கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு நடந்த படகு போட்டியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உற்சாகமாக கலந்து கொண்டார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கி.மீ. தூரம் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி புதன்கிழமை கன்னியாகுமரியில் தொடங்கினார். களியக்காவிளை அருகே உள்ள தலச்சன் விளையில் கடந்த சனிக்கிழமை தமிழக பயணத்தை நிறைவு செய்தார். அவர் கன்னியாகுமரியில் 4 நாட்களில் 56 கி.மீ. தூரம் கடந்தள்ளார். தமிழகத்தில் […]
வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். முதலில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் சிறப்பு காட்சிகளில் வருவது போல இயக்கப்பட்டது பின்னர் முழு நீள திரைப்படமாக மாற்றினார். இதனால் படப்பிடிப்புகள் நிறைவடைவதில் தாமதமானது என இயக்குனர் வெற்றி மாறன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த திரைப்படம் 2 பாகங்களாக வெளியிடப்படுகின்றது. உதயநிதி ஸ்டாலினின் […]
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு நடிகையால் தான் படத்தில் நடிப்பதையே நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை டி.வி. தொகுப்பாளராக நாம் பார்த்திருக்கின்றோம். சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிஷ்ணன் . இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். சில வருடங்களாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கு என்ன காரணம் என்று அவரே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கின்றார். நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகர் அருண் விஜயின் […]
ஹிஜாப் சரியாக அணியாததால் ஈரானில் தாக்கப்பட்டு இளம் பெண் ஒருவர் உயிரிழந்தார் . இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மற்ற பெண்களும் ஹிஜாப்பை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரானில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அங்கு ஹிஜாப் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது . நேற்று ஈரானைச் சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண் ஒருவர் டெஹ்ரானுக்கு தனது குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அவர் சரியாக […]
பெருந்தொற்று நோயானா கொரோனா அமெரிக்காவில் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பல கோடி மக்களை பாதித்தது. லட்சக்கணக்கானோர் இதில் உயிரிழந்தனர். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து வர்த்தகம் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது பல நாடுகள் இயல்புநிலைக்கு திரும்பியிருந்தாலும் தொடர்ந்து பாதிப்புகள் ஆங்காங்கே உள்ளது . இது குறித்து ஜோ பைடன் கூறுகையில் ’’ அமெரிக்காவில் […]
வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் திரைப்படம் எடுக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கண்டிஷன் போட்டுள்ளார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்து கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் படக்குழுவினர் பத்திரைகையாளர்களை சந்தித்தனர். இதில் சிம்பு , நீரஜ் மாதவ் , ஒளிப்பதிவாளர் , சித்தார்த்தா, படத்தொகுப்பாளர், ஆண்டனி , தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோர் […]
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் எனவே பெரும்பாலான மக்கள் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். ஆனால் உண்மையில் அசைவம் சாப்பிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் என உங்களுக்கு தெரியுமா ? கோவில்கள் , காய்கறிக்கடைகளில் பொதுவாக புரட்டாசி மாதத்தில் மட்டும் கூட்டம் அலைமோதும் . அசைவ கடைகளில் அந்த மாதம் முழுவதும் வியாபாரம் பெரிய அளவில் நடக்காது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால்தான் […]
ஒரு சிலரைப் பொருத்தவரை கொசுக்கள் மற்றவர்களைக் காட்டிலும் எதிரிதான. ஒவ்வொருவரின் உடல் சூடு மற்றும் உடலில் இருந்து வெளியேற்றப்படும் நறுமணம் மற்றும் இயற்கையாகவே தோல் சுவாசிக்கும் தன்மையைப் பொறுத்து கொசு கடிக்கின்றது…. ஒருவரின் உடலில் இருந்து வெளியேறக்கூடிய துர்நாற்றம் அவர் உண்ணும் உணவைப் பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். சில உணவுப்பொருட்கள் அவர்களின் ஈர்ப்பைபொருத்து பாதிப்பை ஏற்படுத்துமா என ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ள தகவல்களை பார்க்கலாம். […]
பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்தவுடன் காஃபி குடித்த பின்பே மற்ற வேலைகளை தொடங்குவார்கள். மற்ற ஆரோக்கியமான விஷயங்களில் யாரும் கவனம் செலுத்துவதில்லை இதுதான் நிதர்சமான உண்மை… காலையில் தினமும் காஃபி பருகும் போது ’கேஃபைன் ’ என்ற காபியில் உள்ள மூலக்கூறு உங்களை எழுப்பிவிட்டு உங்கள் இதயத்தை சுறுசுறுப்பாக்கி , ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரித்து , உடலை சூடாக்கி மூளையை செயல்படவைக்கின்றது. ’கேஃபைன் ’ என்ற மூலக்கூறில் […]
சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டத்தை செக்குடியரசு வீராங்கனை லிண்டா புருவில் தோவா தட்டிச்சென்றார். சென்னை ஓபன் டென்னிஸ் சர்வதேச போட்டி நுங்கம்பாக்கத்தில் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்தது. இந்த டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் 32 வீராங்கனைகள், 16 இணைகள் இரட்டையர் பிரிவில் விளையாடினார்கள் . நேற்று நடைபெற்ற அரையிறுதியில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா புருவில் தோவா வெற்றி பெற்று இறுதிக்கு […]