தமிழக அரசியலில் பல்வேறு யூகங்களையும் குழப்பங்களையும் ஏற்படுத்தியிருந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் திடீரெனச் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்குப் பிறகு, ஓபிஎஸ் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பியார் சோலா பகுதியைச் சேர்ந்த குழந்தை இயேசு என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது மனைவி பிரிசிலாவின் தாய் மாமன் மகன் பிரேம் என்பவருக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதற்கிடையே, பிரேம் வேறு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பால் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். பிரேம் பங்களா வாங்க வேண்டும் என்று கூறி […]
நமது அன்றாட உணவில் முட்டை முக்கியப் பங்கு வகித்தாலும், கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து, பிரபல நரம்பியல் மருத்துவர் சுதிர் குமார் தனது எக்ஸ் தளத்தில் முக்கியமான விளக்கங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, முட்டை சாப்பிடுவதில் யாரெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் வழங்கிய அறிவுரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு ஒரு முட்டை போதுமா..? அதிக […]
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால், குழந்தையின் உணவில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பிறந்த குழந்தை 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே குடிப்பது அவசியம் என்றாலும், சில சமயங்களில் உடல்நலப் பிரச்சனைகள் அல்லது வேறு காரணங்களால் தாயால் பால் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில், குழந்தைக்குப் பசும்பால் கொடுக்கலாமா, அப்படி கொடுப்பது ஆரோக்கியமானதா என்பது குறித்துப் பிரபல குழந்தைகள் […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), தற்போது சிறப்பு அதிகாரி (Specialist Cadre Officer – SO) பிரிவில் மொத்தம் 996 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதவி மற்றும் காலியிடங்கள் : VP Wealth (SRM) – 506 AVP Wealth (RM) – 206 Customer Relationship Executive (CRE) – 284 கல்வித் தகுதி : அனைத்துத் […]
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், இரண்டு குற்றவாளிகளை முதலகி காவல் நிலையப் போலீஸார் கைது செய்துள்ளனர். காவல்துறையின் கூற்றுப்படி, முதலகி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மணிகாந்த என்பவர், சிறுமியை அருகில் உள்ள கரும்புத் தோட்டம் ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மற்றொரு நபரான ஈரண்ணா என்பவர் மீதும் இந்த […]
தமிழ்நாடு அரசின் பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், தினசரி பால் பாக்கெட்டுகள் மட்டுமின்றி நெய், பன்னீர், தயிர் போன்ற பால் பொருட்களையும் குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், பண்டிகை காலத்திற்காக வழங்கப்பட்ட தள்ளுபடிகளை நிறுத்தியதன் மூலம், ஆவின் நெய் மற்றும் பன்னீர் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 செப்டம்பர் மாதம் பண்டிகை காலத்தை ஒட்டி […]
கடந்த ஓராண்டாக தொடர்ந்து உச்சத்தில் பறந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது சற்று ஆசுவாசமடைந்து நிலையாக உள்ளது. சில நாட்கள் லேசான ஏற்றம் கண்டாலும், பெரியளவிலான விலை உயர்வு இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது. இந்தச் சூழலில், வரும் காலங்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும், இனியும் அதன் ஏற்றம் தொடருமா என்பது குறித்துப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு தங்கத்தின் […]
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், தகுதியுள்ள மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று நடப்பு ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த மாதமே தொடங்கி வைக்க உள்ளார். மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் […]
கார்த்திகை பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். இந்தப் புனித நாளில் சிவபெருமான், பெருமாள், முருகன், அம்பிகை, குலதெய்வம் மற்றும் செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி ஆகிய தெய்வங்களை வழிபடப் பல மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். கிருத்திகை நட்சத்திரத்துடன் இணைந்து வரும் கார்த்திகை பௌர்ணமியில் நாம் செய்யும் வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மங்கள காரியங்கள் அனைத்தும் பல மடங்கு பலனை திருப்பிக் கொடுக்கக் கூடிய […]

