தமிழகத்தின் ஆன்மிக வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த அய்யா வைகுண்ட சாமியின் அவதாரத் திருநாள், ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு தலைமைப் பதியில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அய்யா வைகுண்ட சாமியின் 194-வது அவதாரத் திருவிழா வருவதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிதோப்பு நோக்கிப் பயணம் மேற்கொள்வார்கள். இதனை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காகவும், வழிபாட்டுச் சிறப்பினைப் போற்றும் […]

இந்திய குடிமக்களுக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எவ்வளவு அவசியமோ, அதேபோல் சர்வதேச பயணங்களை மேற்கொள்பவர்களுக்குப் பாஸ்போர்ட் மிக முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டப்பூர்வமாகப் பயணம் செய்யப் பாஸ்போர்ட் கட்டாயமாகும். முன்னொரு காலத்தில் பாஸ்போர்ட் பெறுவது என்பது மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சவாலான காரியமாக இருந்தது. ஆனால், தற்போதைய டிஜிட்டல் இந்தியாவில் இந்த நடைமுறைகள் அனைத்தும் எளிமைப்படுத்தப்பட்டு, ஒரு வாரத்திற்குள்ளாகவே பாஸ்போர்ட்டை உங்கள் […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் விழா நாளை (பிப்ரவரி 24) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாளை காலை 10.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து, அங்குள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி, நலத்திட்ட […]

இந்தியாவில் விளிம்புநிலை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்குப் பாதுகாப்பு கவசமாக விளங்கும் பொது விநியோகத் திட்டத்தில் (PDS), தற்போது ஒரு மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றம் புகுத்தப்பட்டுள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் ரேஷன் கடைகளில், அவ்வப்போது எடை குறைவு மற்றும் பொருட்கள் கள்ளச்சந்தைக்கு மாற்றப்படுவது போன்ற புகார்கள் எழுந்து வருகின்றன. இத்தகைய முறைகேடுகளை வேரோடு அகற்றவும், விநியோக முறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவும் […]

பொதுவாக மார்ச் மாதம் என்றாலே பள்ளி மாணவர்களின் மனதில் ஒருவித பதற்றம் தொற்றிக்கொள்ளும். மார்ச் மாத தொடக்கத்திலேயே 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்கிவிடுவதால், தமிழகம் முழுவதும் கல்வித் துறை பரபரப்பாக இயங்க தொடங்கும். பிப்ரவரி மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மார்ச் மாதத்தில் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு (1 முதல் 9-ஆம் வகுப்பு வரை) சுமார் 11 நாட்கள் வரை விடுமுறை […]

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்த்தை சேர்ந்த செல்வம் என்பவர், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் உழைத்து சம்பாதித்து வந்தார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காக அவர் அனுப்பிய பணம், அவரது மனைவி பிரியாவால் பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா என்ற இளைஞருக்காகத் தாராளமாக செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. செல்வத்தின் வெளிநாட்டுப் பயணம் ஏற்படுத்திய தனிமையைப் பயன்படுத்திக் கொண்ட பிரியா, ராஜாவுடன் நீண்டகாலமாக தவறான உறவில் இருந்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் […]

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், சினிமா பாணியிலான ஒரு பழிவாங்கும் கொலை சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ளது. சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த 73 வயதான சூர்யநாராயணன் என்பவர், தனது சொந்த பங்களாவிலேயே மர்ம கும்பலால் மூச்சடைக்க செய்து கொல்லப்பட்டுள்ளார். இவரது மகள் விஷ்ணுபிரியா, சூர்யாவின் ‘மாயாவி’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமான துணை நடிகை ஆவார். இந்த கொலையின் பின்னணியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு காதல் விவகாரமும், அதையொட்டி […]

தமிழ்நாட்டில் சமீபகாலமாக முடி மாற்று அறுவை சிகிச்சை (Hair Transplant) மற்றும் பல்வேறு அழகு மேம்பாட்டுச் சிகிச்சை மையங்கள் (Cosmetic Clinics) காளான்கள் போல பெருகி வருகின்றன. இத்தகைய மையங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும், தகுதியற்ற நபர்கள் சிகிச்சைகளை மேற்கொள்வதாலும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. இதனை தடுக்கும் பொருட்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் சுகாதாரத் துறை தற்போது மிகக் கடுமையான வழிகாட்டுதல்களை […]

சென்னை சாலிகிராமத்தில், பெற்ற மகளையே தனது இச்சைக்கு இரையாக்கிய ஒரு தாயின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நபர், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வரும் சூழலை சாதகமாக்கிக் கொண்ட அவரது மனைவி, வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இந்த விவகாரம் 20 வயதான அவரது மகளுக்கு தெரியவரவே, அவர் தனது தாயை கண்டித்ததோடு, அவருடன் பேசுவதையும் தவிர்த்து […]

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பையூர் எம்.ஜி.ஆர் நகரில் அரங்கேறியுள்ள இந்த திடுக்கிடும் கொலை சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் ஆலையில் பணியாற்றியபோது கவிதா என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கம், ஏற்கனவே திருமணமான வினோத் குமாரை இரண்டாவது திருமணத்திற்கு கொண்டுச் சென்றது. இரு மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரு சிக்கலான குடும்பச் சூழலில் வாழ்ந்து வந்த இவர்களது வாழ்க்கையில், சமூக வலைதளப் பயன்பாடு ஒரு பெரும் […]