இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு இணையாக வெள்ளியிலும் தங்கள் முதலீடுகளைத் திருப்பியுள்ளனர். குறிப்பாக, கடந்த சில மாதங்களில் பங்குச்சந்தை மற்றும் பத்திரங்கள் போன்ற பல சொத்து வகைகளை வெள்ளி விஞ்சியுள்ளது. இதன் விளைவாக, முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் மிக முக்கியமான முதலீட்டு ஆதாரமாக வெள்ளி வேகமாக வளர்ந்து வருவதாகச் சந்தை நிபுணர்கள் […]

சபரிமலை ஐயப்பன் யாத்திரை செல்வதற்கு என்று சில பாரம்பரியமான மற்றும் புனிதமான வழிமுறைகள் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து, முறையாக விரதம் மேற்கொண்டு யாத்திரையை நிறைவு செய்தால்தான், அந்தப் பயணத்தின் முழுப் பலனும் ஐயப்ப பக்தர்களுக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இருப்பினும், ஆரம்ப காலத்தில் இருந்த கடுமையான நடைமுறைகள் இன்று தளர்த்தப்பட்டு, பெரும்பாலான பக்தர்கள் எளிதான பாதையையே தேர்வு செய்கிறார்கள். சபரிமலை ஐயப்பனைத் தரிசிப்பதற்கான சரியான […]

நம்முடைய ஆன்மீக வழிபாடுகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது தீப வழிபாடாகும். முறையான பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் தெரியாதவர்கள் கூட, காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் விளக்கேற்றி, அதற்கு நமஸ்காரம் செய்தாலே போதும்; வீட்டில் உள்ள தீய சக்திகள் யாவும் விலகி, மகாலட்சுமியின் அருள் முழுமையாக ஸித்திக்கும் என்று ஞான நூல்கள் கூறுகின்றன. அத்தகைய தீப வழிபாட்டைச் சிறப்பிக்கும் மாதமே திருக்கார்த்திகை மாதம். இம்மாதத்தில் வீடுகளில் […]

கர்நாடக மாநிலம் பெலகாவியில் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த அந்தப் பேராசிரியர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பெலகாவியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர் நாகேஷ்வர். இவர் அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருடன் முதலில் நட்பாகப் பழகி வந்துள்ளார். இந்த நட்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்ட நாகேஷ்வர், ஆசை வார்த்தைகள் கூறி அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை […]

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் சமீபத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்த வாலிபர் உடலை மீட்டுப் போலீஸார் நடத்திய விசாரணையில், அது கள்ளக்காதலுக்காக மனைவி நடத்திய கொடூர கொலை என்பது அம்பலமாகியுள்ளது. யாதகிரி மாவட்டத்தை சேர்ந்த பசவராஜ் மற்றும் சரணம்மா தம்பதியினர், பெங்களூருவில் வாடகை வீட்டில் தங்கி, கட்டிடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தனர். கட்டிட மேஸ்திரியின் மகன் வீரபத்ரா, பசவராஜ் தம்பதியினரை வேலைக்கு வாகனத்தில் அழைத்துச் சென்றபோது, சரணம்மாவுக்கும் […]

மகாராஷ்டிராவில், திரில்லர் திரைப்படங்களை மிஞ்சும் வகையில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது காதலனைப் பிரிந்து விடக்கூடாது என்ற பயத்தில், 22 வயதான அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண், காதலன் ராகுலிடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருந்து விந்து தானம் என்ற பெயரில் விந்தணுவைப் பெற்று, யூடியூப் வீடியோக்களைப் பார்த்துத் தானே கருத்தரித்துக் கொண்ட சம்பவம் தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த அனிதா, […]

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தருமபுரி மாவட்டம் அரூர் அருகே நடந்த ஒரு கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரூர் அருகே உள்ள வேட்ரப்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன் (32) என்பவர், கடந்த 7 ஆண்டுகளாக அரூர் திரு.வி.க. நகரில் ஜிம் நடத்தி வந்துள்ளார். தனது ஜிம்முக்கு வந்த 11ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் சிலம்பரசன் நெருங்கிப் பழகி வந்ததாகத் தெரிகிறது. கடந்த அக்டோபர் […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழல், விஜய்யின் அரசியல் பிரவேசத்தால் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது கூட்டணியை பலமாக நிலைநிறுத்தி இந்த முறையும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இருப்பினும், திமுக கூட்டணியில் இருக்கும் ஒரு சில கட்சிகள் கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு கோரி குரல் எழுப்பி வருவது, அவருக்குப் பெரும் சவாலாக […]

தமிழ்நாட்டில் இன்னும் 5 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆளும் திமுக ஒருபுறம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி, மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. மறுபுறம், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக எப்படியும் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் வியூகங்களை வகுத்து வருகிறது. […]

தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பி வரும் நிலையில், தற்போது திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரத் துறையில் உள்ள 19 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள், மாவட்டச் சுகாதார அலுவலகம், திருப்பூர் அரசு மருத்துவக் […]