ஸ்ரீபெரும்புதூரில் பிளிப்கார்ட் மூலம் ரூ.79ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமரா வாங்கியவருக்கு பார்சலில் 100 ரூபாய் மதிப்புள்ள சொப்பு கார் அனுப்பியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன் (35). ஏ.சி மெக்கானிக்கான இவரது நண்பர் சுரேஷிற்கு ட்ரோன் கேமரா தேவைப்பட்டதால், ஆன்லைனில் தேடியுள்ளார். அப்போது, பிளிப்கார்ட் (Flipkart) செயலியில் 79,064 ரூபாய் மதிப்பில் ட்ரோன் கேமரா ஒன்றை பார்த்து, கிரெடிட் கார்ட் மூலம் பணம் […]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில், தனக்கு மருந்து கொடுங்கள் இல்லை… ஊசிபோடுங்கள்… ஆனால், என்னை எப்படியாவது போட்டியில் ஆடுமளவிற்கு தயார்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி நேற்று ஞாயிற்றுக் கிழமை மாலை ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடி 187 ரன்களை இந்தியாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. பின்னர் […]

இந்தியன் 2 படத்திற்காக தன்னை தயார்படுத்திய பயிற்சியாளருக்கு ரெனால்ட் காரை பரிசாக வழங்கியுள்ளார் கமல்ஹாசன். கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த இந்தியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன பிறகு ‘இந்தியன் 2’ படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிரேன் விபத்து, கொரோனா பரவல், பட்ஜெட் தொடர்பான ஷங்கருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் ஏற்பட்ட பிரச்சனை […]

சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்காது என ஓரளவிற்கு நம்புகிறேன் என முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நீர் நிலைகள் பாதுகாப்பு, முகாம்கள், மீட்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை ஆய்வுப் பணிகள், போர்க்கால அடிப்படையில் பணிகளை நிறைவேற்றுவது குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் முக.ஸ்டாலின், “பள்ளிக் […]

மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் பல இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திரும்பும் வகையில் அமைக்கப்பட்ட ‘கட் அவுட்’ எனும் விளம்பர பேனர்களால், ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, நகரின் எந்த பகுதியிலும், விளம்பர பலகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் […]

ஆன்லைன் ரம்மி அவசர சட்டம், சட்டமன்ற கூட்டம் உள்ளிட்டவை தொடர்பாக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையின் 8-வது கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 7-வது அமைச்சரவை கூட்டம் ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஒரு மாத காலத்திற்குள்ளாக அடுத்த அமைச்சரவைக் கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. முந்தைய அமைச்சரவைக் கூட்டங்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிலையில், […]

”நடிகர்கள் அஜித்-விஜய் ஆகியோரை ஒரே படத்தில் நடிக்க வைத்து திரைப்படம் இயக்க ஆசைப்படுகிறேன்… அதற்கு இருவரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். சென்னை எம்.ஆர்.சி.நகரில் தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட குறும்பட போட்டிக்கான, விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறந்த குறும்படங்களுக்கு இயக்குநர்கள் வசந்த் சாய், வெங்கட் பிரபு ஆகியோர் விருது மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் […]

அதிமுக தலைமை அலுவலகத்தில் சீரமைப்புப் பணிகளை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தால் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டது. இந்நிலையில், சேதமான அலுவலகத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீரமைப்புப் பணிகளை அதிமுகவின் இதர நிர்வாகிகளும் ஆய்வு செய்தனர். ஓ.பன்னீர்செல்வம் ஆட்களால் சேதப்படுத்தப்பட்ட கதவுகளும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. கதவுகளின் பூட்டுகள் […]

’சூர்யா 42’ திரைப்படம் சார்ந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. நடிகர் சூர்யாவின் 42-வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில […]

இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் தாத்தாவும், இசையமைப்பாளரான எஸ்.வி.ரமணன் இன்று காலை காலமானார். தொலைக்காட்சி, வானொலி, விளம்பரம், திரைப்படம் என அனைத்து துறைகளிலும் தடம் பதித்தவர் எஸ்.வி.ரமணன். ரேடியோ விளம்பரங்களில் பல புதுமைகளை புகுத்தியவர். மக்கள் தொடர்பு கலையின் மாண்பாளர் என்று அழைக்கப்படுவர். ஆயிரக்கணக்கான வானொலி விளம்பரங்களுக்கு குரல் கொடுத்துள்ளார் எஸ்.வி.ரமணன். சென்னை ஆர்.ஏ.புரத்தில் வசித்து வந்த இவர், இன்று காலை வயதுமூப்பு காரணமாக காலமானார். எஸ்.வி.ரமணனின் இறுதிச்சடங்கு இன்று மாலை […]