வேலை கிடைக்காத விரக்தியில் நேர்த்திக்கடனாக உயிரை தருகின்றேன் என வேண்டிக் கொண்ட இளைஞர் உயிரைவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த நவீன் என்பவர் நேற்று ரயில்வே தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக அவரை சோதனை செய்தபோது அவரது சட்டை பாக்கெட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தை எடுத்து வாசித்த போது, […]
தமிழ் திரையுலகில் நவரச நாயகன் என்ற பெயரை பெற்று பெண்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் கார்த்திக். இவரது மகன் கவுதம் கார்த்திக்தான் காதலில் விழுந்துள்ளார்.. பேச்சாலும், நடிப்பாலும் தனக்கென ஒரு பாணியை கொண்டிருந்தவர் நடிகர் கார்த்திக். பல ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் தந்தையின் ஆசீயோடு ’கடல்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து வை ராஜா வை, ரங்குன், தந்திரன் […]
பாலம் இடிந்து விபத்துக்குள்ளான 24 மணி நேரத்திற்கு பின்னர் 9 பேர் இந்த வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் மோர்பி பகுதியில் நடந்த விபத்தில் இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலம் இடிந்த விபத்து நேற்று மாலை நடந்த நிலையில் இன்று 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரேவா நிறுவனத்தின் அதிகாரிகள், டிக்கெட் விற்பனை செய்தவர்கள், பாதுகாவலர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
நடிகர் தனுஷ் குடும்பத்துடன் சில நாட்கள் மகிழ்ச்சியாக கழித்து வர துபாய்க்கு சென்றுள்ளதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நடிகர் தனுஷ் ’கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கழிக்க திட்டமிட்டுள்ளார். அதே நேரத்தில் அடுத்த படத்திற்காகவும் பணியில் ஈடுபட்டுள்ளார்.இதற்காக தனுஷ் குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. சில நாட்கள் அங்கு […]
’துணிவு’ திரைப்படம் தொடர்பாக நடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையால் சமூக வலைத்தலங்களில் பரபரப்பாகி உள்ளது. ’துணிவு’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் நடிகர் அஜித் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பேசப்பட்டது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் போனிகபூர் கூட்டணியில் ’துணிவு’ திரைப்படம் வெளியாகின்றது. மஞ்சுவாரியார் 3வது முறையாக கைகோர்த்துள்ளார். இதில் சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் […]
சன்நியூஸ் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின்னர் பிரபலமாகி பிக்பாஸ் போட்டியாளராக அனைவரையும் ஈர்த்தவர் சீரியலில் களமிறங்க உள்ளாராம். சன்நியூஸ் பிரைம் டைம் செய்தி வாசிப்பாளராக பிரபலமானவர் அனிதா சம்பத். இவரது உடை மற்றும் அலங்காரம், செய்தி வாசிப்பின் நலிணம் போன்றவற்றால் அனைவரையும் ஈர்த்தவர். பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக வீட்டுக்குள் நுழைந்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். பின்னர் எந்த நிகழ்ச்சிக்கும் செல்லாமல் இருந்தார். எனினும் யூடியூப் ஒன்றை நடத்தி […]
தென்னிந்தியாவின் முதல் பேசும் படம் ’காளிதாஸ்’ வெளியாகி இன்றுடன் 91 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் இந்தப்படத்தை தற்போது பார்க்க முடியாது என்பது சற்றே வருத்தப்பட வைக்கின்றது. தென்னிந்தியாவின் முதல் பேசும் படமான ’காளிதாஸ்’ 1931ம் ஆண்டு அக்டோபர் 31ல் இதே நாளில் வெளியானது. 91 ஆண்டுகளை கடந்துவிட்ட இத்திரைப்படத்தை தயாரிக்க ரூ.8000 செலவாகியுள்ளது. ஆனால், இத்திரைப்படத்தில் தயாரிப்பு நிறுவனம் பெற்ற லாபம் ரூ.75,000 ஆகும். முதல் பேசும் படத்தில் 50 […]
தமிழகத்தில் மட்டும் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரானின் புதிய வடிவம் எக்ஸ்.பி.பி. என்ற வைரஸ் 175 பேரை பாதித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் தமிழகம் உள்பட 9 மாநிலங்களில் ஓமைக்ரானின் மாறுபாடு அடைந்த எக்ஸ்.பி.பி. என்ற வைரஸ் பாதிப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவலை சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச ஆராய்ச்சி அமைப்பு ஓமைக்ரான் மாறுபாடு பற்றி எக்ஸ்.பி.பி. வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த […]
மீண்டும் கொரோனா கிடுகிடுவென பரவி வருவதால் சீனாவில் புலம் பெயர் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் தப்பித்து செல்கின்றனர். சீனாவில் திடீரென கிடுகிடுவென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட நாடுகளுக்குள் பரவியது. உலகத்தின் முக்கால்வாசி நாடுகள் லாக்டவுன் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து படிப்படியாக தளர்த்தப்பட்டு தடுப்பூசி கொண்டு வரப்பட்டது. பல்வேறு […]
அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். அனுமதி கேட்டு வந்த நிலையில் தற்போது பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காந்தி ஜெயந்தி நாளில் தமிழகத்தில் பேரணி செல்வதற்கு ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு அனுமதி கேட்டிருந்த நிலையில் பேரணி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் காவல்துறை அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவையும் மீறி அனுமதி […]