இளம்பெண் ஒருவர் தனது 9 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் அப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கள்ளக்குறிச்சி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பரமேஸ்வரி என்கிற பெண்ணுக்கும், அவரது கணவரான சுப்ரமணியன் என்பவருக்கும் குடும்பச் சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் […]

சிறுமியை பலாத்காரம் செய்து கையில் 100 ரூபாயும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் கொடுத்து அனுப்பிய உறவினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, 100 ரூபாய் பணத்தையும், ஒரு சிப்ஸ் பாக்கெட்டையும் அந்த சிறுமியின் கையில் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய காமக்கொடூரனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது அவரது நெருங்கிய […]

“பாஜக அலுவலகம் மற்றும் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசி எங்கள் மன தைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்து விட வேண்டாம்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதி வி.கே.மேனன் சாலையில் நேற்றிரவு பைக்கில் வந்த இருவர் அப்பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் நோக்கி பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச்சென்றனர். பெட்ரோல் குண்டு வெடிக்காததால், அசம்பாவித சம்பவம் எதுவும் நிகழவில்லை. பாஜக […]

நாடு முழுவதும் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் மீது என்ஐஏ நடத்திய சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று எஸ்டிபிஐ அமைப்பு சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அமலாக்கத் துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், சில முக்கிய நிர்வாகிகளையும் கைது செய்தனர். இதனைக் கண்டித்து கேரளாவில் […]

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கி இந்த மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 19ஆம் […]

மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2012ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ’3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து ’வை ராஜா வை’ படத்தையும் இயக்கினார். இதில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். அதன் பிறகு பயணி என்ற இசை […]

காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் இந்திய அணியில் விளையாடாமல் இருந்த நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா, முழு உடல் தகுதியடைந்து தற்போது மீண்டும் அணிக்கு திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ரா அணியில் இடம்பெறாமல் இருந்ததால் டெத் ஓவர்களில் மற்ற பவுலர்கள் ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். ஆசியக் கோப்பையிலிருந்து கடைசியாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிவரை பந்துவீச்சு சரியில்லாமல் போனதாலேயே இந்தியா படுதோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால், […]

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறார். மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 1-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, […]

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். சிறப்பான வரவேற்புக்குப்பின் முருகனை வழிபட்ட அவர், கோவில் பிரகாரத்தில் உள்ள சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபாட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”நான் தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், மாமன்னன், சந்திரமுகி […]

’ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துகள் இல்லை என்று சீட்டு எழுதி கொடுக்கக் கூடாது’ என அறிவுறுத்தி உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் புகழ்பெற்ற மருத்துவமனையான ஜிப்மரில் மருந்துகள் தட்டுப்பாடு என செய்திகள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என புகார்கள் வந்ததை அடுத்து ஆலோசனை நடத்தினோம். […]