புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர், சீனியர் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி, புள்ளியியல் நிபுணர் போன்ற பதவிகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இதன் மூலமாக, ஒட்டுமொத்தமாக 116 இடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பதற்கான ஒதுக்கீடு அரசு அறிவிப்பின்படி பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் வருவாய் துறை மூலமாக வழங்கப்பட்ட சரியான சான்றிதழை சமர்ப்பித்து இட ஒதுக்கீட்டை உறுதி […]
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவர் தொடர்பான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற நிலையில், தற்போது மீண்டும் ஒரு அமைச்சரை அமலாக்கத்துறை சுற்றி வளைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தான் அமைச்சர் பொன்முடியின் இல்லம் அவர் தொடர்பான […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள புதுப்பேட்டை அருகே இருக்கின்ற கோட்லாம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி (56) கூலி தொழிலாளியான இவருடைய மகள் சுபாஷினி (28) இவருக்கும், வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது, மேலும் இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இதற்கு நடுவே கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவனும், மனைவியும் பிரிந்து […]
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை. சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனியில் இருக்கின்ற பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை தற்போது சோதனை நடத்தி வருகிறது. இவர் மீது போடப்பட்டிருந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் இவரை சமீபத்தில் விடுதலை செய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறை தற்போது இவர் தொடர்பான இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. நீதிமன்றம் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று தெரிவித்து விடுதலை செய்துவிட்ட நிலையிலும், […]
மத்திய பிரதேசம் மாநிலத்தின் தாதியா மாவட்டத்தில் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்துள்ளதாகவும், அந்த பெண்ணின் சகோதரியான சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரின் மகன் உட்பட 4 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. மத்திய பிரதேசம் மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவின் சொந்த தொகுதியில் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. பாதிப்புக்கு உள்ளான பெண்களின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் […]
இஸ்ரோவின் சந்திராயன்3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்த பூடான் நாட்டு பிரதமருக்கு தன்னுடைய நன்றியை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பூடான் பிரதமரின் அலுவலகம் சார்பாக ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது சந்திராயன் 3 திட்டத்துக்கான விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் சந்திராயன்3 திட்டத்தால் மனித குலம் சிறப்பாக பயனடையட்டும் என்று அவர் பதிவிட்டு இருக்கிறார். அவருடைய இந்த பதிவுக்கு பதில் […]
கும்பகோணம் காசிராமன் தெருவில் இருக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் பள்ளியில் சென்ற 2004 ஆம் வருடம் ஜூலை மாதம் 16ஆம் தேதி தீ விபத்து உண்டானது இந்த கொடூர தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர் 18 குழந்தைகள் காயமடைந்தனர். வருடம் தோறும் இந்த உயிரிழந்த குழந்தைகளின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது அதன்படி 19 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. […]
தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கு தகுதியான பெண்களை கண்டறியும் பணி ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் ஆரம்பமாக இருக்கிறது இந்த சூழ்நிலையில் தான் சென்னை மாநகராட்சி இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதத்தில் இருக்கின்ற பயோமெட்ரிக் கருவிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்பு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களிடம் […]
தமிழகத்தில் இருக்கின்ற அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம் பி பி எஸ், பி டி எஸ் போன்ற இடங்களுக்கு இணையதளங்களின் மூலமாக விண்ணப்பம் செய்வது கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 12ஆம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக இதற்கு விண்ணப்பம் செய்தனர். […]
சென்ற சில தினங்களாகவே வட மாநிலங்களில் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் சூழ்நிலையில், கனமழை மிகவும் கடுமையாக பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ளமும் ஏற்பட்டிருக்கிறது. அந்த விதத்தில் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, இதுவரையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர் அதேபோல ஹரியானா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் […]