Me Too குறித்து புகார் சொன்னதால் என்னை பலமுறை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாக விஷால் பட நடிகை கூறியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் நடித்துள்ளார். பின்னர், இவர் பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். நடிகை தனுஸ்ரீ தத்தா, வில்லன் நடிகர் நானா படேகர் […]

மாவீரன், கேப்டன் மில்லர் படத்தை அதிக தொகைக்கு பிரபல ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது. இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் தனுஷ் நடிக்கிறார். அருண் மாதேஸ்வர்ன் இதற்கு முன்பு ஆரண்ய காண்டம், ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இவரின் திரைப்படங்கள் தனித்துவமாக இருப்பதால், ரசிகர்களின் கவனத்தை பெற்றது. தற்போது தனுஷை வைத்து அருண் மாதேஸ்வரன் இயக்கும் ’கேப்டன் மில்லர்’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு […]

குழந்தை தந்தையிடம் வளர்வது சட்டவிரோதம் இல்லை என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ஜெயசித்ரா அமிர்தநாயகம் என்பவர், தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு ஒரு 10 வயது மகன் இருக்கிறான். தம்பதிகள் பிரிந்ததால் மகன், தந்தையோடு வசித்து வருகிறான். இந்நிலையில் ஜெயசித்ரா, சமீபத்தில் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘எனது 10 வயது மகனைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்த பாளையங்கோட்டை அனைத்து மகளிர் […]

திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்தின் மதிப்பை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி வெளியிட்டுள்ளார். திருமலை – திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டமானது, தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான சொத்துகள் குறித்து இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. திருமலை – திருப்பதி தேவஸ்தானத்துக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 960 […]

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு நடிகர் தனுஷ் ரூ.1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். நகைச்சுவை நடிகர் போண்டா மணி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் அவருக்கு உதவித் தேவைப்படுவதாக நடிகரும் போண்டா மணியின் நண்பருமான பெஞ்சமின், […]

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்திற்கு ’துணிவு’ என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியது. இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் இப்படத்தின் படப்பிடிப்புக்காக பாங்காக் சென்ற […]

ரவீந்திர ஜடேஜா முன்பு குத்தாட்டம் போட்டு ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் ஷிகர் தவான் பகிர்ந்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் 16ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில், காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா இடம்பெறவில்லை. அதேபோல், ஷிகர் தவானும் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இல்லை. தற்போது, ரவீந்திர […]

இந்தியா – ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற இருக்கிறது. 1-1 என்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளதால், தொடரின் டிசைடரான இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரின் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணியை, 2-வது போட்டியில் பதிலடி […]

முதல்வர் முக.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பின்புலமாக இருப்பதாக தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வர் முக.ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில், சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் […]

ஏழாவது திருமணத்திற்கு மணமேடைக்கு வந்த மோசடி பெண், ஆறாவது கணவரின் புத்திசாலித்தனத்தால் போலீசில் சிக்கினார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தனபால் (35) என்பவருக்கும், மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் கடந்த 7ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தை, மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற தரகர் ஏற்பாடு செய்திருந்தார். திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில், பெண்ணின் அக்கா, மாமா ஆகிய இருவர் மட்டும் வந்துள்ளனர். அவர்களும், புரோக்கரும் திருமணம் முடிந்த […]