பாமக பிரச்சனைக்கு திமுக காரணமில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார். அவர் பேசுகையில், என் கட்சிக்கும், என் சமூதாயத்துக்கும் நான் துரோகம் செய்தால் அது தான் என் வாழ்நாளின் கடைசி நாளாக இருக்கும். நடக்கின்ற பிரச்சனைக்கு யார் வில்லன் என்றால் திமுக தான். ஆட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை […]

273 பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்த ஏர் இந்தியா விமான விபத்தின் AI கறும்படம் ஒன்று சோசியல் மீடியாவில் டிரெண்டாகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12-ம் தேதி பகல் 1.19 மணிக்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 33வது விநாடியில் விழுந்து நொறுங்கியது. 242 பேருடன் கிளம்பிய விமானம், விமான நிலையம் அருகே உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த […]

நீண்ட கால முதலீடுகளைச் செய்ய விரும்புவோர் இரண்டு விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள். அவை நிலையான வைப்புத்தொகை (FD) மற்றும் முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIP). இவற்றில் எது உண்மையில் அதிக லாபத்தைக் கொடுத்தது என்பதை முதலீட்டாளர்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். கடந்த 10 ஆண்டுகளில் எது அதிக வருமானத்தை அளித்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.. FD என்றால் என்ன? நிலையான வைப்புத்தொகை என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்ட வட்டி […]

கேரளாவில் உள்ள தனியார் பெட்ரோலிய நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 300 சில்லறை விற்பனை நிலைய விற்பனையாளர்களின் சங்கமான பெட்ரோலிய வர்த்தகர்கள் நலன் மற்றும் சட்ட சேவை சங்கம், தங்கள் தனியார் கழிப்பறைகளை பொது வசதிகளாக மாற்றுவதற்கான அரசாங்க உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் பேரில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் […]

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனை மையத்தில் ராக்கெட் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், தனது அடுத்த ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுதலுக்காக முக்கியமான சோதனையை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ராக்கெட் வெடித்து சிதறியதில் அந்த முயற்சி தோல்வியை தழுவியது. இந்த சோதனை என்பது, ஏவுதலுக்கு முன் இயந்திரங்கள் நம்பிக்கையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யும் இறுதி கட்ட ஆய்வு ஆகும். விபத்தின்போது கட்டிடத்தில் […]

உடல் எடையை குறைப்பது பலருக்கு கடினமான காரியம். சரியான உணவுமுறை மற்றும் வீட்டு குறிப்புகள் மூலம் எளிதாக எடையைக் குறைக்கலாம். வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள் மூலம் எடையைக் குறைக்கலாம். ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையுடன் வீட்டில் தயாரிக்கப்பட்ட எடை இழப்பு பானங்கள் மற்றும் அவற்றின் நன்மைகள் பற்றி அறிந்து கொள்வோம். எடை இழப்பு ஏன் முக்கியம்: அதிக எடை இருப்பது அழகை கெடுப்பது மட்டுமல்ல. இது ஒரு உடல்நலப் பிரச்சினையும் கூட. […]

கரூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி பென்சில் தமிழரசன், போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி பென்சில் தமிழரசன் மீது ஏற்கெனவே திருட்டு, தாக்குதல், மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்ட நடவடிக்கை எடுத்தனர். அரிக்காரம்பாளையம் சாலை மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த தமிழரசனை போலீசார் பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு […]

செயல்பாட்டு நிலைத்தன்மை மற்றும் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பெரிய அளவிலான விமானங்களின் சேவையை 15% குறைப்பதாக ஏர் இந்தியா விமானம் நிறுவனம் அறிவித்துள்ளது.சிறந்த செயல்திறனை உறுதி செய்வதற்கும், விமான நம்பகத்தன்மையைப் பேணுவதற்கும், பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட அட்டவணை ஜூன் 20, 2025 முதல் அமலுக்கு வரும், மேலும் குறைந்தபட்சம் ஜூலை நடுப்பகுதி வரை நடைமுறையில் […]

இன்று பராமரிப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி இடையே 27 மின்சார ரயில் ரத்து செய்யபட்டுள்ளது. சென்னையில் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழில், ஐடி துறை என பல்வேறு தேவைகளுக்காக அண்டை மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து வசித்து வருகின்றனர். சென்னை மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக புறநகர் மின்சார ரயில் சேவைகள் இருந்து வருகின்றன. சென்னை பயணிகளுக்கு புறநகர் […]

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் புகார் அளித்திருந்த நடிகை விஜயலட்சுமி, புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “இலங்கையில் தமிழர்களுக்காக பிரபாகரன் உயிரை கொடுத்து போராடிக்கொண்டு இருந்தபோது, இலங்கையில் தமிழர்கள் எல்லாம் செத்துக்கொண்டு இருந்த போது, இங்க என் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு, குடித்துக்கொண்டு ஆட்டம்போட்டுக்கொண்டு எல்லாத்தையும் பண்ணிட்டாரு. தலைவர் பிரபாகரனுடைய மகன் பாலச்சந்திராவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஒரு […]