உலக சந்தைகளில் அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்ததை அடுத்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்த நிலைக்குள் தள்ளக்கூடும் என்கின்ற காரணத்தினால யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்கள் வாங்குபவர்களுக்கு கிரீன் பேக்- விலை தங்கத்தின் விலையை உயர்த்துகின்றது. இந்தியாவின் டெல்லி, கல்கத்தா, மும்பையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது.. […]
பாலம் விபத்தில் ஒரேவா நிறுவனத்தின் மேலாளர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிபதியிடம் இந்த விபத்து கடவுளின் விருப்பம் என பதில் அளித்துள்ளது மக்களிடையே கோபத்தை தூண்டியுள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் மச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கும் பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் 141 பேர் உயிரிழந்த நிலையில் 170 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பாலத்தை பராமரித்த ’ஒரேவா’ என்ற […]
தமிழகத்தில் அடுத்த வரும் 5ம் தேதி வரை கனமழை விடாது கொட்டித்தீர்க்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. இந்த மழை படிப்படியாக அதிகரிக்கும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் அதே போல படிப்படியாக அதிகரித்து மழை கொட்டித்தீர்க்கின்றது. தொடர்ந்து மேலும் 3 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு […]
பலவிதமான சத்துக்கள் நிறைந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. பலவிதமான சத்துக்கள் நிறைந்த பூசணி உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் விதைகளும் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை பயக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதில் ஒமேகா 6 மற்றும் புரதம், இரும்பு, பீட்டா-கெராடின் மற்றும் […]
தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தைராய்டு என்பது, கழுத்தின் நடுவில் அமைந்துள்ள ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவிலான சுரப்பி. இது ஒரு சிறிய உறுப்பு என்றாலும், நம் உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் தைராய்டு பிரச்சனையை […]
வாட்ஸ் ஆப் செயலி பயனர்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்து வருகின்றது . குறிப்பாக அடுத்தடுத்து பல நவீன அப்டேட்களை நமக்கு அளிக்கின்றது. அந்த வகையில்தற்போது வெளியிட்டுள்ள அடுத்தக்கட்ட அப்டேட்டில் உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பிக்கொள்ளலாம். ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்புவதற்கும், விஷயத்தை பகிர்ந்து கொள்வதற்கும், புகைப்படத்தை அனுப்புவதற்கும், வீடியோக்கள், ஆவணங்கள் பகிர்ந்து கொள்வதற்கும் வாட்ஸ்ஆப் பெரிதும் உதவியாக இருக்கின்றது. இதில் மக்களின் தேவைகளை புரிந்து கொண்ட வாட்ஸ் ஆப் அடுத்தடுத்த புதிய […]
பிரபல காமெடி நடிகர் கமலஹாசன் நடிக்கும் திரைப்படத்துடன் நடிப்பை நிறுத்திக்கொள்வதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தெலுங்கு, தமிழ் போன்ற மொழிகளில் வடிவேலுவுக்கு இணையாக நடித்து வந்தவர் நடிகர் பிரம்மானந்தம். 66 வயதாகும் இவர் வடிவேலுவை பார்த்தாலே எப்படி அனைவருக்கும் சிரிப்பு வருமோ அதே போல பிரம்மானந்தத்தை பார்த்தாலே சிரிப்பு வரும் அந்த அளவிற்கு நகைச்சுவையை வெளிப்படுத்துவார். மீம்ஸ் கிரியேட்டர்கள் ஒரு புறம் வடிவேலுவை வைத்து கலக்கினார்கள் என்றால் அதே போல […]
முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை நீங்கள் தொலைத்துவிட்டால் பணம் செலவழிக்காமல் அபராதம் கட்டாமல் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். முன்பதிவு செய்த டிக்கெட் ஏதோ ஒரு சில காரணங்களால் தொலைந்துவிட்டாலோ அல்லது அவசரத்திற்கு கையில் கிடைக்கவில்லை என்றாலோ நமக்கு இழப்பு ஏற்படும். டிக்கெட் சோதனையின் போது காட்டவில்லை என்றால் நாம் அபராதம் செலுத்த நேரிடும். அதே நேரத்தில் பயணமும் செய்ய வேண்டும். அபராதம் கட்டக்கூடாது என்ன செய்யலாம். இப்படி […]
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் போதைக்கு அடிமையான ஜாம்பபவான் வாசிம் அக்ரம் மனைவி இறந்த பின்னர் உருக்கமாக சுயசரிதை நூலில் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் வீரர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோகைன் என்ற போதைப்பொருளுக்கு அடிமையானார். கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் கடந்த 2003-ம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில்இவர் 900 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றார். இந்நிலையில் தற்போது […]
பிரபல கர்நாடக பாடகரான அருணா சாய்ராமுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல பாடகலான அருணா சாய்ராமுக்கு 70 வயதாகின்றது. பிரான்ஸ் நாட்டின் உயரிய ’செவாலியே ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக இசையில் 30 ஆண்டுகளாக பாடகாரகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் அருணா சாய்ராம். இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றிருக்கின்றார். மியூசிக் அகாடெமி சார்பில் சங்கீத கலாநிதி விருதையும், தமிழக அரசின் கலைமாமணி […]