எஸ்.பி.ஐ. வங்கி வைப்பு நிதிக்கான வட்டிவிகிதத்தை உயர்த்தி உள்ளது.. சிறுக சிறுக சேமித்து வைப்பு நிதியில் லாபம் பெற்று வரும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கி வைப்புகளை லாபகரமாக மாற்ற ஒரு வாரத்தில் , இரண்டு முறை வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இருக்கின்றது. ஐ.டி.பி.ஐ. , எஸ் வங்கி , ஆக்சிஸ் வங்கி மற்றும் யூனியன் வங்கி போன்ற பல வங்கிகள் வைப்பு நிதி […]

தீபாவளிப் பண்டிகை என்பதால் போக்குவரத்து விதியை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படக்கூடது என அரசு அறிவித்துள்ளது.. குஜராத் அரசுஇது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளது. ’’ தீபாவளி நேரத்தில் மக்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் , அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி இந்த அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டார். அதில் , ’’ தீபாவிளை ஒட்டி குஜராத்தில் வரும் 27ம் தேதி […]

வரும் 25ம் தேதி புயல் உருவாகும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1அந்தமான நிக்கோபார் தீவின் அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வந்தது. இதன் காரணமாக அப்போது கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. காற்றழுத்ததாழ்வு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது..மேலும் , வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்க செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர்வதற்கு மத்திய அரசு , மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதன் படி தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு 2 தாள்களைக் கொண்டு நடத்தப்பட்டது. முதல் […]

10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் ரோஜ்கர் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்துள்ளார். இந்தியாவில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்ககும் ரோஜ்கர் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் 75,000 பேருக்கு முதல்கட்டமாக வேலை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணி ஆணையும் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இது அனைவருக்கும் வேலை வழங்கும் திட்டத்தின் […]

ஆந்திராவில் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்த விவசாயிக்கு காவல்துறை அதிகாரி உரிய நேரத்தில் சிபிஆர் சிகிச்சை செய்து உயிர்ப்பிக்கச்செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் அமராவதி விவசாயிகள் மகா பாதயாத்திரை நடத்தினர். அப்போது காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர் கம்மன் பாலத்தில் விவசாயிகள் வந்து கொண்டிருந்தபோது விவசாயி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.அப்போது சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரஹ்மேந்திர வர்மா உரிய நேரத்தில் வந்து அவருக்கு சி.பி.ஆர் […]

தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் இது பற்றி தகவலை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தபோது அமைச்சர் அன்பில் மகேஷிடம் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்படுவது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு அவர் , தீபாவளிக்கு மறு நாள் செவ்வாய்கிழமை விடுமுறை அளிப்பது என்பது பள்ளிக்கல்வித்துறையை சார்ந்தது மட்டுமல்ல […]

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாற உள்ளது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வடதிசையில் நகர்ந்து […]

பொன்னியின் செல்வன் நடிகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விரைவில் அவர் உடல் குணம் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவீட்டில் , ’’ எனக்கு கொரோனா தொற்று இருப்பது தற்போது உறுதியானது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி உள்ளேன். நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். […]

சூரிய கிரகணம் நாளில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு அடுத்த நாளான 25ம் தேதி சூரிய கிரகணம் நடைபெற உள்ளது. மாலை 5.10 மணிக்கு தொடங்கி 6.30 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிரகணம் நிகழும் நாளன்று பொதுவாகவே கோயில்கள் அனைத்தும் அடைக்கப்படும். திருப்பதி […]