இன்றைய டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அதன் பாதுகாப்பும் முக்கியமானது. பெரும்பாலான பணப்புழக்கங்களும், ஆவணப் பரிமாற்றங்களும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூழலில், இ-மெயில் சேவைகளின் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் கூகுளின் ஜிமெயில் சேவைக்கு சமீபத்தில் ஹேக்கிங் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அனைத்து ஜிமெயில் பயனர்களும் தங்களது கணக்குகளின் […]

மீன்கள், இயற்கையின் ஊட்டச்சத்து களஞ்சியமாக விளங்குகின்றன. அவற்றில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதய ஆரோக்கியம், மூளை வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த உடல்நலம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் மீன்களின் பங்கு முக்கியமானது. இதன் காரணமாக, உணவுக் கட்டமைப்பில் மீன்கள் வாரத்திற்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று முறை சேர்க்கப்பட வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், சில முக்கிய அம்சங்களை கருத்தில் கொள்ள […]

கோவிலுக்குச் சென்று இறைவனை தரிசிக்கும் செயலுக்கு பின், ஆலயத்தையே சுற்றி வலம் வருவது, ஆழமான ஆன்மிக செயலாகத் திகழ்கிறது. பலர் அதை ஒரு பழக்கத்துக்காக மட்டும் செய்வதாக நினைத்தாலும், அதில் மறைந்திருக்கும் ஆழமான அர்த்தங்களைப் புரிந்து கொள்ளும் போது, இந்த நடை, மனதில் ஏற்படும் மாற்றத்தையும், வாழ்வில் ஏற்படும் நலன்களையும் நம்பத் தக்கதாகவே தெரிகிறது. ஒவ்வொரு சுற்றும் ஒரு பிரார்த்தனையாக மாறுகிறது. ஒவ்வொரு அடியிலும் பக்தி நிறைந்த பயணமாக அந்த […]

ஒருவரின் வாழ்வில் பல்வேறு தெய்வங்களை நாம் காணலாம். குலதெய்வம், இஷ்டதெய்வம், வழிபாடு தெய்வம், மந்திர தெய்வம் என ஒவ்வொன்றும் தனித்தனி பங்களிப்பை வழங்கினாலும், அதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் குலதெய்வத்திற்கு தான் வழங்கப்படுகிறது. காரணம், இது யாரும் உருவாக்காத, வம்ச பரம்பரையாக வழிநடத்தப்படும் ஒரு தெய்வ வழிபாடாகும். பழமையான குடும்ப மரபுகளில், பண்டைய காலங்களில் வாழ்ந்த முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் குலதெய்வமாக மாறுகிறது. இந்த வழிபாடு வழியாக, ஒரு குடும்பத்தின் எல்லா […]

வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி இளம்பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் மோறடாபாத் நகரத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி, போலியான வேலை வாய்ப்புகளை முன்னிறுத்தி, இளம் பெண்களை கடத்தும் சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பல், வேலை தேடிவரும் பெண்களை குறிவைத்து, அவர்களை வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பாதிக்கப்பட்ட பெண்களில் 3 பேரும் உத்தரப்பிரதேசம் மற்றும் […]

தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 25 வயது இளைஞரை அவரது நண்பனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குபேரபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன். இவருக்கு 25 வயது. அதே பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இருவருமே சிறுவதில் இருந்து நெங்கிய நண்பர்கள். இந்நிலையில், சுதாகர் மூலம் நவநீதனுக்கு அஜித் (29) என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அஜித் தனது மனைவி மேகவர்ஷினியுடன் அதே பகுதியில் […]

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆண்டிவேலு (42), தனது முதல் மனைவி செல்வராணி இறந்த பிறகு ஆனந்தராணி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களை ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தகராறுகளுக்கு மத்தியில், ஆண்டிவேலுவுக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருந்துள்ளன. குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்டு, சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். சமீபத்தில் […]

உணவு என்பது பசிக்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உணவு முறைகள் தவறாக இருந்தால், அது தீமைகளை உண்டாக்கும். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம், இது தொடர்பான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், முழுமையாக சமைக்கப்படாத பன்றி இறைச்சியை உண்ணும் பழக்கத்தில் இருந்துள்ளார். பனியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியையும், மென்மையாக சமைக்கப்பட்ட இறைச்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் கடுமையான தலைவலியால் அவதிப்படத் […]

தமிழ்நாட்டில் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை அரசு வழங்கி வருகிறது. திண்டுக்கலில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் 2.20 கோடியே மேற்பட்ட குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ள நிலையில், அனைத்தும் ஒரே வகையானது அல்ல. பொதுமக்களின் பொருளாதார நிலையை பொருத்து, ஐந்து வகையான ரேஷன் […]

தெலங்கானா மாநிலம் ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சைலம். இவர், கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ராவணி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இருவருக்கும் ஆரம்பத்தில் தொலைபேசி வழியாக ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், ஸ்ராவணிக்கு அவரது அக்கா கணவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியதால், கணவரையும் குழந்தைகளையும் விட்டு விட்டு அவருடன் சேர்ந்து சென்றுவிட்டார். ஒரு […]