விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற 7000 பண்ணை மருதுபாண்டியர் நகரில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகின்றார் இவருக்கு தேவி என்ற மனைவியும் இருக்கிறார் ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக, மனைவியை அவர் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் பாலமுருகன் 7000 பண்ணை பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது. அந்த சமயத்தில் அந்த பகுதிக்கு வந்த தேவியின் சகோதரனான துணை இராணுவ படை வீரர் மணிமாறன் பாலமுருகனை […]

தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் வழங்கியிருக்கின்ற கடிதத்தில் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியிருக்கிறார். அதாவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் ஆளுநர். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் […]

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி ஏற்பட்டதால் முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு பைபாஸ் சிகிச்சை செய்யப்பட்டு தற்போது தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே அவர் அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் தான் மருத்துவமனையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான உத்தரவை சென்னை மாவட்ட […]

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம் புதுப்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான விதத்தில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரும் பாண்டி மற்றும் கருப்பன் என்பவர்கள் தான் என தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் கஞ்சாவை மறைத்து வைத்து கடத்திச் சென்றதாகவும் காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது தொடர்பாக வழக்கு […]

மேட்டூர் அருகே உள்ள கருமலை கூடல் பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேல், இவருடைய மகன் சிபி(25). இவர் மீது கொலை வழிப்பறி அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அதோடு,கருமலைக்கூடல் காவல் நிலைய குற்ற பதிவேடு பட்டியலிலும் இவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் புதுசாம்பள்ளியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில் கொடூரமான முறையில் இவர் […]

கடந்த ஏப்ரல் மாதம் 16 வயது சிறுமியை 68 வயது முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதனை அந்த முதியவரின் செல்போனில் வீடியோ எடுத்தபடியே இந்த முதியவரின் மகன் வேடிக்கை பார்த்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் நடைபெற்று 2️ மாத காலங்கள் ஆன நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை தான் பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல்துறையை அணுகி புகார் வழங்கியிருக்கிறார். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரின் […]

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகன் அசோக்குமார்(29) இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான ராணுவ வீரர் சுரேஷ்(27) என்பவருக்கும் இடையே வெகுகாலமாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆகவே வழக்கறிஞர் அசோக்குமாருக்கு ஆதரவாக அவருடைய பெரியப்பா துரைராஜ்(57) என்பவர் பேசி வந்ததால் ஆத்திரம் கொண்ட ராணுவ வீரர் சுரேஷ் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் […]

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் செயல்பட தொடங்கிவிட்டனர். மாணவர்களும் அடுத்ததாக தங்களுடைய தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்றுடன் ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் தான் அவருடைய கடைசி உத்தரவு பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. மாணவர்களின் புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் எதுவாக குறைந்து வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே வாசிப்பு பழக்கத்தை […]

பள்ளி மாணவர்களுடைய பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியின் காலை 10 மணி அளவில் இந்த போட்டி நடைபெற உள்ளது. […]

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் மாதம் 30ஆம் தேதி ஆன இன்றுடன் முடிவுக்கு வருகிறது.இதற்கான காலக்கெடு இதற்கு முன் பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது பான் எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவை இணைப்பதற்கான கால அவகாசம் இந்த மாத இறுதிக்குள் முடிவு பெறுகிறது. முதலில் மார்ச் மாதம் 30ஆம் தேதி வரையில் […]