தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கனமழை மிகக் கனமழை பெய்யும் எனவும் இடி மின்னலுடன் மழை பெய்யும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக […]
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற பெண் கொல்லப்பட்ட வழக்கில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலைய நடைமேடையில் ஸ்வாதி ரயிலுக்காக காத்திருந்தபோது அங்கு வந்த நபர் ஒருவர் ஸ்வாதியை அரிவளால் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பித்து ஓடினான். இந்த வழக்கில் கொலையாளியை பல நாட்கள் தேடி வந்த நிலையில் தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவரின் மகன் ராம்குமார்தான் ஸ்வாதியை கொலை செய்தார் என […]
குஜராத்தில் நடந்த பாலம் விபத்தில் ராஜ்காட் மக்களவை உறுப்பினர் மோகன்குந்தரியாவின் உறவினர்கள் 12 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்காட் மக்களவை பா.ஜ.க. உறுப்பினராக மோகன் குந்தரியா உள்ளார். இவரின் உறவினர்களும் நேற்று நடந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை மலை சுற்றிப் பார்க்க சென்றவர்கள் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். உயிரிழந்த 12 பேரில் 5 குழந்தைகள், 4 பெண்கள், 3 ஆண்கள் ஆவர். […]
’பாரதிகண்ணம்மா’ சீரியலில் நடித்து வரும் பிரபல நடிகரின் மனைவி திடீர் மரணம் அடைந்ததால் சின்னத்திரையுலகினர் அதிர்ச்சியில் உள்ளனர். பிரபல நடிகரான பரத்கல்யாண் ’பாரதி கண்ணம்மா ’ சீரியலில் நடித்து வருகின்றார். இவரது மனைவி பிரியதர்ஷினி இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். பேலியோ டயட் முறையை பின்பற்றியதால் சர்க்கரை நோய் ஏற்பட்டதாகவும் இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு 3 மாதம் கோமாவில் இருந்தார் எனவும் கூறப்படுகின்றது. […]
பல ஆண்களுடன் உறவு கொண்டு 11 குழந்தைகளை பெற்ற பின்னரும் இளம்பெண்ணுக்கு இன்னும் பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற வினோத ஆசை இன்னும் அவரை விடவில்லை. அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வசித்து வருபவர் பிஹாய். இவருக்கு வினோதமான ஆசை உள்ளது. பல ஆண்டுகளுடன் உறவு கொண்டு பல குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. இதுவரை 8 ஆண்டுகளுடன் உறவு கொண்டதன் மூலம் 11 குழந்தைகளை அவர் […]
கர்நாடக மாநிலத்தில் கொண்டாடப்பட உள்ள ராஜ்யோத்சவாவிற்கு கலை நிகழ்ச்சிக்காக பகத்சிங் தூக்கிலிடப்படும் காட்சி ஒத்திகை பார்த்தபோது மாணவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் சஞ்சய் கவுடா . நாளை நடைபெறவிருந்த கலை நிகழ்ச்சிக்காக மாணவன் பகத் சிங் வேடத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். நேற்று இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாடகத்தில் நடிக்க தீவிரமாக ஒத்திகை […]
குஜராத் தொங்கும் பாலம் சுமார் 7 மாதங்களாக பராமரிப்பு பணி நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டு நான்கே நாளில் இப்படி ஒரு சோகம் அரங்கேறி உள்ளது. குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மோர்பி பகுதியில் ஆற்றை கடக்க வசதியாக அமைக்கப்பட்டது தொங்கும் பாலம். 1879ம் ஆண்டு கட்டப்பட்டது 230 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிக்காக […]
தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ் வழியில் […]
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், குடல் ஆரோக்கியம் சீராக இருக்க வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி முதல் மன ஆரோக்கியம் வரை, உங்கள் உடலை பல்வேறு வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது. எனவே உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். மேலும் உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் நீங்கள் செய்யும் சில மாற்றங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதற்கு நீங்கள் தினமும் என்ன செய்ய வேண்டும் என்பது […]
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் நவம்பர் 4ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 500 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்ற ’பொன்னியின் […]