திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு நேரத்தை நண்பகலுக்கு மாற்றக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரையை ஒட்டியவாறு அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெறவுள்ள மகா குடமுழுக்கு விழாவுக்காக மிகுந்த விமர்சையாக தயாராகி வருகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சி காலை 06.15 மணி முதல் 06.50 மணிக்குள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் முறையாக வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று […]

மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் 18 வயதான நர்சிங் மாணவி காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. சந்தியா சவுத்ரி என்ற அந்த பெண் வழக்கம் போல் நேற்று மருத்துவமனையில் பணி செய்து வந்தார். அப்போது அங்கு வந்த இளைஞன் மாணவியை சரமாரியாக தாக்கினார். மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் இருந்த போதிலும் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த […]

சிவகாசி அருகே கோலுலேஸ் ஃபயர் வொர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் கோலுலேஸ் ஃபயர் வொர்க்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் உள்ளே பல […]

நாம் தினமும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் நம் இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அவற்றில் உள்ள ரசாயனங்கள் மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவை ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கின்றன. அப்படியானால் அந்த விஷயங்கள் என்ன? அவற்றின் ஆபத்துகள் என்ன? இந்த பதிவில் பார்க்கலாம். இதய நோய் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வயதைப் பொருட்படுத்தாமல், இளைஞர்களும் இதயம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கிய […]

செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் மென்பொருள், மனிதவள மற்றும் கிரியேட்டிவ் துறைகள் அதிகம் பாதிப்பு. IBM, Microsoft உள்ளிட்ட நிறுவனங்கள் ஏராளமான பணிநீக்கங்கள் செய்துள்ளன. 2025ஆம் ஆண்டு தொழில்நுட்ப உலகத்திற்கு பெரும் சோதனைக் காலமாகவே அமைந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்ததன் விளைவாக, உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை Futurism என்ற பிரபல தொழில்நுட்ப ஊடகம் வெளியிட்டுள்ளது. நிரந்தரமான தொழில்களாகக் […]