தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில், மாநில அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இலவசப் பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை தாண்டி, பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) மற்றும் பெண் தொழில்முனைவோர் அதிகாரம் அளிக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தகுதியுள்ள […]

இந்தியாவின் போக்குவரத்து முதுகெலும்பாக திகழும் ரயில்வே துறையில், சுமார் 7,300-க்கும் மேற்பட்ட நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலையமும் ஒரு தனித்துவமான பெயரோடு அடையாளப்படுத்தப்படும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் ஒரு ரயில் நிலையம் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவிதப் பெயரும் இல்லாமல் இயங்கி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிராமங்களுக்கு இடையே மூண்ட பெயர் யுத்தம் : மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் நகரிலிருந்து சுமார் 35 கி.மீ […]

கர்நாடக மாநிலம் விஜயநகர மாவட்டம் கோட்டூர் பகுதியில், சொத்து மற்றும் பணத்திற்காக பெற்ற தாய், தந்தை மற்றும் உடன்பிறந்த தங்கையையே இளைஞர் ஒருவன் படுகொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கோட்டூரை சேர்ந்த பீமராஜ் – ஜெயலட்சுமி தம்பதியினருக்கு 27 வயதில் அக்ஷய் என்ற மகனும், அமிர்தா என்ற மகளும் இருந்தனர். சமீபத்தில் பீமராஜ் தனது சொத்து ஒன்றை விற்றதன் மூலம் சுமார் 1.2 கோடி […]

டெல்லியில், தந்தை என்ற உறவுக்கே களங்கம் விளைவிக்கும் வகையில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர சம்பவம் நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பஹர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த கௌரவ் குமார் என்பவர், தனது 14 வயது மகளையே பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று கௌரவ் குமாரின் மனைவி தனது சொந்த ஊரான பீகாருக்குச் சென்றிருந்த நிலையில், கௌரவ் தனது 14 மற்றும் 8 வயதுடைய இரு […]

இந்தியாவில் இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு மிக முக்கிய காரணமாக உடல் பருமன் பார்க்கப்படுகிறது. இணையத்தில் கொட்டிக்கிடக்கும் எண்ணற்ற எடை குறைப்பு முறைகளுக்கு மத்தியில், சாமானியர்களுக்கும் சாத்தியமான ஒரு எளிய மந்திரமாக நடைப்பயிற்சி திகழ்கிறது. எந்தவித இயந்திரங்களும் தேவையின்றி, எப்போது வேண்டுமானாலும் செய்யக்கூடிய இந்தப் பயிற்சி, உடல் ஆரோக்கியத்தில் நீண்டகால மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. ஒருவர் தனது உடல் எடையில் ஒரு கிலோவை குறைக்க வேண்டுமெனில், […]

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு விசித்திரமான சூழல் பாமகவுக்குள் உருவாகியுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான ‘ஈகோ’ மோதல், ஒரு அரசியல் கட்சியின் பிளவாக உருவெடுத்துள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட கருத்து வேறுபாட்டால், வரும் சட்டமன்ற தேர்தலில் இருவரும் இருவேறு துருவங்களாக களம் காணும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தனது […]

மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வந்த நீண்ட கால அரசியல் தேக்கநிலை முடிவுக்கு வந்துள்ளது. வன்முறையால் தத்தளித்த அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டு, புதிய அரசு அமைவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இனக்கலவரம் மற்றும் நிர்வாக சிக்கல்களுக்குப் பிறகு, மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அரியணையில் ஏறுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர்களிடையே வெடித்த கலவரம் இந்தியாவையே […]

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகின்றன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) டி.டி.வி. தினகரன் இணைந்தது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது. இந்த இணைப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “சசிகலாவும் எங்களது கூட்டணிக்குத் தனது ஆதரவை வழங்குவார்” என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். தினகரனின் இந்த கருத்து, அதிமுகவில் […]

தமிழ்நாட்டில் வீடற்ற ஏழை, எளிய மக்களின் நீண்டகால கனவை நனவாக்கும் வகையில், அரசுக்கு சொந்தமான ஆட்சேபனையற்ற நிலங்களில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. விளிம்புநிலை மக்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதையும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிலையான இருப்பிடத்தை அமைத்துக் கொடுப்பதையும் இலக்காக கொண்டு வருவாய்த் துறை மூலம் இந்த நில ஒதுக்கீடு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தகுதியான நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குச் […]

தமிழக அரசியல் களத்தில் ஓ.பன்னீர்செல்வம் எடுத்து வரும் மௌனமான நிலைப்பாடு, அவரது கூடாரத்தையே காலி செய்யும் நிலைக்குத் தள்ளியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கிய பயணத்தில், ஓபிஎஸ் இன்னும் தனது அரசியல் வியூகத்தையோ அல்லது தேர்தல் நிலைப்பாட்டையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், ஓபிஎஸ்-இன் […]