fbpx

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் கருப்பு நிற கார் இந்திய ரூபாய் மதிப்பில் 6.10 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா 1980-களில் பயன்படுத்திய காரை விற்பனை செய்வதற்கான நேற்று ஏலம் நடைபெற்றது. இதில், அவரது கார் 6,50,000 பவுண்டுகளுக்கு விற்பனையாகியுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6.10 கோடியாகும். 1980-களில் இளவரசி …

பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றிக் கொண்டாட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கையில் தேசியக் கொடியை ஏற்க மறுத்த வீடியோ சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. இதன் மூலம், கடந்த ஆண்டு டி20 உலக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் …

காதலிக்க மறுத்த மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் அங்கிதா குமாரி என்ற சிறுமி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை வாலிபர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரின் காதலை ஏற்க மறுத்த மாணவி, அந்த வாலிபரை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த …

பழைய மன கசப்புகளை மறந்து நண்பர்களாகவும், பங்காளிகளாகவும் செயல்பட வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ”ஓபிஎஸ் தன்னை பழைய பாசத்துடன் அண்ணன் என்று அழைத்துள்ளார் என்றும் பழைய பகை கசப்பு உணர்வுகளை எல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்து விடலாம் என்றும் …

கேரள மாநிலம் தொடுபுழா அருகேயுள்ள மலைக்கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், சிறுமி உள்பட 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் இடுக்கி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே, இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை வானிலை ஆய்வு …

தொடர் கனமழை காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு …

தினேஷ் கார்த்திக்கை பார்த்து ‘நான் பாத்துக்குறேன்’ என ஹர்திக் பாண்டியா கண்ணால் சிக்னல் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே …

ஜடேஜா – ஹர்திக் பாண்டியாவின் அபார பேட்டிங் பார்ட்னர்ஷிப்பால் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இந்தியா.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் நிர்ணயித்த 148 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அறிமுக வீரர் நசீம்ஷா வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரின் இரண்டாவது பந்திலே இந்தியாவின் துணை கேப்டன் …

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள முதன்மை கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று தமிழில் வழிபாடு செய்ய வைக்க வேண்டும் என சீமான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற பெயரில் தமிழக அரசு சென்ற ஆண்டு ஒரு திட்டத்தை …

ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்தவருக்கு ஆணுறையை ஸ்விகி டெலிவரி செய்துள்ளது.

பெரியசாமி என்பவர் ஸ்விகியில், தன்னுடைய குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆர்டர் செய்துள்ளார். அப்பா ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். வந்ததும் சாப்பிடலாம் என குழந்தைகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளனர். அதன்படி, ஆர்டரை ஸ்விகி டெலிவரி ஊழியர் கொண்டுவந்து கொடுத்துள்ளார். அதனைப் பெற்ற பெரியசாமி …