தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘டிட்வா’ (Titwa) புயல் வலுவிழக்கும் கட்டத்தை எட்டியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலைக்குள் இந்த புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இன்று இரவு நேரத்தில் புயல் சென்னைக்கு மிக அருகில் வரும்போது, அது மேலும் வலு குறைந்து வெறும் தாழ்வு மண்டலமாக மட்டுமே மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
‘டிட்வா’ புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழையும் பலத்த காற்றும் தொடர்ந்து வீசி வருகிறது. இதன் விளைவாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவர் இடிந்து விழுந்த விபத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். புயலின் தாக்கம் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் கடந்த இரவில் கனமழை கொட்டித் தீர்த்ததுடன் பலத்த […]
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே உள்ள சி.ஆர்.காலனியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சுதந்திரகுமார் (43) சாலையில் ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைப் பூர்வீகமாக கொண்ட சுதந்திரகுமார், திருப்பூரில் தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக விடுப்பு எடுத்து கழுகுமலையில் உள்ள பெற்றோரின் வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார். கொலை நடந்த இடத்தில் இருந்து 500 […]
வட தமிழகத்தை நோக்கி ‘டிட்வா’ புயல் நெருங்கி வருவதன் காரணமாக, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ‘டிட்வா’ புயலின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இன்று (நவம்பர் 30) திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை […]
தமிழ்நாட்டில் சொந்தப் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் புதிய வாகனங்களைப் பதிவு செய்யும்போது, அவற்றை இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு (RTO) நேரில் கொண்டு வர வேண்டியதில்லை என்ற புதிய விதிமுறை, நாளை (டிசம்பர் 1, 2025) முதல் அமலுக்கு வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இந்த முக்கிய மாற்றத்தை அமல்படுத்துமாறு போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். புதிய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கிய பிறகு, அவற்றை […]
முருகப்பெருமானுக்கு உலகம் முழுவதும் பல கோவில்கள் இருந்தாலும், பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால் மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தல் போன்ற வழக்கமான வழிபாடுகளையே மேற்கொள்வது வழக்கம். ஆனால், தமிழ்நாட்டிலேயே ஒரு முருகன் கோவிலில் நைவேத்தியமாக சுருட்டுப் படைத்து வழிபடும் வினோத வழக்கம் பின்பற்றப்படுகிறது என்றால் நம்புவது கடினம். சுருட்டு படைக்கும் வழக்கம் தோன்றியது எப்படி..? வழக்கமாக, முனீஸ்வரர் அல்லது கருப்பசாமி போன்ற தெய்வங்களுக்கே […]
மனிதர்களை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோயில், இரைப்பையில் (Stomach) உள்ள செல்களில் வளரக்கூடிய அசாதாரண கட்டியே வயிற்றுப் புற்றுநோய் ஆகும். வயிற்றின் மேல் இடது பக்கத்தில் உள்ள இரைப்பை, நாம் உண்ணும் உணவை ஜீரணிக்கும் முக்கிய உறுப்பு ஆகும். இந்த வகை இரைப்பை புற்றுநோய் ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகளை வெளிப்படுத்தினாலும், அவை தினசரி சந்திக்கும் சாதாரணப் பிரச்சனைகளைப் போலவே இருப்பதால், பலரும் அவற்றைப் புறக்கணித்துவிடுகிறார்கள். இதனால், புற்றுநோய் பெரும்பாலும் […]
ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி திதியில் சிவ வழிபாடு செய்வது மன அமைதி, செல்வ வளம் மற்றும் வாழ்வில் நிலைத்தன்மை ஆகியவற்றைப் பெற்றுத் தரும் என்பது ஐதீகம். பௌர்ணமி நாளில் சிவ தரிசனம், கிரிவலம், விரதம், மற்றும் புனித நீராடுதல் ஆகியவை விசேஷ பலன்களை அளிப்பதுடன், பாவங்களைப் போக்கி சிவனின் அருளையும் பெற்றுத் தரும். அதிலும், நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய தலமான திருவண்ணாமலையில் பௌர்ணமியில் கிரிவலம் வருவது முக்தியை […]
பெருமாளை நாம் காக்கும் கடவுளாகப் போற்றி வழிபடுகிறோம். வறுமை நீங்கிச் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கும், விருப்பங்கள் நிறைவேறுவதற்கும், வாழ்வில் நிலைத்தன்மை மற்றும் உயர்ந்த நிலையை அடைவதற்கும், பாவங்கள் நீங்கி வைகுண்டப் பதவியை அடைவதற்கும் பெருமாளை வழிபடுவது உண்டு. அவருடைய திருநாமங்களை நினைத்தாலும், உச்சரித்தாலும், கேட்டாலும் கூட அது பெரும் புண்ணியத்தைத் தரக்கூடியதாகும். ஒரே ஒரு துளசியை அவருக்குப் படைத்து வழிபட்டாலும் கூட, அவர் மனம் இறங்கி நம் பாவங்களைப் போக்கி […]
மும்பையில், 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், தனது தாயும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து தன்னைப் பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளியதாக காவல் நிலையத்தில் அதிர்ச்சிப் புகார் அளித்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்த கொடுமை தனக்கு நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தாயும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி, […]

