இந்தியாவில் இருசக்கர வாகனச் சந்தையில், புதிய ஜிஎஸ்டி 2.0 விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, சுசூகி நிறுவனம் தனது பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 350சிசி-க்கு குறைவான வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டதால், இந்த விலை குறைப்பு சாத்தியமானது. பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வாகனப் பிரியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டர் பிரிவு […]

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை சாலையில், கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பெசோ என்ற தனியார் காப்பகத்தில், 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த 61 வயது சாம் கணேஷ் என்பவரால் நடத்தப்பட்டு வரும் இந்த காப்பக வளாகத்திற்குள்ளேயே, ஃபிரிகேஜ் முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் 4ஆம் வகுப்பு […]

கடந்த 8 ஆண்டுகளாக சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியால் கட்டுமானத் துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வந்தது. அதன்படி, 28% ஆக இருந்த இந்த வரி, ஜிஎஸ்டி 2.0 அறிவிப்பின்படி தற்போது 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்தும் நிறைவேறாத இந்த வரிக்குறைப்பு, கால தாமதமாக வந்தாலும், கட்டுமானத் துறையினர் மற்றும் வீடு கட்டும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குறைந்த சிமெண்ட் விலை : ஜிஎஸ்டி […]

இந்தியா, கல்வி, பொருளாதாரம், தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், சில இடங்களில் இன்னும் நரபலி, சூனியம் போன்ற மூடநம்பிக்கைகள் போன்ற விஷயங்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின்படி, 2014 முதல் 2021 வரை, இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட நரபலிகள் மற்றும் 397 சூனியம் தொடர்பான கொலைகள் நடந்துள்ளன. இவ்வளவு ஏன், கல்வியில் சிறந்து விளங்கும் கேரளாவில், பணக்காரனாக வேண்டும் […]

நாம் அன்றாட உணவில் அதிகம் பயன்படுத்தாத ஒரு பொருள் காராமணி. ஆனால், இதில் நமது ஆரோக்கியத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பல வைட்டமின்கள் இதில் உள்ளன. இந்தச் சிறிய தானியம் நமக்கு எந்தெந்த விதங்களில் உதவுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம். எடை குறைப்பு மற்றும் ரத்த சோகை : காராமணியில் உள்ள நார்ச்சத்து, வயிறை நீண்ட நேரம் நிறைவாக […]

இந்தியாவின் பெரும்பாலான வீடுகளில், குறைந்தது ஒரு பிளாஸ்டிக் நாற்காலியாவது இருக்கும். இந்த நாற்காலிகளின் பின்புறத்தில் உள்ள துளைகளை நாம் பெரும்பாலும் கவனித்திருக்கிறோம். அந்த துளைகள் வெறுமனே வடிவமைப்பிற்காக இருக்கலாம் என நாம் நினைப்பதுண்டு. ஆனால், அந்தச் சிறிய துளைகளுக்குப் பின்னால் பல முக்கியக் காரணங்கள் உள்ளன. நாற்காலிகளை அடுக்கி வைக்க எளிமை : பிளாஸ்டிக் நாற்காலிகளை அடுக்கி வைக்கும்போது, அவற்றின் இடையே காற்று சிக்கிக்கொள்ளும். இதனால் ஏற்படும் வெற்றிட விளைவால், […]

இளநீர், உடலுக்கு நீரேற்றத்தையும், புத்துணர்வையும் தரும் ஓர் அற்புதமான பானம். இது உடலை நச்சு நீக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த இளநீரின் பலன்களை அதிகரிக்க, அதனுடன் சில பொருட்களை சேர்த்து அருந்தலாம். தேன் : இளநீரில் தேன் சேர்த்து அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தேனில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நொதிகள், உடலில் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட […]

மனித வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கிய நிகழ்வு. சிலர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், பலருக்கு திருமணம் என்பது தாமதமாகவே நடக்கிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் இயல்பாகவே தங்கள் இலக்குகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால், திருமணம் தாமதமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே, அந்த 4 ராசிக்காரர்கள் யார் என்பதைப் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம். கன்னி ராசி : இவர்கள் மிகவும் […]

இந்தியாவின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி, பெண் தெய்வ வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு 9 நாள் விழாவாகும். வட இந்தியாவில் ஒருவிதமாகவும், தமிழ்நாட்டில் வேறுவிதமாகவும் கொண்டாடப்படும் இந்த விழாவின் முக்கியச் சிறப்பம்சம், கோவில்களில் அமைக்கப்படும் நவராத்திரி கொலு தான். “கொலு” என்பது, மரப் பலகைகள் அல்லது உலோக சட்டங்களால் ஆன படிகளில் கடவுள்கள், தெய்வங்கள் மற்றும் கலாச்சார பொம்மைகளை வரிசையாக அடுக்கி, ஒரு தெய்வீகக் காட்சியை உருவாக்குவதை குறிக்கிறது. […]

உத்தரப்பிரதேச மாநிலம், காஜிபூர் மாவட்டத்தில் 23 வயது இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே உள்ள வனப்பகுதியில், அந்தப் பெண் ஆடைகள் இல்லாமல் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது கழுத்து, தொடை மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளில் தீக்காயங்கள் இருந்ததை கண்டு உள்ளூர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்த பெண் வாரணாசியைச் சேர்ந்த தீப்தி என்றும் அவரது கணவர் சந்தீப் சிங் என்பதும் […]