உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாள அமைப்பான ஆதாரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த, மத்திய அரசு தற்போது ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக, உயிரிழந்த நபர்களின் பெயரில் புழக்கத்தில் இருந்த சுமார் 2.5 கோடி ஆதார் எண்கள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதின் பிரசாத் மக்களவையில் தெரிவித்துள்ளார். அரசின் சலுகைகள் தகுதியற்றவர்களுக்கு செல்வதை தடுக்கவும், தரவுத்தளத்தில் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 134 கோடிக்கும் […]
தெலங்கானா மாநிலத்தின் கிராமம் ஒன்றில், சாயிலு – வினோதா தம்பதியினரிடையே கடந்த சில நாட்களாகவே விரிசல் நிலவி வந்துள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சாயிலு, அவரை தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில், இயற்கை உபாதையை காரணம் காட்டி வினோதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். சந்தேகம் வலுக்கவே, ஒரு கோடாரியை மறைத்து எடுத்துக்கொண்டு சாயிலு அவரைப் பின்தொடர்ந்துள்ளார். இருள் சூழ்ந்த வயல்வெளிக்கு நடுவே, வினோதா […]
பொள்ளாச்சி அருகே திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில், தனது மனைவியுடன் ஓடிச் சென்ற வாலிபரை, அவரது கணவர் கத்தரிக்கோலால் சரமாரியாக குத்தி பழிவாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை அண்ணா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜா (27), அதே பகுதியைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். கடனுக்கான வட்டிப் பணத்தைச் செலுத்தச் சென்ற சமயத்தில், சந்தானகிருஷ்ணனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும் ராஜாவிற்கும் இடையே பழக்கம் […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவரின் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கே. அத்திக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் பெருமாள், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சம்பளம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் கவலையடைந்த குடும்பத்தினர் அவரது செல்போனுக்கு அழைத்துள்ளனர். அப்போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் […]
இன்றைய நவீன வாழ்க்கை சூழலில் விவாகரத்துகள் அதிகரிப்பதற்கு தம்பதியிடையே நிலவும் தாம்பத்திய குறைபாடுகளும் ஒரு முக்கிய காரணமாக இருப்பதாக மருத்துவர் செங்கோட்டையன் எச்சரிக்கிறார். முறையான புரிதல் இல்லாமையும், அறிவியல் பூர்வமான அணுகுமுறை இல்லாததுமே தம்பதிகளுக்குள் விரிசலை உண்டாக்குகிறது. அந்த வகையில், தாம்பத்திய உறவை மேம்படுத்தவும், நீண்ட நேர உறவை சாத்தியப்படுத்தவும் அவர் சில முக்கியமான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஆரோக்கியமான தாம்பத்தியம் : தாம்பத்திய நேரம் என்பது நபருக்கு நபர் மாறுபடும் […]
தமிழ்நாட்டில் புற்றுநோய் பாதிப்பு அபாயகரமான வேகத்தில் அதிகரித்து வருவது சுகாதாரத் துறையின் சமீபத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மாநிலத்தின் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டியிருப்பது பொதுமக்களிடையேயும், மருத்துவ வல்லுநர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு நிலவரப்படி தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,022 ஆக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது 2025-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, இந்த எண்ணிக்கை […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் எடுத்து வரும் அதிரடி நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளன. அதிமுகவில் மீண்டும் இணைவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டுள்ள சூழலில், பாஜக கூட்டணியிலும் தமக்கான பிடி நழுவி வருவதை உணர்ந்துள்ள ஓபிஎஸ், தற்போது தனது அரசியல் வாழ்வை தக்கவைக்க புதிய வியூகங்களை கையாண்டு வருகிறார். சமீபகாலமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக […]
தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குள் அதிகாரப் போட்டி முற்றியுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தை அதிர வைத்துள்ளது. கட்சியின் முக்கிய அரசியல் வியூக வகுப்பாளராக கருதப்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, கட்சியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் தொடக்க காலத்திலிருந்தே விஜய்யின் அரசியல் பிம்பத்தை வடிவமைப்பதிலும், மாநாடுகளைத் திட்டமிடுவதிலும் ஜான் ஆரோக்கியசாமி முதுகெலும்பாகச் செயல்பட்டு வந்தார். ஆனால், சமீபத்தில் […]
“நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை” – ஆன்மீக உலகில் மிகவும் புகழ்பெற்ற இந்த வாசகம், பக்தர்களின் அழைப்பிற்கு நரசிம்மர் அளிக்கும் மின்னல் வேக எதிர்வினையை பறைசாற்றுகிறது. ஆபத்து காலங்களில் தன்னை சரணடையும் பக்தர்களைக் காக்க, காலம் பார்க்காமல் களம் இறங்கும் தெய்வமாக ஸ்ரீ நரசிம்மர் போற்றப்படுகிறார். தீராத நோய்கள், மன உளைச்சல் மற்றும் எதிரிகளால் ஏற்படும் இன்னல்களில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு, நரசிம்மரின் திருநாமம் ஒரு சக்திவாய்ந்த மருந்தாக அமைகிறது. […]
வாழ்க்கையில் தொடர் சோதனைகளையும், தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் சந்திப்பவர்களுக்கு குலதெய்வ வழிபாடு ஒரு மிகச்சிறந்த கேடயமாக கருதப்படுகிறது. “குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே” என்ற பழமொழிக்கு ஏற்ப, நம் முன்னோர்கள் வழிபட்ட தெய்வத்தின் அருளாசி இருந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், எந்தெந்த நாட்களில் குலதெய்வத்தை வணங்கினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பதை இங்கே காண்போம். விசேஷ தினங்கள் மற்றும் வழிபாட்டு […]

