கிருஷ்ணகிரி மாவட்ட பாமக இளைஞர் அணி துணை செயலாளராக பதவி வகித்து வந்தவர் R.அசோகன். இவர் தற்போது பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்கூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் முன்னிலையில், R.அசோகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்து கொண்டனர். அவர்களுக்குச் சால்வை மற்றும் இனிப்பு வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிருப்தியில் பாமக நிர்வாகிகள் சமீக நாட்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ், […]

சந்தையில் அரிசி, பருப்பு, கோதுமை ரகங்களின் விலை சீராக நீடிப்பதால், மலிவு விலை விற்பனைக்கான, ‘பாரத் பிராண்டு’ திட்டம் கைவிடப்பட உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 1.78% ஆகக் குறைந்துள்ளதால், பாரத் பிராண்ட் தயாரிப்புகளை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது . நடுத்தர வர்க்கத்தினருக்கு மானிய விலையில் உணவு தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக கடந்த 2023ஆம் ஆண்டு பாரத் பிராண்ட் […]

இந்தியாவை பொறுத்தவரை விவசாய தொழிலில் லாபம் இல்லாத சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. எனவே, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சூரியசக்தி மின் திட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத்தில் டீசலை நீக்குவதற்கான ஆதாரங்களை வழங்கவும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் மழை இல்லாமல் சாகுபடி பாதிக்கப்பட்டாலும், சூரியசக்தி மின்சாரம் மூலம் […]

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது லட்டு தான். திருப்பதி லட்டு அந்தளவுக்கு மக்களிடையே பிரபலம். இதற்கிடையே, கடந்த 2024இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவி ஏற்ற சில மாதங்களிலேயே லட்டு குறித்து பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்தபோது திருப்பதி கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறினார். […]

இந்திய விமான நிலையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் : AAI Cargo Logistics & Allied Services Company Ltd (AAICLAS) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 396 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Security Screener (Fresher), Assistant (Security) கல்வித் […]

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் திரையரங்குகளில் நேற்று வெளியானது. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆனால், இப்படம் படுதோல்வியை சந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் தனது பங்கிற்கு தக் லைஃப் படத்தை வைத்து செய்துள்ளார். இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அவர், “முதலில் இந்தப் படத்திற்கு தக் லைஃப் என்று பெயர் […]

உத்தரப்பிரதேச மாநிலம் போலீஸ் ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கி வசித்து வந்த தம்பதி, அலம்பாக் காவல்நிலையத்தில் தனது 3 வயது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகாரளித்தனர். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்தனர். மேலும், குற்றவாளி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. விசாரணையின் ஒருபகுதியாக மெட்ரோ ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த […]

மறைந்த நடிகர் ராஜேஷின் மரணம் குறித்து சோஷியல் மீடியாவில் பரவி வரும் வதந்திகளுக்கு, நடிகை வடிவுக்கரசி விளக்கம் கொடுத்துள்ளார். மறைந்த நடிகர் ராஜேஷூக்கு பழக்கமான சித்த டாக்டர் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது, ராஜேஷிடம் பேசிவிட்டு தான் போவாரம். சம்பவத்தன்றும் அப்படித்தான் யதார்த்தமாக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ராஜேஷுக்கு மூச்சுவிட சிரமப்படுவதை கவனித்துள்ளர். பின்னர், நாடி பிடித்து பார்த்துவிட்டு, பல்ஸ் குறைவது கண்டு, ஆம்புலன்ஸை வரசொல்லுமாறு ராஜேஷின் மகனிடம் கூறியிருக்கிறார். […]

நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழாவை தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், எம்.எல்.ஏ. வேல்முருகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் முஸ்தபா எழுதியுள்ள கடிதத்தில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அவரது ரசிகர் மன்றம் சார்பில், பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் […]

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று, பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை கொடுத்தது. இதையடுத்து, தடுப்பூசி செலுத்திய பிறகும், முழு ஊரடங்கு பிறக்கப்பட்டது. இதனால், கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வரை கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது. இந்நிலையில், நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்கியுள்ளது. நாடு முழுவதும் 5,364 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு […]