இன்றைய வேகமான உலகில், விடியலில் தொடங்கி அந்தி சாயும் வரை மனித இனம் எதை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது என்று கேட்டால், அதற்குப் பணம் என்பதே பிரதான பதிலாக இருக்கும். “பணம் மட்டுமே வாழ்க்கையல்ல” என்று தத்துவங்கள் பேசினாலும், அடிப்படை தேவைகள் முதல் ஆடம்பரங்கள் வரை அனைத்திற்கும் அதன் தேவை இன்றியமையாததாகவே இருக்கிறது. ஆனால், இந்தச் செல்வத்தை சேர்ப்பதற்கும், வளமான வாழ்வை அமைப்பதற்கும் ஒரு அறிவியல் இருக்கிறது என்று சொன்னால் நம்ப […]

திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், நீண்ட நாட்களாக பூட்டியிருந்த வீட்டிற்குள் மர்ம நபர்களின் நடமாட்டம் இருப்பதாக அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்தது. உள்ளே இருந்து சத்தமாகப் பேச்சுக்குரல்களும், கும்மாள சத்தமும் கேட்டதையடுத்து, பொதுமக்கள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கதவு திறக்கப்பட்டபோது உள்ளே இருந்த காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் உறைந்து போயினர். சுமார் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 6 சிறுமிகள் மற்றும் 3 சிறுவர்கள் […]

நாடாளுமன்ற அரசியலில் இருந்து மெல்ல மாநில அரசியலுக்கு தனது கவனத்தை திருப்பி வரும் திமுக எம்.பி. கனிமொழி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி என தென் மண்டலத்தின் ஒட்டுமொத்தப் பொறுப்பையும் கவனித்து வருகிறார். தென் மண்டல திமுகவினர் கனிமொழியின் தலைமையின்கீழ் ஓரணியில் திரண்டு வருகின்றனர். இந்த சூழலில், முதல்வரின் மருமகன் சபரீசனின் என்ட்ரி கனிமொழிக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. கனிமொழி ஏற்கனவே கவனித்து வரும் அதே மாவட்டங்களில், சபரீசன் தனது குழுவினருடன் திடீர் […]

தமிழ்நாட்டில் நிலவும் பறவைக் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கள், சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ‘ஹாஃப்-பாயில்’ சாப்பிட வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியது முட்டையை குறிப்பிடுவதாகப் பரவலாக புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக அமைச்சர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பறவைகள் அல்லது […]

அமெரிக்காவை அதிரவைத்த ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்திற்கு இணையான ஒரு கொடூரமான குற்றச்சம்பவம், கடந்த 2006-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள நிதாரி கிராமத்தில் அரங்கேறியது. இந்தியாவையே நிலைகுலைய வைத்த இந்த வழக்கில், தொழிலதிபர் மொகிந்தர் சிங் பந்தேர் மற்றும் அவரது வீட்டு வேலைக்காரன் சுரேந்தர் கோலி ஆகிய இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்களைக் கடத்தி, அவர்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் […]

திமுகவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், உடல்நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 87 வயதை கடந்த நிலையில், வயது மூப்பு சார்ந்த உடல்நலப் பிரச்சனைகளை சந்தித்து வரும் அவர், நேற்று (பிப்ரவரி 10) எதிர்பாராத விதமாக தனது இல்லத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் விழுந்ததில் ஏற்பட்ட காயங்களுக்கு […]

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM), இந்திய கிராமப்புறப் பெண்களின் பொருளாதார நிலையில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில் நிலவும் வறுமையை வேரோடு ஒழிப்பதையும், சுமார் 10 கோடி ஏழைக் குடும்பங்களைச் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைப்பதையும் இந்தத் திட்டம் தனது முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி […]

கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன், 41 உயிர்கள் பறிபோவதற்குக் காரணமானவர்களை முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்காமல் கரூர் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார். “நிஜமான துணிச்சல் இருந்திருந்தால், அந்தத் துயரச் சம்பவத்தின்போது விஜய் கரூரை விட்டு ஓடியிருக்கக் கூடாது” என்று கூறிய அவர், […]

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அடுத்த பேயன்பட்டி ஜீவா நகரைச் சேர்ந்த நந்தகுமார் (26) என்ற வாலிபர், கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி கழுத்தில் குத்தப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். கூலித் தொழிலாளியான இவர், ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஜெயராமன் கொலை வழக்கில் நந்தகுமார் தொடர்புடையவர் என்பதாலும், அவர் சமீபத்தில்தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தார் என்பதாலும், பழைய பகையால் […]

தமிழக அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்நிலையில், தனது நீண்டகால அரசியல் சகாவான செங்கோட்டையனின் இந்த முடிவை, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மிகுந்த மனவேதனையுடனும், அதேசமயம் கடும் விமர்சனங்களுடனும் சாடியுள்ளார். திண்டுக்கல் சீனிவாசன் இது குறித்துப் பேசுகையில், “அதிமுகவில் அமைச்சராகவும், கட்சியின் அசைக்க முடியாத தூணாகவும், எப்போதும் முதலிடத்தில் இருந்தவர் […]