சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (34) இவருடைய மனைவி சரண்யா இவர்கள் தங்களுடைய இரண்டு குழந்தைகளுடன் திருப்பதிக்குச் சென்றனர். அதன் பிறகு ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் மும்பையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்ட அதிவிரைவு ரயிலில் கடந்த 25 ஆம் தேதி இரவு 7:20 மணி அளவில் ஏறியுள்ளனர். இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் 2ம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ரமேஷ் ஏறியுள்ளார். முன்னதாக அவரது மனைவி […]

மதுரை மாவட்டம் எம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவானூர் கோவில் திருவிழாவில் முதல் மரியாதை பெறுவதில் அதிமுகவின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலம், திமுகவின் கிளை செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட இரு தரப்பினருக்கு இடையே பிரச்சனை எழுந்தது. இது குறித்து இருதரப்பினரும் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். அதன் ஒரு பகுதியாக கருவானூரில் இருக்கின்ற முன்னாள் சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலத்தின் வீட்டுக்குள் வேல்முருகன் தரப்பினர் புகுந்து தாக்குதல் நடத்தி அங்கிருந்த […]

கன்னியாகுமரி மாவட்ட எல்லை பகுதியான களியக்காவிளை அருகே இருக்கின்ற பரசு வைத்தல் பகுதியில் இரயில் தண்டவாளத்திலிருந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கொல்லங்கோடு அருகே இருக்கின்ற ஊரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் – அக்‌ஷால் தம்பதியின் மகள்தான் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரிய வந்தது. […]

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் இருக்கின்ற கிராவாலி கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுவீர்சிங் (62). ரகுவீர்சிங்கிற்க்கு 2 மகன்கள் என்று கூறப்படுகிறது. மூத்த மகன் சமீபத்தில் மரணம் அடைந்த நிலையில், அவருடைய மனைவி மாமனார் வீட்டிலேயே தான் வசித்து வருகிறார். ரகுவீரின் 2வது மகனான கௌரவ் சிங் பருக்காபாத் காவல் நிலையத்தில் கான்ஸ்டேபிலாக பணியாற்றுகிறார். இவருக்கு பிரியங்கா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றனர் இந்த நிலையில் ஒரே […]

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்துள்ள உறையூரில் சென்ற 23ஆம் தேதி ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 19 சவரன் நகை மற்றும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் உள்ளிட்டவற்றை 2 பேர் திருடிக் கொண்டு அந்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சென்னை கொளத்தூரைச் சேர்ந்த யுவராஜ், பாலாஜி உள்ளிட்டோர் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டனர் என்ற விவரம் தெரிய […]

பஞ்சாப் மாநிலம் முக்த்சார் மாவட்டத்தில் பகர்சார் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் குல்விந்தர் சிங்(19) இவருடைய தந்தை 5️ வருடங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். ஆகவே குல்விந்தர் தற்சமயம் தன்னுடைய தாய் விர்பால் மற்றும் 2 தங்கைகளுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. குல்விந்தரின் மூத்த தங்கையான அஞ்சு(17) என்பவர் ஒரு நபரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில்தான், அஞ்சுவின் காதல் விவகாரம் […]

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அருகே உள்ள மேககாமண்டபத்தை அடுத்துள்ள பிலாங்காலை பகுதியில் வசித்து வந்த பிபின்- பிரியா தம்பதியரின் 3️ வயது மகன் ஆத்விக். அந்த சிறுவன் கடமலை குன்று பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றார். இத்தகைய நிலையில், காரில் பல்லுக்கு சென்ற அந்த சிறுவனை இருசக்கர வாகனம் மற்றும் காரில் வந்த 20 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று கடத்திச் சென்றது. பட்ட பகலில் […]

கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த 2️ வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்து அதன் பின்னர் நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் குரூப் 2ஏ பதவிகளுக்கான சென்ற பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது இதில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்த 55,071 நபர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இந்த நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ […]

பொதுவாக எல்லோரும் தங்களுடைய பள்ளிப்பருவ காலங்களை நினைத்துப் பார்க்கும்போது பரவசமடைவார்கள். ஏனென்றால் அந்த பள்ளிப் பருவ காலத்தில் தான் தற்போதுள்ள எந்தவித பிரச்சனையும் தங்களுடைய மனதை பாதிக்காமல் இருந்ததாகவும் அவர்கள் கருதுவார்கள். இன்னும் சொல்லப்போனால் நாம் பள்ளி அல்லது கல்லூரிகளில் மாணவராகவே இறுதிவரையில் இருந்திருக்கலாமோ என்று நினைக்கும் மனிதர்களும் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு மாய உலகம் அந்த மாணவர் பருவத்தில் தான் கிடைக்கும். ஆனால் அந்த மாணவர் […]

பொதுவாக பண்டிகை காலம் என்று வந்து விட்டாலே சென்னையில் இருக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் வாசிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்புவது வழக்கம். அந்த வகையில், நாளை தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதிலும் வார இறுதி நாட்களில் இந்த பக்ரீத் பண்டிகை வருவதால் மாநிலம் முழுவதும் இருந்து தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று திரும்புவார்கள் பொதுமக்கள். ஆகவே பயணிகள் […]