சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தை போல மதுரையில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகரில் 60 பெண்கள் குளித்ததை ஆண் நண்பருக்கு அனுப்பியதாக புகார் எழுந்ததை அடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதே போல மதுரையில் இளம் பெண் ஒருவர் தனியார் தங்கும் விடுதியில் பிற பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து அனுப்பி வந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் […]
ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நாயை சாமர்த்தியமாக மற்றொரு நாயை சாமர்த்தியமாக காப்பாற்றும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. ஒருவர்மரக்கட்டையை தூக்கி ஆற்றில் வீசியதும் மரக்கட்டையை பிடிக்க விழுந்த நாய் மரக்கட்டையை வாயில் கவ்விக்கொண்டு நீந்த முடியாமல் தவிக்கின்றது. பின்னர் முயற்சித்து தான் கவ்விய மரக்கட்டையை கரையில் நின்றிருந்த நாய்க்கு கவ்வ சிறு இடம் கொடுத்தவுடன் அந்த மரக்கட்டையை வாயால்கவ்வி எடுத்து கரைக்கு மீட்கின்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. வாயில் கவ்விக் […]
அதிமுக-வில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக ஒரு கடைசி ஆயுதம் இருப்பதாகவும் தேவைப்படும்பட்சத்தில் அந்த பிரம்மாஸ்திரத்தை ஓ.பி.எஸ். எய்வார் என்று பேசப்படுவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்னர் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கட்சியை வழிநடத்தி வந்தனர். திமுகவில் ஒற்றை தலைமை பற்றி பேச்சு எழுந்ததால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதோடு இருவருமே தங்களது ஆதரவாளர்களுடன் […]
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பெற்றோர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தில் உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என கோரிசென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை ராமலிங்கம் வழக்கு தொடர்ந்தார். கடந்த முறை விசாரணையின்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இன்று வழக்கு நீதிபதி சிவஞானம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. சி.பி.சி.ஐ.டி. தரப்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. […]
திருச்சியில் பத்து ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் குறித்த வழக்கில்இதுவரை ஒரு சிறு துப்புகூட இதுவரை கிடைக்கவில்லை. திமுகவின் மூத்த தலைவரும் நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு அவர்களின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு ஒரு நாள் நடைபயிற்சிக்கு சென்றபோது கொடூரமாக கொலை செய்து வீசிச் சென்றனர். இந்த வழக்கு சுமார் 10 ஆண்டுகளாக நடைபெற்ற வருகின்றது. அதிமுக ஆட்சியின் போது இந்த […]
கேரள மாநிலம் இடுக்கி அருகே காட்டில் இருந்து வெளியேறிய யானைகளிடம் சிக்கிய இளைஞர் ஒருவர் மரத்தில் ஏறி உயிர் தப்பினார். கேரளாவில்அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து யானைகள்வெளியேறி குடியிருப்புபகுதிகளுக்குள் வந்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வெளியே வந்த காட்டு யானை குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்தது. அப்போது விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஷாஜி என்பவர் யானையை கவனிக்கவில்லை. […]
சென்னை அருகே பிரபல ரவுடியை மனைவியின் கண்முன்னே சரமாரியாக கத்தியால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே மறைமலை நகரின் தைலாவரம் பகுதியில் வசித்து வந்தவர் சேகர் (28). இவர் கஞ்சா , கொலை வழக்குகளில் சிக்கியுள்ள பிரபல ரவுடியாவார். பல கொலைகளில்தொடர்புடையதால் இவருக்கு எதிரிகள் அதிக அளவில் இருந்துள்ளனர். இதனால் வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகர் தைலாபுரத்தில் மாமியார் […]
சின்னத்திரை சீரியல்களில் நீண்ட காலம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சீரியல் ஒன்று தற்போது ஒரு வழியாக முடிவுக்கு வரவுள்ளது. சன்டிவியில் பிரபலமான சீரியல்களில் நெடு ஆண்டுகளாக ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் வள்ளி , கல்யாண பரிசு , கோலங்கள் , வாணி ராணி போன்ற பிரபல சீரியர்கள் 1500 எபிசோட்கள் வரை ஒளிபரப்பப்பட்டது. விஜய்டிவியின் சரவணன் மீனாட்சி(1901 எபிசோட்) , சன்டிவியின் வள்ளி (1961)ஆகிய நெடுந்தொடர்கள் 1900 எபிசோட்கள் ஒளிபரப்பானது. இதுவரை […]
விஜய் டிவில் முக்கிய நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ராமர்.. தற்போது முன்பைப் போல விஜய் டிவி நிகழ்ச்சிகளில் அவர் தோன்றாததால் ராமரை விஜய் டி.வி. ஒதுக்குகின்றதா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். விஜய் டி.வி.யின் அனைத்து ஷோக்களிலும் ராமர்இருப்பார். ஆனால் தற்போது ராமரை பார்க்கவே முடிவதில்லை. ’’என்னம்மா இப்படி பண்ட்றீங்களேம்மா’’ என்ற வசனத்தை நகைச்சுவையாக மாற்றிய ராமர் பின்னர் பெண் வேடங்களில் நடித்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் போல நடித்து […]
வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு குரல் கொடுத்ததற்காக கூல் சுரேஷுக்கு ஐசரி கணேஷ் பரிசு ஒன்றை வழங்கினார். வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ஆதரவாக கூல் சுரேஷ் தனிப்பட்ட முறையில் சிம்புவுக்காகவும் , படம் வெற்றியடையவும் புரோமோஷன் செய்து வந்தார் ’’ வெந்து தணிந்தது காடு வணக்கத்தை போடு’‘ என்பது போன்ற வாசகங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது. இதற்காகவே பலர் படத்தை பார்த்தனர் எனக்கூறலாம். படத்தின் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு இயக்குனர், […]