மாதவிடாய் காலத்திலும் தொடர்ந்து உல்லாசத்திற்கு அழைத்த கள்ளக்காதலனை, கூலிப்படை வைத்து தீர்த்துக் கட்டிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் அரவிந்த். இவருக்கு வயது 29. இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அரவிந்த் – ஜான்சி தம்பதிக்கு சாரிகா (வயது 4) என்ற பெண் […]

பங்களாதேஷை சேர்ந்த 12 சிறுமியை இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே வசாய் நைகாவ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் விபச்சார தொழில் நடப்பதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த போலீசார், மாற்று உடையில் கண்காணித்தனர். பின்னர், அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த கட்டிடத்திற்குள் போலீசார் […]

இலவங்கப்பட்டை என்பது நறுமண மூலிகைகளில் முக்கியமான ஒன்றாகும். இது இந்திய பாரம்பரிய சமையலறைகளில் தவறாமல் இடம்பெறும் முக்கிய பொருள் ஆகும். இது உணவுக்கு மணமும், சுவையும் மட்டுமல்லாது, உடல்நலனுக்கும் பலவிதமான நன்மைகளை வழங்குகிறத. இதனால், இலவங்கப்பட்டையை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. * இலவங்கப்பட்டையில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் தன்மை கொண்ட சில இயற்கை சேர்மங்கள் உள்ளன. குறிப்பாக சின்னமால்டிஹைடு போன்றவை டயாபடீசைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. * கொலஸ்ட்ரால் […]

கொரோனா வைரஸ், கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து பரவத் தொடங்கியது. 2020ஆம் ஆண்டில் இந்த வைரஸின் தாக்கம் பரவலாக காணப்பட்டது. அதன் பிறகு பல்வேறு மாறுபட்ட வடிவங்களில் தோன்றி வந்தது. ஒமைக்ரான், டெல்டா போன்ற வகைகள் உலக நாடுகளில் பல கொடிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தான் தற்போது அமெரிக்காவில் XFG என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது மக்கள் […]

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் 47 வயதான பிரமிளா. இவர், கணவர் ராமச்சந்திரனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரை பிரிந்து தனது 3 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வந்துள்ளார். பிரமிளாவின் இளைய மகன் முகில் (19) கடந்த சில மாதங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். மேலும், குடித்துவிட்டு தினமும் வீட்டு தகராறு செய்து […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரண்டு திருமணம் ஆகியும் குழந்தை இல்லாததால், மனைவிகளுடன் தொடர்ந்து சண்டையிட்டு வந்த கணவருக்கு கடைசியில் நேர்ந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண வாழ்க்கை என்பது கணவன் – மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அன்பும் புரிந்துணர்வும் கொண்டு இணைந்த வாழ்க்கை ஆகும். ஏதாவது சிக்கல்கள் வந்தாலும் பொறுமையாக அணுகி, பேசிக்கொண்டு புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், அனைவருக்கும் நினைத்தது போல அமையாது. சிலர் வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தாலும், சிலருக்கு குடும்ப […]

தற்போதைய காலகட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், இதை தவறான நோக்கத்தில் பயன்படுத்தும் மோசடிக் கும்பல்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மோசடிக்காரர்கள், தனிமையில் இருப்பவர்களை குறிவைத்து, டேட்டிங் செயலிகள் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகின்றனர். அந்த வகையில், “கால் பாய் மோசடி” என அழைக்கப்படும் மோசடி முறையானது சென்னையில் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தென் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், வேலைவாய்ப்பு தேடி […]

காலை நேரத்தை ஆரோக்கியமான முறையில் துவங்கினால், நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும். பெரும்பாலானோர் தங்கள் நாளை தேநீர் அல்லது காஃபியுடன் ஆரம்பிப்பது வழக்கமாக இருக்கும். ஆனால், சிறிய ஒரு மாற்றம் கூட உங்கள் உடல்நலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு இளநீர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இது இயற்கையானது, சத்து நிறைந்தது, மேலும் பல நன்மைகளும் கொண்டது. செரிமானம் : இளநீரில் உள்ள இயற்கையான நொதிகள் மற்றும் […]

உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்து புரதம். நமது தசைகள் வளரவும், உடல் நலம் பராமரிக்கவும் புரதம் அவசியம். புரதம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிக்கன் தான். 100 கிராம் சிக்கனில் சுமார் 20 முதல் 25 கிராம் புரதம் உள்ளது. இது உடலை வலிமை படைக்கும் ஊட்டச்சத்து அளிக்கிறது. ஆனால், சிக்கனை விட அதிக புரதம் கொண்ட உணவுகளும் பல உள்ளன. முதலில், சிக்கனை விட மீன்களில் […]

பெற்ற மகளை விபச்சார தொழிலில் ஈடுபடுத்திய தாய் மற்றும் அவரது 3-வது கணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர் 13 வயது மாணவி. இவர், விடுதியில் தங்கி 9ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், பள்ளி விடுமுறையின்போது தனது குடும்பத்தை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை அவரது தாயும், அவரது மூன்றாவது கணவரும் சேர்ந்து […]