ராஜஸ்தான் மாநிலம் கிஷான்கார்க் பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. பல இடங்களில் மணப்பெண் தேடி வந்த நிலையில், ஜிதேந்திரா என்பவர் அந்த இளைஞரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, தன்னை திருமண புரோக்கர் என்று அறிமுகம் கொண்டார். மேலும், ஆக்ராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்ளதாகவும், அவரை இளைஞருக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் உறுதியளித்ததால், இளைஞரின் வீட்டாரும் மணப்பெண் கிடைக்காத விரக்தியில் சம்மதம் தெரிவித்தனர். […]
திருநெல்வேலியைச் சேர்ந்த அல்போன்ஸ் (35) என்பவர் பெங்களூரு, கே.பி. அக்ராகரம் பகுதியில் ஒரு மிச்சர் கம்பெனி நடத்தி வந்தார். அதே கம்பெனியில் மாஸ்டராகப் பணிபுரிந்த கே.பி. அக்ரகாரத்தைச் சேர்ந்த பவன்குமார் (19) என்பவருக்கும், உரிமையாளர் அல்போன்ஸின் மனைவி சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இந்த கள்ளக்காதல் விவகாரம் 4 மாதங்களுக்கு முன்பு அல்போன்ஸுக்குத் தெரிய வந்ததையடுத்து, பவன்குமார் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். அதன் பிறகு, அவர் திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு, […]
ரயில்களில் செல்லும்போது மலைகள், பசுமையான வயல்கள் என அழகான காட்சிகளை ரசித்தவாறே ரயிலில் பயணம் மேற்கொள்வது பலருக்கும் பிடிக்கும். நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தினமும் ரயிலில் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு தேவையான தேநீர், காஃபி, உணவுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் ரயில் நிலையங்களில் எளிதில் கிடைக்கின்றன. ஆனால், மக்கள் கூடும் பெரிய ரயில் நிலையங்களில் கூட, அவசரத் தேவைக்கான ஒரு மருந்துக் கடை கூட […]
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற முக்கியத் தேவைகளுக்கு நிதிச் சிக்கலின்றி நல்ல எதிர்காலத்தை அமைக்கவே கனவு காண்கிறார்கள். இந்த கனவை நனவாக்க மத்திய அரசு வழங்கியுள்ள ஒரு அற்புதமான திட்டம்தான் சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana – SSY) எனப்படும் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஆகும். தற்போது, இந்தத் திட்டம் தொடர்பாக மத்திய அரசு நடுத்தர மக்களுக்கு ஒரு நிம்மதியான […]
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஞானபாரதி காவல் எல்லைக்குட்பட்ட உல்லால் மெயின் ரோட்டில் உள்ள பிரஸ் லே அவுட் பகுதியில், மனைவிக்கு வேலைக்குச் செல்ல எதிர்ப்பு தெரிவித்த கணவர் அவரை கொலை செய்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் பின்னலவாடி கிராமத்தைச் சேர்ந்த தர்மசீலன் (29) என்பவரும், அவரது மனைவி மஞ்சு (28) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். வெளிநாட்டில் […]
இன்றைய டிஜிட்டல் உலகில், இணையத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அலுவலகப் பணிகள், பொழுதுபோக்கு என பல காரணங்களுக்காக வீடுகளில் ஸ்மார்ட்போன், லேப்டாப், தொலைக்காட்சி என பல சாதனங்களை ஒரே நேரத்தில் இணையத்துடன் இணைக்க வைஃபை ரூட்டரின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. வைஃபை என்றால் என்ன..? வைஃபை என்பது கம்பிகள் இல்லாமல் மின்னணு சாதனங்களை இணையத்துடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பம். இது கம்பிகள் இன்றி தகவல்களை அனுப்பி, பெற […]
சென்னை சூளைநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவருக்குத் திருமணம் செய்வதற்காக பெற்றோர் ஒரு மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்திருந்தனர். இந்தத் தளத்தின் மூலம் சூர்யா என்ற இளைஞர் அந்த செவிலியரை தொடர்புகொண்டுள்ளார். பின்னர், நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி கோயம்பேடுக்கு வரவழைத்த சூர்யா, எடுத்த எடுப்பிலேயே ஒரு பரிசுப் பொருளைக் கொடுத்து அந்தப் பெண்ணை ஆச்சரியப்படுத்தியுள்ளார். இதைத் […]
பல ஆண்டுகளாக நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி வரும் கேள்வி முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிட வேண்டுமா? வேண்டாமா? என்பது தான். சிலர் இதை ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்று பாராட்ட, வேறு சிலர் இதில் உள்ள கொலஸ்ட்ரால் குறித்து அஞ்சுகிறார்கள். இதனால் பலர் வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டுவிட்டு மஞ்சள் கருவைத் தவிர்த்து விடுகின்றனர். சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில், முட்டையின் மஞ்சள் கருவின் உண்மைத் தாக்கம் என்னவென்று இப்போது பார்க்கலாம். மஞ்சள் […]
உலக நாடுகள் இணைந்து இஸ்ரேல் – காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர குரல் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்துள்ளார். இந்தப் பரிந்துரைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புதல் அளித்திருக்கும் அதேவேளையில், காஸாவில் எஞ்சியிருக்கும் பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்ப் முன்வைத்துள்ள 20 அம்சத் […]
ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் மீண்டும் ஒரு பிரம்மாண்ட இந்திய படைப்பாக வெளியாகி, ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. முதல் பாகமான ‘காந்தாரா’ ஏற்படுத்திய தாக்கத்தை விட பல மடங்கு சிறந்த படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற உழைப்பும், அதில் இருந்த தெய்வீகத் தன்மையைப் பல மடங்கு அதிகரிக்க வேண்டும் என்ற அவரது முனைப்பும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுகிறது. கதைக்களம் […]

