ஆசியாவின் பல பகுதிகளில் நிலவும் கடுமையான வானிலையின் காரணமாக, இதுவரை சுமார் 1,000-க்கும் உயிரிழந்துள்ளனர். கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் இந்தோனேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் மற்றும் பருவமழை தாக்கம் : இந்தோனேசியா, இலங்கை, தெற்கு தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் பொதுவாக இந்த நேரத்தில் வடகிழக்குப் பருவமழையால் கனமழை பொழியும். இந்தக் காலத்துடன் 3 வெப்பமண்டலச் […]
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் ‘டிட்வா’ புயலின் கடுமையான தாக்கம் காரணமாகக் காய்கறி விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து மிகவும் குறைந்த நிலையில், அவற்றின் விலைகள் திடீரெனச் சரமாரியாக உயர்ந்துள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்த மழையால், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி நின்று காய்கறிப் பயிர்கள் மோசமாகச் சேதமடைந்தன. குறிப்பாக, காய்கறிப் […]
தமிழ்நாட்டில் இன்று (டிசம்பர் 1) முதல், சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் புதிய இரு சக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களைப் பதிவு செய்வதற்காக, அவற்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கோ (RTO) அல்லது யூனிட் அலுவலகங்களுக்கோ நேரில் கொண்டு வர வேண்டியதில்லை என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 150-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கே ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, சாலை […]
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கேற்ப, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், டிசம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 10.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பால் வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. புதிய விலை விவரங்கள் : இந்த விலை குறைப்பு சென்னை மட்டுமல்லாமல், டெல்லி, […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபத்தை நேரில் தரிசிப்பதற்கான கட்டண அனுமதிச் சீட்டுகள் இன்று (டிசம்பர் 1) காலை 10 மணி முதல் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகின்றன. ஆன்லைன் பதிவு விவரங்கள் : வரும் டிசம்பர் 3ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபமும், மாலையில் மகா தீபமும் […]
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் ஒருவர், அவருடைய கணவனால் இன்று அதிகாலை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையானவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா என்றும், கொலையைச் செய்தவர் அவரது கணவர் பாலமுருகன் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தத் தம்பதியினருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடுகள் காரணமாக பாலமுருகனிடமிருந்து பிரிந்து வந்த ஸ்ரீபிரியா, […]
சேலம் மாவட்டம் தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்ற ஓட்டுநர், வீட்டுக்கு பூப்பறிக்க வந்த பட்டியலிட சமூகத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு தினேஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயிடம் கூறியுள்ளார். இதனை அறிந்து ஆத்திரமடைந்த தினேஷ்குமார் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி வீட்டின் முன்பு அமர்ந்திருந்த சிறுமியின் தலையை துண்டித்து கொலை […]
தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், மற்றும் கணினி பயிற்றுநர் ஆகிய 1,996 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வை 2.36 லட்சம் முதுநிலை பட்டதாரிகள் எழுதினர். நேற்று (நவம்பர் 29) வெளியான தேர்வு முடிவுகள், தமிழகக் கல்வித் தரம் குறித்துக் கவலையளிக்கும் ஒரு அதிர்ச்சித் தகவலை வெளிப்படுத்தியுள்ளன. தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் சேரும் நபர்களுக்குத் […]
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் ‘நோரோவைரஸ்’ (Norovirus) என்ற மற்றொரு வைரஸ் பாதிப்பு சத்தமே இல்லாமல் வேகமாகப் பரவி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீப வாரங்களாக இந்த வைரஸ் பாதிப்பு விகிதம் கணிசமாக உயர்ந்து, அந்நாட்டில் ஒரு புதிய சுகாதார சவாலை உருவாக்கியுள்ளது. இது பொதுமக்களிடையே இயல்பாகவே அச்சத்தை அதிகரித்துள்ளது. நோரோவைரஸ் என்றால் என்ன..? நோரோவைரஸ் என்பது இரைப்பைக் குடல் அழற்சியை […]
நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவின் வருடாந்திர கந்தூரி விழா தொடங்குவதையொட்டி, அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கந்தூரி விழாவைக் கருத்தில் கொண்டு, வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி (திங்கட்கிழமை) நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விழாவிற்காக அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான இஸ்லாமியர்கள் நாகூரில் கூடுவார்கள் என்பதால், பொதுமக்களின் வசதிக்காக, ரயில்வே […]

