தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், தற்போது அதன் தீவிரம் குறைந்து காணப்படுகிறது. இந்த சூழலில், வரவிருக்கும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தனது முழு வீரியத்தை காட்டி, மீண்டும் பல பகுதிகளில் நல்ல மழையைப் பதிவு செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்துத் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய அக்டோபர் மாதம், தமிழகத்தில் பரவலாக […]
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக தள்ளுவண்டி கடைகளின் எண்ணிக்கை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கடற்கரைகள், பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் போன்ற இடங்களில் உணவுப் பொருட்களைத் தள்ளுவண்டிகளில் வைத்து விற்பனை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறைக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து, தமிழக உணவுப் பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தள்ளுவண்டிகளில் உணவுப் […]
“மண்ணிலும் பொன்னிலும் போடும் பணம் எப்போதும் வீண் போகாது” என்ற ஒரு பழமொழி முதலீட்டு உலகில் பரவலாகப் பேசப்படுவதுண்டு. அதாவது, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகிய இரண்டிலும் செய்யப்படும் முதலீடுகளே நீண்ட காலத்தில் அதிக லாபத்தை தரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ளது. அதற்கு ஏற்ப, இன்றும் இந்த இரண்டு துறைகளிலும் மக்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்து வருகின்றனர். இருப்பினும், பெரும்பாலான முதலீட்டாளர்கள் மத்தியில், இந்த […]
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்துப் புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் சரியாக இருக்கிறதா, நீக்கப்பட வேண்டிய பெயர்கள் உள்ளனவா மற்றும் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டுமா போன்ற விவரங்களை சரிபார்ப்பதே இந்தப் பணியின் நோக்கமாகும். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கிய இந்தத் திருத்தப் பணிகள், டிசம்பர் 4ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளதால், சுமார் […]
சென்னை தியாகராயநகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள இராமச்சந்திரா தெருவில் அமைந்திருக்கும் ‘மங்கள வில்லா’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் வசிக்கும் கிரிதர் என்பவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவத் தொடங்கியதால், கிரிதர் மற்றும் அவரது குடும்பத்தினர் சத்தமிட்டவாறே […]
வேலையில் இருக்கும் ஆர்வம் மற்றும் அழுத்தம் காரணமாக பலரும் தங்கள் மதிய உணவை தவிர்ப்பது இன்று மிகவும் பொதுவான பழக்கமாகிவிட்டது. காலை உணவை தவிர்த்துவிட்டு, வெறும் காஃபி அல்லது டீயுடன் நாளை தொடங்கி, மதிய உணவையும் தவிர்ப்பது மிகவும் மோசமான பழக்கமாகும். இதனால், பணியிடத்தில் நீங்கள் கெட்டிக்காரராகப் பெயர் வாங்கலாம். ஆனால், உங்கள் உடல்நலத்தைப் பராமரிப்பதில் நீங்கள் பூஜ்ஜியமாகி விடுகிறீர்கள். தொடர்ந்து இவ்வாறு இருப்பது, உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் […]
சமீபகாலமாக, உடல் எடையை குறைக்கும் முயற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர்கள் மத்தியில், சுரைக்காய் ஜூஸ் (Lauki Juice) மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்தப் பானம் உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன், பல அரிய மருத்துவப் பலன்களையும் அளிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடல் எடை குறைப்பு: சுரைக்காயில் கலோரிகள் மிகக் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது பசியை கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை தருவதால், தேவையற்ற […]
நிலம், வீடு, மனை தொடர்பான தகராறுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் போன்றவை மனித வாழ்க்கையில் மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியப் பிரச்சனைகளாகும். இத்தகைய பூமி சார்ந்த சிக்கல்களில் இருந்து விரைவில் விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கையை அடையச் செய்யும் சக்தி வாய்ந்த தெய்வமாக வராஹி தேவி போற்றப்படுகிறார். இவர், லலிதா பரமேஸ்வரியின் ஐந்தாவது சக்தியாக, பஞ்சமி சக்தியாக விளங்குபவர். பூமியை ஆழத்திலிருந்து தம் கொம்புகளால் மேலே உயர்த்திய வராக அவதாரத்தின் […]
கோவை மாவட்டம் பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவி சரவணகுமாரின் மனைவி மகேஸ்வரி (47) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் கவி சரவணகுமாரே கூலிப்படையை வைத்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த மாதம் 28 ஆம் தேதி, பன்னிமடைப் பகுதியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டில், அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில், அவரது 15 ஆண்டுகால […]
மும்பையில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்த 35 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசப் படங்களை வைத்து மிரட்டியதாக, அதே வீட்டில் பணியாற்றிய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மதச் சடங்கு ஒன்றை செய்வதாக நம்ப வைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் மும்பை கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அவருக்குப் போதைப்பொருள் கலந்த பானத்தை […]

