சமூக வலைத்தளங்களில் ‘இந்தியன் ஃப்ளெக்ஸ்’ என்ற இளைஞன், தனது உடல் எடையை 6 மாதங்களில் 37 கிலோ குறைத்து ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒரு காலத்தில் 112 கிலோ எடையுடன் இருந்த இவர், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சியின்மை காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார். ஜங்க் ஃபுட், எண்ணெய் உணவுகள் மற்றும் குளிர் பானங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, தனது வாழ்க்கையை மாற்றியுள்ளார். உடல் எடையின் காரணமாகத் தன்னுடைய […]

கர்நாடக மாநிலம் மாண்டியா மணிக்கண்ணஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியை தீபிகா வெங்கடேஷ் கவுடா (28), மர்மமான முறையில் காணாமல் போனார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது உடல் மலையடிவாரத்தில் உள்ள புதரில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கணவர் லோகேஷ் மற்றும் கிராம மக்கள் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, கழுகுகள் வட்டமிடுவதைக் கண்டு, சந்தேகம் அடைந்து உடலை கண்டுபிடித்தனர். தீபிகா ஒரு ஆசிரியை மட்டுமல்ல, இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸரும் ஆவார். அவரது […]

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி விதிப்பு முறையில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 4 மடங்காக இருந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு தற்போது இரண்டு மடங்காக குறைக்கப்பட்டு, 353 பொருட்களின் விலை குறைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பால், பல முக்கியப் பொருட்களின் விலை குறைய உள்ளது. தொலைக்காட்சிகள் : 32 இன்ச்க்கு மேல் உள்ள தொலைக்காட்சிகளுக்கான ஜிஎஸ்டி […]

பெண் குழந்தைகளின் தன்னம்பிக்கையையும் சமூக பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் வீரச் செயல்கள் புரிந்த இளம் பெண் குழந்தைகளுக்கு மாநில அளவிலான விருது வழங்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த விருதுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது, பெண் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண் குழந்தை திருமணங்களை தடுத்தல், கல்விக்கு உதவுதல் போன்ற சமூக நலன் சார்ந்த […]

தெலங்கானா மாநிலம் பூபால்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் மற்றும் சொந்த மகளை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கொலையின் பின்னணி என்ன..? ஒடிதலா கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (58), பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்தார். இந்த நேரத்தில், அவரது இரண்டாவது மனைவி கவிதா, அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் […]

இணைய வழியில் முதலீடு செய்யும் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அஞ்சல் அலுவலகங்கள் பல கவர்ச்சிகரமான சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகின்றன. அதில் ஒன்றுதான் டைம் டெபாசிட் திட்டம். குறைந்த முதலீட்டில் சிறப்பான வட்டி வருமானம் பெற விரும்புவோருக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. ‘டைம் டெபாசிட்’ என்று அழைக்கப்படும் இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் எந்தத் தொகை வரையிலும் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு வயது […]

நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த தொப்புளில் எண்ணெய் விட்டு மசாஜ் செய்யும் பழக்கத்தை நாம் மறந்துவிட்டோம். ஆனால், இந்தப் பழக்கம் உடலில் பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஸ்வேதா கூறுகிறார். எந்தெந்தப் பிரச்சனைகளுக்கு எந்தெந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம். நல்லெண்ணெய் : நல்லெண்ணெய் பெண்களுக்கு மிகவும் நல்லது. இதனைத் தொப்புளில் விட்டு மசாஜ் செய்தால், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் சரிசெய்யப்பட்டு, உடல் […]

சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வந்தவுடன் பலரும் முதலில் முயற்சிப்பது வீட்டு வைத்தியங்களைத்தான். ஆனால் மிளகு ரசம், கோழி சூப் போன்ற பாரம்பரிய உணவுகள் உண்மையிலேயே நோயைக் குணப்படுத்துமா அல்லது அது ஒரு நம்பிக்கை மட்டுமா என்ற கேள்வி பலருக்கும் உண்டு. சளி சுமார் 200-க்கும் மேற்பட்ட வைரஸ்களால் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் வைரஸ்கள் உருமாற்றம் அடைவதால், சளி மீண்டும் மீண்டும் வரும் வாய்ப்பு உள்ளது. சரியான ஊட்டச்சத்து […]

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், 2025-2026 கல்வியாண்டிற்கான அர்ச்சகர், ஓதுவார், வேதாகம மற்றும் தமிழ் இசைப் பயிற்சி நிலையங்களுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்தப் பயிற்சி நிலையங்கள், ஆன்மிகப் பணிகளில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. அர்ச்சகர் பயிற்சி : பயிற்சி காலம்: 1 வருடம் கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: […]

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான துரைமுருகன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் மிக முக்கியமான பதவியை வகித்து வருகிறார். கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருக்கும் இவர், கடந்த 2006 முதல் 2011 வரையிலான கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். 2007 முதல் 2009 வரையிலான […]