வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் உடல் எடையை குறைத்தால் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என ஜிரோதா நிறுவன சிஇஓ அறிவித்துள்ளார். பணியாளர்களுக்கான புதிய உடற்பயிற்சி சவாலை ஆன்லைன் தரகு நிறுவனமான செரோதா அறிமுகப்படுத்தி உள்ளது. வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களின் ஆரோக்கியம் தொடர்பான நடவடிக்கைகளின் நீண்ட பட்டியலில் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) நிதின் காமத் கூறுகையில், ”வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்களை சுறுசுறுப்புடனும், ஆரோக்கியமாகவும் […]

ஆஸ்திரேலிய அணி வீரர் ஸ்மித், அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பியபோது, ’பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ’அரபிக்குத்து’ பாடல் ஒலிக்கப்பட்டதால், இந்திய அணியின் ரசிகர்கள் ஆரவாரமாக சத்தம் போட்டனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 3-வது மற்றும் கடைசிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க […]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை அதிரடி ஆட்டத்தால் தன் வசப்படுத்திக் கொண்டது இந்திய அணி. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் வரிந்து கட்டிக் கொண்டு […]

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை வென்றதை அடுத்து பாகிஸ்தான் அணியின் உலக சாதனையை முறியடித்து இந்தியா புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் க்ரீன் மற்றும் இறுதியில் […]

ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்ற பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொறுப்பேற்ற நாள் முதல் அந்த துறையில் புது புது மாற்றங்களும், அதிரடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் இடம் மாறுதல்கள் அனைத்தும் கவுன்சிலிங் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது. இந்நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை மாற்ற பள்ளிக்கல்வித்துறை இணை […]

சிஎஸ்கே கேப்டன் தோனி, இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, திடீரென தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், இன்று மதியம் 2 மணிக்கு உங்கள் அனைவருடனும் சில உற்சாகமான தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருந்தார். பேஸ்புக்கில் நேரலையில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், ஏதோ புதிய அறிவிப்பை வெளியிடப்போகிறார் […]

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு நேற்று திடீரென சுவாசப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு குறைந்தபட்ச செயற்கை சுவாசம் மூலம் மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் […]

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மெட்ரோ ரயிலில் சிறப்பு கட்டண சலுகை வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேசமயம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவாயை ஈட்டுவதற்காக மெட்ரோ நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ரயில் நிலையம் அருகில் உள்ள கல்லூரி மாணவர்கள் முழுமையாக பயனடைய மெட்ரோ ரயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து […]

விளம்பரத்திற்காக தனக்கு தானே பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொண்டாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார். கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜக நிர்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட  பல பகுதிகளிலும் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த சூழ்நிலையில், சம்பவங்கள் நடைபெற்ற இடங்களை நேரில் ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு […]

மதுரையில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து, அதை ஆண் நண்பருக்கு அனுப்பிய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது 31). இவர் MBBS படித்து முடித்துவிட்டு கமுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். ஆசிக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், இவரது கிளினிக் அருகேயுள்ள காளீஸ்வரி என்பவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, பி.எட்., படித்து […]