fbpx

திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வான்நுண்ணறிவு பிரிவினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கக் கோரியிருந்தனர். சோதனையை தீவிரப்படுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சிங்கப்பூர் , துபாயில் …

விழுப்புரம் அருகே சாலை ஓரத்தில் லாரியை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ஓட்டுனர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

விக்கிரவாண்டி அருகே சுங்கச்சாவடி உள்ளது. திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து பூச்சி மருந்து ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. சுங்கச்சாவடி அருகே வந்தபோது திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் …

பாகுபலி திரைப்படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ள நடிகை மீது 200 கோடி ரூபாய் மோசடி புகார் ஒன்றில் போலீஸ் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பாகுபலி திரைப்படத்தில் ’உருக்கியோ’ என்ற பாட்டுக்கு நடனமாடி புகழ் பெற்றவர் நோரா பத்தேகி . கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் பத்துக்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடையதாக …

தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு சாகும் வரை சிறையில் இருக்க தண்டனை வழங்கி  போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி  மாவட்டம்   பத்து வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜேம்ஸ்  என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு போக்சோ நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று …

குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்குகளில் தீர்ப்புக்கு பின்னர் குழந்தைகள் யாருடன் இருப்பது என்பது தொடர்பான வழக்குகளை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் , அதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  

குடும்ப நல நீதிமன்றங்களில் உள்ள வசதியைப் போல உயர் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்குகளை விசாரிக்க போதுமான வசதிகள் இல்லை என கூறப்பட்டது. …

அமெரிக்க ஓபன் பெண்கள் இரட்டையர் ஆட்டத்தில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்ததை அடுத்து செரினா – வீனஸ் ஜோடி முதல் சுற்றிலேயே படுதோல்வியை சந்தித்தது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு ஆட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கிய ஆட்டம் விருவிருப்பாக தொடங்கியது. எதிரணியில் லூசி ஹிராடக்கா(37)   மற்றும் லிண்டா நோஸ்கோவா (17) …

ஜெர்மனியில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு செல்லவிருந்த பயணிகள் டெல்லியில் இருந்து செல்லும் பயணிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.

ஜெர்மனியில்  விமான நிலையத்தில் பணியாற்றும் லூப்தான்சா நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பணியைப் புறக்கணித்து  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் …

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தால் அவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் படகுகளை இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகின்றது. அதில் மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றுகையில், இந்திய எல்லையைத் தாண்டிஇலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்து வருவது …

பலே ஆசாமிகள் கைது !

கைவிரல் ரேகைகளை மாற்றி வெளிநாட்டிற்குள் நுழைய முயன்ற பலே ஆசாமிகளை ஹைதராபாத் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

ஹைதராபாத்தின் ஒய் . எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நாக மூனீஸ்வர் ராவ் , எஸ் வெங்கட் ரமணா, ராமகிருஷ்ண ரெட்டி , போவிலா சிவசங்கர். ,இவர்களில் நாக மூனீஸ்வர் …

மருத்துவமனையில் அவசரபிரிவில் சிகிச்சை தீவிரம்

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் கைது செய்யப்பட்ட மடாதிபதிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள பிரிஹன் என்ற மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு(60). இவர் மடத்தின் பரமரிப்பில் பள்ளிகள் , விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த …