ஜூன் 22 அன்று, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போரின் போது, ​​அமெரிக்கா ஈரானின் மூன்று அணுசக்தி தளங்களான நிடாஞ்ச், இஸ்ஃபஹான் மற்றும் ஃபோர்டோவை B-2 குண்டுவீச்சு விமானங்களால் தாக்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, கத்தாரின் தலைநகரான தோஹாவில் உள்ள அமெரிக்க தளத்தை ஈரான் ஏவுகணைகளால் குறிவைத்தது. இருப்பினும், ஈரானிய ஏவுகணைகளால் அமெரிக்க தளம் அதிக சேதத்தை சந்திக்கவில்லை. ஆனால் மீண்டும் ஒருமுறை இரு நாடுகளுக்கும் இடையிலான விரோதம் […]

மத்திய அரசில் உள்ள லோவர் டிவிசன் கிளார்க்/ஜூனியர் செயலக உதவியாளர், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் ஆகிய பதவிகளில் தேசிய அளவில் 3,131 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. கல்வித்தகுதி: நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் துறையின் கீழ் உள்ள டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு 12-ம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் கணிதம் பாடம் கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO), இந்தியாவின் மூன்று பாதுகாப்புப் படைகளுக்கும் (ராணுவம், கடற்படை, விமானப்படை) அவசரகால கொள்முதலுக்காக 28 ஆயுத அமைப்புகளை வழங்கியுள்ளது. ராக்கெட்டுகள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆயுதங்கள் இதில் அடங்கும். இந்த நடவடிக்கை, பாதுகாப்புத் துறையின் தன்னம்பிக்கை உந்துதல் (Aatmanirbhar Bharat) நோக்கில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட ஆபரேஷன் […]

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (101), மாரடைப்பால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பக்கவாதம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, நேற்றிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் இதய நோய் நிபுணர்கள் தலைமையிலான குழு, அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் […]

பிரான்ஸில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற வருடாந்திர உலக இசை தினம் நிகழ்ச்சியில், 145 பேர் மீது போதை ஊசியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் டீன் ஏஜ் பெண்கள் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் வைத்திருந்த ஊசிகளில் ரோஹிப்னால் அல்லது GHB போன்ற பாலியல் வன்கொடுமை மருந்துகள் இருந்ததா என்பது […]

மனித உடலில் மிகப்பெரிய உள் உறுப்பு கல்லீரல் ஆகும். இது நமது உடலில் நச்சுக்கள் வெளியேற்றம், பித்த நீர் உற்பத்தி, செரிமானம், ஆரோக்கிய குருதி சுழற்சி போன்ற பல அத்தியாவசிய செயல்களை நிறைவேற்றுகிறது. இந்த அளவிற்கு முக்கிய பங்காற்றும் கல்லீரல், நாம் வழக்கமாக செய்யும் சில தவறுகளால் மிகவும் எளிதாக பாதிக்கப்படலாம். எப்படி கல்லீரல் பாதிக்கப்படுகிறது? நாம் உண்பது, பருகுவது, வாழும் பழக்கவழக்கங்கள் அனைத்தும் நேரடியாக கல்லீரல் மீது தாக்கம் […]

யூபிஐ வழியாக மொபைல் செயலிகள் மூலம் பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 15ஆம் தேதி முதல், யூபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்தாலோ அல்லது தவறான UPI ID-க்கு பணம் அனுப்பப்பட்டாலோ, அந்த தொகை உடனடியாகவே வாடிக்கையாளரின் கணக்கில் திரும்பக் கிடைக்கும் என NPCI தெரிவித்துள்ளது. தற்போதைய சூழலில், யூபிஐ பரிவர்த்தனைகள் தோல்வியடைந்தால், பணம் திரும்ப வந்து சேர பல […]

நேபாளத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம், உலகளவில் “சிறுநீரக பள்ளத்தாக்கு” (Kidney Valley) என்ற பெயரில் அறியப்படுகிறது. அதற்கான காரணத்தையும், அங்குள்ள மக்கள் பின்பற்றும் விசித்திர மரபையும் இந்த பதிவில் பார்க்கலாம். நேபாளத்தில் ஒரு கிராமத்தில் பல தசாப்தங்களாக ஒரே ஒரு சிறுநீரகத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமம் மிகவும் ஏழ்மையானது, எனவே மக்கள் தங்கள் சிறுநீரகங்களை பணத்திற்காக விற்கிறார்கள். இங்குள்ள மக்கள் தங்கள் உடலைப் பற்றி கவலைப்படாமல் […]

அமெரிக்காவின் பீட்டா டெக்னாலஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ள Alia CX300 மின்சார விமானம், பயணிகளை ஏற்றிச் செல்லும் முதல் முழு மின்சார விமானமாக வெற்றிகரமாக செயல்பட்டு விமானத்துறையில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில், கிழக்கு ஹாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரிலுள்ள ஜான் எஃப் கென்னடி (JFK) விமான நிலையத்திற்கு நான்கு பயணிகளுடன் பறந்த இந்த விமானம், சுமார் 30 நிமிடங்களில் 70 கடல் மைல்கள் (130 கிலோமீட்டர்) தூரத்தை […]

சென்னை அனகாபுத்தூர் அருகே தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் நடைபெற்ற மோசமான வாகன விபத்தில் கர்ப்பிணியான இளம் பெண் மற்றும் அவரது தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது மிகவும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அனகாபுத்தூர் அருகே மதுரவாயல் பை-பாஸ் சாலையில் மணிகண்டன் என்ற நபர் காரை எதிர்திசையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். அப்போது மணிகண்டன் ஓட்டி வந்த கார், எதிரில் வந்த மற்றொரு கார் மீது நேருக்கு நேர் […]