நாள்தோறும் நாம் சமையலில் சேர்த்துக் கொள்ளும் பொருட்களில் மிகப்பெரிய மருத்துவ குணம் கொண்டது பெருஞ்சீரகம் என்று சொல்லப்படும் சோம்பு. அதன் எண்ணற்ற பயன்கள் தொடர்பாக தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். பெருஞ்சீரகத் தண்ணீரை குடித்து வருவதால் உடலில் ஹார்மோன் சமநிலை உண்டாகிறது. கோடை காலத்தில் உண்டாகும் செரிமான பிரச்சனை பெருஞ்சீரக தண்ணீரை குடித்தால் குணமாகும் என்றும் கூறப்படுகிறது. பெருஞ்சீரகத்தை மென்று அதன் பிறகு தண்ணீர் குடித்தால் வாயு தொந்தரவு பிரச்சனைகளுக்கு […]
செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறையை அடுத்துள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் நீலகண்டன் (35) இவர் பாஜகவின் உறுப்பினராக இருக்கிறார். அதோடு அந்த பகுதியில் அந்தக் கட்சியின் முக்கிய ஆதரவாளராகவும் காணப்படுகிறார். இந்த நிலையில் தான் கடந்த 24ஆம் தேதி அவருடைய இருசக்கர வாகனம் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த போது நள்ளிரவு நேரத்தில் திடீரென்று தீ பற்றி எரிந்தது. இதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் […]
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்( 65). இவரும், புலிப்பாக்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரும் பல்லாவரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஒன்றாக பணியாற்றி வந்தனர். இந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடம் அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையில் தகராறு உண்டாகி உள்ளது. இதில் மனோகரனை கீழே தள்ளிவிட்ட சக்திவேல், அவரை தாக்கியுள்ளார். இதன் காரணமாக, தலையில் பலத்த காயமடைந்த மனோகரன் […]
திருப்பூரைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20ம் தேடி வயிற்று வலி உண்டானது. இதனை தொடர்ந்து திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் அவரது பிரேத பரிசோதனையில் கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டதால் தான் சிறுமி உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் பெற்றோரிடம் வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி கர்ப்பமாக […]
தமிழக தலைமைச் செயலாளர் சிவராஜ் மீனா பிறப்பித்திருக்கும் உத்தரவில் உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மகளிர் உரிமைத் தொகை திட்ட சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த கார்த்திகேயன் நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீத்தா ஹரிஷ் தக்கர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். […]
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் சார்பாக இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற 9 மாவட்டங்களில் வாழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஓரிரு பகுதிகளில் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அத்திக்குன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் நேற்று அத்திக்குன்னா பகுதியில் இருக்கின்ற தேயிலை தோட்டத்தில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது என்பவரின் மகன் என்ற சிறுவன் அத்திக்குன்னா ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அந்த சிறுவன் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது […]
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், 2வதாக பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதோடு பவித்ராவிற்கும் இது 2வது திருமணம் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில தினங்களாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடைபெற்ற […]
மேகதாது அணை விவகாரம் குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதம் செய்ய உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக கர்நாடக நீர் பாசனத்துறை அமைச்சர் டி.கே சிவகுமார் குற்றம் சாட்டி இருப்பது அதிர்ச்சி அளிக்கும் விதமாக […]
தமிழ்நாட்டில் பொதுவாக சனாதனம் பற்றி திமுகவும், அதன் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தான் அதிகம் பேசுவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தைச் சார்ந்த பல கட்சிகள் இந்த சனாதனத்தை வைத்து தான் அரசியல் செய்து வருகிறார்கள் என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது தமிழக ஆளுநர் ஆரியன் ரவி சனாதன தர்மத்திற்கு ஆதரவாக சமீப […]