தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்து வந்த நிலையில், கடந்த 2016ல் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-அரசு பணிகளில் பதவி உயர்வுகளில் மொத்தமுள்ள பணியிடங்களில் 4 சதவீதத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு என […]
நோ டவுன் பேமென்ட், V, மிஸ்ஸிங் இன் ஆக்ஷன் III ஆகிய படங்களில் சினிமா ரசிகர்களை மகிழ்வித்த நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளராக செயல்பட்ட பாலிவுட் பிரபலம் அகி அலியோங் வயது 90-ல் காலமானார். டிமென்ஷியா என்னும் நியாமக மறதி நோயால் பாதிக்கப்பட்ட அவர், ஜூன் 23ஆம் தேதி திங்கட்கிழமை, கலிபோர்னியாவின் சில்மரில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். இந்த தகவலை அவரது 38 வயதான மனைவி கான்சிட்டா, உறுதிப்படுத்தினார். சிறுபான்மையினருக்காக […]
தனியாக வசிப்போர் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்காக விரைவாக தயாரிக்கக்கூடிய சிற்றுண்டியாக கருதப்படும் நூடுல்ஸ், தற்போது விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோவில், ராமன் நூடுல்ஸ் பேக்கெட்டின் பின்புறம் “புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க பாதிப்பு ஏற்படலாம்” என்ற எச்சரிக்கை வாசகம் காணப்படுவதால், நூடுல்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. ‘omggotworms’ என்ற பயனரால் பகிரப்பட்ட இந்த வீடியோவில், ராமன் நூடுல்ஸ் பேக்கெட்டின் பின்புறத்தில் சிறிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ள […]
தமிழகத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் இடம் வாங்கியவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. ஜூலை 1, 2025 முதல் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூன் 30, 2026 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில்: “2025-2026-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், பதிவு செய்யப்பட்ட தனி மனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என […]
கோவை மாவட்டத்திற்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியாக இருப்பதால், […]
“ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க!” என இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு ரீல்ஸ் வீடியோவால், தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமமான கூமாபட்டி உலக அளவில் கவனம் பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய கிராமம் தான் கூமாபட்டி. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கூமாபட்டி சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த ஊருக்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது. அழகான, இயற்கை சூழல் […]
தமிழக வெற்றிக் கழகத்தில் கடந்த சில மாதங்களாக நிர்வாகப் பதவிகள் தொடர்பாக சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகியான ஹரிஷ், கட்சியை விட்டு வெளியேறியுள்ளார். “13 வருடமாக உயிரையே வைத்து உழைத்தேன்… இனி இந்த கட்சி வேண்டாம்!” எனக்கூறிய ஹரிஷ், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய் மீது உண்மையான நம்பிக்கையோடும், தொண்டுமனப்பான்மையோடும் செயல்பட்டதாகக் கூறும் ஹரிஷ், பொதுச்செயலாளர் ஆனந்த் பணம், சாதி […]
காபி குடிப்பதால் ஏராளமான உடல்நல நன்மைகள் இருந்தாலும், சில ஆபத்தான தீமைகளும் உள்ளன. சமீபத்திய ஆய்வின்படி, உடனடி காபி பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் வெளிப்படுத்தியுள்ளனர். இன்ஸ்டன்ட் காபி குடிப்பதால், பார்வை தொடர்பான ஒரு கடுமையான நோயான வயதுசார் மாகுலர் சிதைவு (Age-related Macular Degeneration – AMD) ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் என சீனாவின் ஹூபே மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வு எச்சரிக்கிறது. […]
திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள். அப்படி திருப்பதி ஏழுமலையானின் மறு உருவமாக அமைந்திருக்கும் ஒரு கோவில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். திருப்பதி ஏழுமலையான் என அழைக்கப்படும் ஸ்ரீனிவாச பெருமாள், திருமணத்திற்காக குபேரனிடம் பெற்ற கடனுக்காக ஒரு கட்டத்தில் பெரும் நெருக்கடிக்கு உள்ளானார். அப்போது அந்த கடன் பிரச்சனையைத் தீர்த்து வைத்த புனிதத்தலம் தான் சில்பூர் புகுலு வெங்கடேஷ்வர சுவாமி கோவில். இந்த கோவில் தெலுங்கானா மாநிலம் […]
இந்தியாவின் பல மாநிலங்களில் பரவலாக இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை சட்ட விரோதமாகக் கூறி, அதைத் தடை செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், “அனைத்து மாநிலங்களிலும் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. மக்கள் கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய நெடுஞ்சாலையில் பயணிக்க பணம் வசூலிப்பது ஒரு சட்டவிரோத […]

