மோர்பி பகுதியின் ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 400க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குஜராத்தில் உள்ளது மோர்பி பகுதி . அங்குள்ள ஆற்றைக்கடக்க கேபில் பாலம் கட்டப்பட்டு இருந்தது. அதன் மீது பயணிகள் சென்று கொண்டிருந்தபோதே திடீரென அந்த பாலம் உடைந்து ஆற்றில் மூழ்கியது. இதில் சுமார் 400 பேர் தண்ணீரில் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தகவல்அறிந்து வந்த […]
டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில்137 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்கா வெற்றியை தட்டிச் சென்றது. டி20 உலக கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 49 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி. சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 133 ரன்கள் அடித்து 134 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் […]
மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமந்த வெளியிட்ட தகவலை அடுத்து முன்னாள் கணவர் நாக சைதன்யா வீட்டில் இருந்து சமந்தா குணம் பெற வாழ்த்து வந்துள்ளது. பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று சமூக வலைத்தலங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு விரைவில் பூரண குணம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து கமண்ட் செய்தனர். மேலும், அவரது முன்னாள் கணவர் நாகசைதன்யா சமந்தாவுக்கு […]
நடிகர் சித்தார்த் மணிரத்தினம் இயக்கிய பிரபல திரைப்படத்தில் முக்கிய கதாநாயகியை காதலிப்பதாக அவரே தகவல்கள் வெளியிட்டதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான சித்தார்த், ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் அவர் நடித்த அவர் தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் சித்தார்த் […]
மத்திய அரசின் NLC நிறுவனத்தில் விசாரணை அதிகாரிக்கான பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியை பற்றிய முக்கிய விவரங்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம். NLC நிறுவன வேலைவாய்ப்பு: மத்திய அரசின் கீழ் இயங்கும் NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது விசாரணை அதிகாரி பணிக்கு என்று பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான அறிவிப்பு முன்னதாக வெளியான நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]
கள்ளக்குறிச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் இல்லத்திருமணவிழாவில் பங்கேற்றபின் மணமக்களுக்கு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். மாதிரி வாழக்கூடாது என அறிவுரை வழங்கியுள்ளார். கள்ளக்குறிச்சியில் வடக்கு மாவட்ட செயலாளர் உதய சூரியன் இல்லத்தில் திருமண விழா நடைபெற்றத. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்கள் டாக்டர் பர்னாலா- டாக்டர் சங்கவியை நேரில் ஆசிர்வாதம் செய்தார். பின்னர் மணமக்களுக்கு அறிவுரை வழங்கியபோது, ’’ மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். கண்டிப்பாக ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். […]
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 1-ம் தேதி முதல் 3-ம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகின்றது. தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு சென்னை அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு மழை பெய்யும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார் வெதர்மேன் […]
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல் நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் இணைந்து ஓராண்டு பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு […]
டைரக்டர் (பொறியாளர்) பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. தமிழக அரசு பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 31.10.2022 க்குள் (திங்கள் கிழமை கடைசி நாள்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. டைரக்டர் (பொறியாளர்) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் […]
பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளிஅவரைப் பற்றி என்னிடம் கேள்விகள் கேட்க வேண்டாம் என கடுப்பாக பதில் அளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், கோவை கார் வெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் […]