கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், நான் அரசியலில் இருந்து விலக தயார் என செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார். வரும் 29ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் […]
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக விருதுநகர் மாவட்டத்தில் கேன்களில் பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கோவை, பொள்ளாச்சி, மதுரை, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பு, பாஜக நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த இரண்டு தினங்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து உடனே இதை […]
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் தன்னுடைய ஸ்கூட்டருக்கு பெட்ரோல் போடச் சென்ற ஒருவர் பங்க் ஊழியருக்கு ரூ.550 கொடுப்பதற்கு பதிலாக தவறுதலாக ரூ.55,053 செலுத்தியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஷெல் பெட்ரோல் பங்கில் அந்த நபர் தன்னுடைய ஸ்கூட்டருக்கு டேங்க் ஃபுல் செய்திருக்கிறார். அதற்கு பில் ரூ.550 வந்திருக்கிறது. அந்த வாடிக்கையாளரும் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயற்சித்துள்ளார். அப்போது, QR குளறுபடியால் ரூ.550-க்கு பதில் ரூ.55,053 என தவறுதலாக […]
கார் ஓட்ட கற்றுக் கொண்டிருந்த 40 வயதான பெண் ஒருவர், பிரேக் போடுவதற்கு பதிலாக க்ளட்சை வேகமாக அழுத்தியதால், 19 வயது டெலிவரி ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். இரவுப் பகல், வெயில், மழை என எந்த சூழலையும் பாராமல் மக்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு சேர்க்கும் வேலைகளில் டெலிவரி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் கஸ்டமர்கள் வாயிலாக சந்திக்கும் இடர்பாடுகள் பலவும் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது. […]
கியூட் பிஜி தேர்வு முடிவுகள் நாளை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான க்யூட் (CUET UG) எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் பிசினஸ் மேனேஜ்மென்ட் துறைகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர மாணவர்கள் கட்டாயம் இந்த தேர்வை எழுதி […]
மாணவர்களுக்கு இடையேயான சண்டையை தடுத்த பள்ளி முதல்வரை, மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரின் பள்ளியொன்றில் 12ஆம் வகுப்பு படிக்கும் சக மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா, சண்டையிட்டுக் கொண்டிருந்த மாணவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அப்போது, பிளஸ்2 மாணவன் ஒருவனைப் பள்ளி முதல்வர் திட்டியதாகச் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த […]
ஜுலன் கோஸ்வாமி, மகளிர் கிரிக்கெட் ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையுடன் விடைபெற்றார். புகழ்பெற்ற ஜூலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது பெயருக்கு மேலும் ஒரு மைல்கல்லைப் பதித்துள்ளார். ஜூலன், சனிக்கிழமை அன்று பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 பந்துகளை வீசிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெயரை பெற்றார். 39 வயதான இவர், 204 ஒருநாள் போட்டிகளில் 10,005 பந்துகளை […]
பருவநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”சிவிங்கிகள் இந்தியாவிற்கு திரும்பி வந்தது குறித்து நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியர்கள் பெருமையுடன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சிவிங்கிகளை கண்காணிக்கவும், பார்வையாளர்கள் பார்வையிடவும் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பெயர் வைப்பது குறித்து மக்கள் தங்களின் எண்ணங்களை தெரிவிக்கலாம். […]
பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை திடீரென உயர்த்தி, இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக ஹீரோ மோட்டாகார்ப் (Hero moto corp) நிறுவனம் அறிவித்துள்ளது. உதிரி பாகங்களின் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டாகார்ப் (Hero moto corp) நிறுவனம், செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தங்களது பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை ரூ.1000 வரை உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு மாடல்கள் […]
ஆஸ்கர் விருது பெற்ற நடிகை லூயிஸ் பிளெட்சர், உடல்நலக் குறைவு காரணமாக பிரான்சில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது (88). நடிகை லூயிஸ் பிளெட்சரின் இளமைக் காலம் அத்தனை வசந்தமானதாக இருக்கவில்லை. அவரது பெற்றோர்களுக்கு காது கேளாத தன்மை இருந்தது. 4 குழந்தைகளில் இரண்டாவதாக ஜூலை 22, 1934ஆம் ஆண்டு லூயிஸ் பிளெட்சர் பிறந்தார். 1958ஆம் ஆண்டு தொலைக்காட்சித் தொடர் மூலமாக தனது நடிப்பு பயணத்தைத் துவங்கிய […]