது செய்தனர். இந்நிலையில் அவர் திடீரென மரணமடைந்தார். முருகனின் இறப்புக்கு …

 தேனி அருகே ஓடைப்பட்டியில் சமத்துவரத்தில் பள்ளத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே வருசநாடு , மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகா . இவரது தனது 8 வயது மகளான ஹாசினி ராணியை சமத்துவபுத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு …

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று இலங்கை – இந்தியா போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து 174 ஐ இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக ரோகித்ஷர்மா …

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூட்டைகளில் சில்லரைகளை கொண்டு வந்து பத்து ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர் ஒருவர் பைக் வாங்கியுள்ளார்.

கிருஷ்ணகிரி அருகே ஓசூரில்  கெலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் (31) . இவர் தனக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் நிர்வாக மேலதிகாரியாக வேலை பாரத்த்து வருகின்றார். டி.வி.எஸ்.அப்பாச்சி வாங்குவதற்காக கடந்த 3 …