தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’நண்பன்’ திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் அம்மாவாகவும், வடசென்னை மற்றும் அசுரன் படத்தில் தனுஷின் அம்மாவாகவும் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை மணிமேகலை. இவர், சென்னை வில்லிவாக்கத்தில் குடியிருந்து வருகிறார். படங்கள் இல்லாத சமயத்தில் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாட்டு சொல்லி கொடுத்து வருகிறார். இந்நிலையில் தான், இவர் வாங்கிய சொந்த காரை ஒருவன் ஏமாற்றி அடமானம் வைத்துவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். […]

தென்னிந்திய திரைப்பட நடிகை அஞ்சு அரவிந்த். இவர் மலையாளம், தமிழ், கன்னட உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழில் ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலம் ஆனார். கடந்த 1996ஆம் ஆண்டு தமிழில் வெளியான பூவே உனக்காக படம், இவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. பின்னர், தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்த நிலையில், அவர் சினிமாவில் பக்கமே வரவில்லை. இதையடுத்து, சினிமாவில் இருந்து முழுவதுமாக […]

சோசியல் மீடியாவில் பிரைவசி பற்றிய கவலைகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் மெட்டா (Meta) மற்றும் யாண்டெக்ஸ் நிறுவனங்கள், பயனர்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை அனுமதியின்றி சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக, ஆண்டிராய்டில் பாதுகாப்பு அமைப்பு காரணமாக, ஒரே மொபைலில் உள்ள மற்ற செயலிகளில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் அந்த […]

நடிகர் விஜய், எப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தாரோ, அப்போதில் இருந்து அவரை சுற்றி பிரச்சனைகள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. கட்சிப் பெயரில் தவறு, சின்னம் சர்ச்சை, அது வெற்றிக்கான பூவே கிடையாது என்று பல கருத்துகள் உலா வந்தன. ஆனால், அதையெல்லாம் விஜய் பெரிதாக கண்டுகொள்ளாமல், தன்னுடைய அரசியல் பணியை தீவிரமாக செய்து வருகிறார். இதற்கிடையே, தவெக-வின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளது. இதற்கு […]

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தற்போது வரை 1.14 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்கும் வகையில், “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை” திட்டத்தை கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி, தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு நேற்று (04.06.2025) முதல் தமிழ்நாடு முழுவதும் 9,000 இடங்களில் சிறப்பு முகாம்கள் […]

இந்தியாவில் ஒரே நாளில் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 564 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,866ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 114 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 112 பேருக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் 106 பேருக்கும் […]

ஜூன் 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வரும் சூழலில், பாமக நிறுவனர் ராமதாஸை சமாதானப்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமகவில் ராமதாஸ் – அன்புமணி இடையேயான மோதல் உச்சகட்டத்தில் இருந்து வருகிறது. அன்புமணி மீது ராமதாஸ் சரமாரியான விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அன்புமணி ராமதாஸ் பாமக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவருக்கே உரிமை என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, […]

2025 ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மேற்படிப்புகளுக்காக நீட் பிஜி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தாண்டுக்கான நீட் பிஜி தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்த தேர்வுகள் 2 ஷிப்ட்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டன. ஆனால், இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், NEET-PG தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த […]

கடந்த சில வாரங்களாகவே பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வருகிறது. இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க நிர்வாகிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. மேலும் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, அன்புமணிக்கு ஆதரவு அதிகமாகவுள்ள பகுதிகளை குறிவைத்து, அங்கிருக்கும் நிர்வாகிகளை ராமதாஸ் மாற்றி வந்ததாக கூறப்பட்டது. […]

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,300-ஐ கடந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால், பாதிக்கப்பட்டு முதியவர், இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தென் மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுவாச பிரச்சனை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்படும் இணைநோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு கொரோனா […]