கருட புராணம் இந்து மதத்தின் 18 பெரிய புராணங்களில் ஒன்றாகும். இது மனிதனின் பிறப்பு, இறப்பு, சொர்க்கம், நரகம், யமலோகம், மறுபிறப்பு மற்றும் சீரழிவு ஆகியவற்றை விரிவாக விவரிக்கிறது. கருட புராணத்தில், தீய செயல்களைச் செய்பவர்களின் ஆன்மாக்கள் இறந்த பிறகு நேரடியாக நரகத்திற்குச் செல்லும் என்று எழுதப்பட்டுள்ளது. கருட புராணம் முக்கியமாக 16 நரகங்களைப் பற்றிப் பேசுகிறது. இந்த 16 நரகங்களில், மக்கள் தங்கள் பாவங்களுக்கு ஏற்ப தண்டிக்கப்படுகிறார்கள். கருட […]

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் மோதி 50 மீட்டர் தூரம் வேன் இழுத்துச் […]

2026 சட்டமன்ற தேர்தலை குறி வைத்து, ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்‘ என்ற பெயரில், நேற்று முதல் ஜூலை 23-ம் தேதி வரை கொங்கு மண்டலம், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்கிறார். முதற்கட்டமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கினார். மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பயண தொடக்க நிகழ்விற்கு, பாஜக உள்ளிட்ட கூட்டணி […]

கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வேன் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளது. அப்போது சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ரயில் மோதி 50 மீட்டர் தூரம் வேன் […]

நாடு தழுவிய அளவில் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தொழிலாளர் விரோத சட்டங்கள் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவிலான வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் உள்ள தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளன. மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து வேலைநிறுத்தம் […]

மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் சார்ந்த இந்து முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரமாண்டமான நிகழ்வில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது சமீபத்திய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய ஆன்மீகக் கூட்டங்களில் ஒன்றாகும். சட்டமன்றத் தேர்தல்களுக்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இந்த மாநாடு அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. […]

உத்தரபிரதேசத்தில் ரயில் நிலையத்தில் பிரசவ வழியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த ராணுவ மருத்துவருக்கு ராணுவ தளபதி உபேந்திரா திவேதி பாராட்டு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பன்வேல்-கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கர்ப்பிணிப் பெண், ஜான்சி நிலையத்தில் இறக்கியபோது, அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. இதை அறிந்த மேஜர் பச்வாலா உடனடியாகச் செயல்பட்டு, ரெயில்வே ஊழியர்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். […]

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் சார்ந்த விஷயங்களில் வாழ்வதற்கு மக்கள் வேகமாகப் பழகிவிட்டனர். எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதில் எந்த அளவுக்கு நன்மைகள் உள்ளனவோ அந்த அளவுக்கு தீமைகளும் இருக்கின்றன. அனைவரிடமுமே ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் உலகின் எந்த இடத்தில் என்ன நடந்தாலும் அதை அமர்ந்த இடத்தில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது. சமூக வலைதளங்களில் நம்முடைய நண்பர்கள் அல்லது உறவினர்கள் நமக்கு புகைப்படங்கள், செய்திகள், மீம்கள் போன்ற பலவற்றை அனுப்புவார்கள். முன் பின் […]